Monday 31 March 2014 | By: Menaga Sathia

காரைக்குடி நண்டு மசாலா /Karaikudi Crab Masala


ஆஹா என்ன ருசியில் பார்த்து செய்தது..

தே.பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு - 1 கிலோ
நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
நறுக்கிய தக்காளி -1 பெரியது
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில்  வதக்கி அரைக்க

தேங்காய்த்துறுவல் -1/4 கப்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் + சோம்பு = தலா 3/4 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்

தாளிக்க

சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
பட்டை -1 சிறுதுண்டு
பிரியாணி இலை - 2

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+தக்காளி+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* நண்டு+தூள் வகைகள் சேர்த்து வதக்கி 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*நன்றாக  கொதித்ததும் புளியை 1/2 கப் அளவில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
*பின் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

Thursday 27 March 2014 | By: Menaga Sathia

முருங்கைக்காய் கத்திரிக்கா மாங்கா சாம்பார் /Drumstick Brinjal Mango Sambar


*மாங்காயை கடைசியாக தான் சேர்க்கவேண்டும்.முதலிலேயே சேர்த்தால் குழைந்துவிடும்.

*மாங்காயின் புளிப்பிற்கேற்ப புளிகரைசலை சேர்க்கவும்.

*நான் பெரிய கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன்.சிறிய வயலட் கத்திரிக்காய்  2 சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நறுக்கிய தக்காளி -1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி -2 டீஸ்பூன்
முருங்கைகாய் -1
கத்திரிக்காய் - 1 சிறியது
மாங்காய் - 1
புளிகரைசல் -1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
வடகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*முருங்கை+கத்திரிக்காய் இவற்றை நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*பருப்பை மஞ்சள்தூள்+சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின்  தக்காளி+உப்பு  சேர்த்து குழைய வதக்கவும்.
*கத்திரிக்காய்+முருங்கை சேர்த்து வதக்கி 1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் சாம்பார் பொடி+புளிகரைசல் செர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் மாங்காய் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வேகவைத்த பருப்பினை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.




This is off to Priya's Vegan Thursday
print this page
Thursday 20 March 2014 | By: Menaga Sathia

சௌ சௌ கூட்டு / Chayote (Chow Chow ) Kootu | Kootu Recipes



தே.பொருட்கள்

கடலைப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
சௌ சௌ - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1  1/2 டீஸ்பூன்
கடுகு + உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சோம்புப்பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கடலைப்பருப்பை மஞ்சள்தூள்+1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு  குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.
*சௌ சௌ தோல் சீவி துண்டுகளாகவும்.பருப்பு வெந்ததும் நறுக்கிய காய்+வெங்காயம் +பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் குக்கரில் 1 அல்லது 2 விசில் வரை வேகவைக்கவும்.
*கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து  வேகவைத்த பருப்பு கய் கலவை சேர்க்கவும்.
*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
பி.கு
*சௌ சௌ தோலினை தூக்கி போடாமல் துவையல் செய்யலாம்.
Thursday 13 March 2014 | By: Menaga Sathia

அகத்தி கீரை சாம்பார் / Agathi Keerai Sambhar


*இந்த கீரையின் ஸ்பெஷல் காய்ந்த பிறகும் சமைக்கலாம். 

*கொழுந்தாக இருக்கும் அகத்தி கீரையை அப்படியே காயவைத்தால் நன்கு உலர்ந்துவிடும்,அதனை  சாம்பார் மற்றும் தண்ணீசாறு செய்யலாம்.

*ப்ரெஷ் கீரையாக இருந்தால் மட்டும் வதக்கி சேர்க்கவும்,காய்ந்த கீரையாக இருந்தால் சாம்பார் கொதிக்கும் போது கடைசியாக சேர்க்கலாம்.

*கீரை சாம்பாரில் மட்டும் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்க கூடாது,சேர்த்தால் சாம்பாரின் சுவை மாறிவிடும்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
புளிகரைசல் - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் -2
காய்ந்த அகத்தி கீரை - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

வடகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை
*பருப்பை மஞ்சள்தூள்+1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் வேகவைத்த துவரம்பருப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*கீரையை  நன்கு அலசி நீரை வடிகட்டவும்.
*சாம்பார் பொடி வாசனை போனதும் புளிகரைசல் +உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பின் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.
*எண்ணெய் காயத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
பி.கு

*ப்ரெஷ் கீரையாக இருந்தால் 1/2 கப்பினை வெங்காயம் தக்காளி வதக்கும் போதே வதக்கி செய்யவும்.
Thursday 6 March 2014 | By: Menaga Sathia

கொங்கு ஸ்டைல் வெஜ் தாளி /Kongu Style Veg Thali | Thali Recipe





இதில் நான் சமைத்திருப்பது பிரபலமான கொங்கு ஸ்பெஷல்

அரிசியும் பருப்பு சாதம்
வெண்டைக்காய் காரகுழம்பு
கொள்ளு ரசம்
கேரட்  பீன்ஸ் பொரியல்
காரட் அல்வா
வாழைக்காய் சிப்ஸ் மற்றும்
மெது வடை

வெண்டைக்காய்  காரகுழம்பு - வத்தல் போட்டு தாளிப்பதற்கு பதில் வெங்காயம் போட்டு வதக்கும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கினால் வெண்டைக்காய் குழம்பு ரெடி!!

அனைத்து சமையல்களையும் செய்து முடிக்க 2 மணிநேரமே ஆனது. வேலையை இன்னும் சுலபமாக முடிக்க  கேரட் அல்வா மற்றும் சிப்ஸ் முதல்நாளே செய்துவைக்கலாம்.

அரிசியும் பருப்பு சாதம்

தே.பொருட்கள்

பொன்னி அரிசி -1/2 கப்
துவரம்பருப்பு -1/8 கப்
நிளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 1
பூண்டுப்பல் -8
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1/2 டீஸ்பூன்
நெய் -1/2 டீஸ்பூன்
நீர் - 1 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*அரிசி+பருப்பை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு+சாம்பார்பொடி+மஞ்சள்தூள்+1 1/4 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*இந்த சாதம் குழையாமல் உதிரியாக இருக்கவேண்டும்.

Tuesday 4 March 2014 | By: Menaga Sathia

வாழைப்பூ சுத்தம் செய்வது எப்படி?? /How To Clean Banana Blossom??




தே.பொருட்கள்

வாழைப்பூ -  1
மோர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்/ உப்பு  கையில் தடவுவதற்கு

செய்முறை

* கையில் எண்ணெய்/உப்பு தடவி வாழைப்பூவின் ஒவ்வொரு இதழாக பிரிக்கவும்.

*பூவினை மொத்தமாக‌ கையில் எடுத்து முனையில் கையால் தீட்டினால் பூக்கள் மலரும்.

*ஒவ்வொரு பூக்களிலும் நரம்பு இருக்கும்,(படம்:3)அதனை எடுத்துவிடவும்.


*ரப்பர் போல இருப்பதையும்(படம்:4)விரும்பினால் எடுத்துவிடலாம்.(அம்மா அதனை எடுக்கமாட்டாங்க,அதனால் நானும் அதனை சேர்த்தே அரிந்து சமைப்பேன்)



*பொடியாக அரிந்து மோர் கலந்து நீரில் போட்டு பயன்படுத்தலாம்.

பி.கு

*பூ வெள்ளை கலர் இதழ் வரும்வரை தான் நரம்பு எடுப்பேன்.வெள்ளை கலரில் இதழ் வந்த பின் அதனை அப்படியே அரிந்துவிடுவேன்.

*கையில் எண்ணெய்/உப்பு தடவுவதால் கையில் கறை படியாது.

*மோர் கலந்த நீரில் போடுவதால் பூ கறுக்காது.

Saturday 1 March 2014 | By: Menaga Sathia

பூரி /Poori | 7 Days Breakfast Menu # 7






தே.பொருட்கள்

கோதுமைமாவு - 2 கப்
ரவை - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
*பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர மீதி பொருட்களை ஒன்றாக கலந்து நேர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*10 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு சம உருண்டைகளாக எடுத்து  மெலிதாக இல்லாமலும் தடிமனமாக இல்லாமலும் தேய்க்க வேண்டும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். சிறு உருண்டை மாவை எடுத்து எண்ணெயில் போட்ட உடனே மேலே மிதந்து வந்தால் அதுவே சரியான பதம்
*உடனே தேய்த்த மாவை எடுத்து எண்ணெயில் போட்டதும் மேலே உப்பி வரும்.

*மறுபுறம் மெதுவாக திருப்பி வேக வைத்து எடுக்கவும்.
பி.கு

*எண்ணெய் நன்கு காயவில்லையெனில் பூரி எண்ணெய் குடித்து விடும்.

*பூரியை மெலிதாக தேய்த்தால் மொறுமொறுப்பாகிவிடும்,தடிமனமாக தேய்த்தால் ரப்பர் போல இருக்கும்.

* பூரிக்கு மாவு பிசைந்து 10 நிமிடம் ஆனதும் சுட்டெடுக்கவும் இல்லையெனில் பூரி எண்ணெய் குடிக்கும்.

*சர்க்கரை சேர்ப்பது பூரி பொன்னிறமாக வருவதற்க்கும் மற்றும் ரவை சேர்ப்பது பூரி உப்பலாக வருவதற்கும் சேர்க்கபடுகிறது.
print this page
01 09 10