Wednesday 19 October 2011 | By: Menaga Sathia

காரா பூந்தி / Kara Bhoondhi

தே.பொருட்கள்:

கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை,முந்திரிவேர்க்கடலை- சிறிதளவு
நசுக்கிய பூண்டுப்பல் ‍-  2
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் கடலைமாவு+அரிசி மாவு உப்பு+மஞ்சள்தூள்+பேக்கிங் சோடா+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான நீர் விட்டு கரைக்கவும்.



*பூந்தியாக விழும் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.



*எண்ணெய் காயவைத்து பூந்தி அல்லது கண்கரண்டியில் மாவை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி பொரித்தெடுக்கவும்.


*ஒவ்வொரு முறையும் பூந்தி ஊற்றியதும் பேப்பரால் கண்கரண்டியை நன்கு துடைக்கவும்.




*கறிவேப்பிலை+வேர்க்க‌டலை+முந்திரி+பூண்டுப்பல் இவற்றை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து பூந்தியில் கலந்து பரிமாறவும்.

பி.கு
* பூந்தியை தேய்ப்பதற்க்கு முன் சிறிய கரண்டியின் பின்புறத்தை மாவில் நனைத்து எண்ணெயில் ஊற்றவும்,அதில் வால் போல நீண்டு வந்தால் மாவு பதம் கெட்டியாக இருக்கிறது என்று அர்த்தம்.1 டேபிள்ஸ்பூன் அளவு நீர் ஊற்றி கரைக்கவும்.

*பூந்தி அமுங்கியது போல் வந்தால் மாவு பதம் நீர்க்க இருக்கிறது என்று அர்த்தம்.1 டீஸ்பூன் அளவு கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

*விரும்பினால் மாவு கரைக்கும் போது மிளகுத்தூளை சேர்த்துக் கொண்டு மிளகாய்த்தூளை தவிர்க்கலாம்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

சி.பி.செந்தில்குமார் said...

கண் கரண்டின்னா என்ன? பூரி சுட யூஸ் பண்ற எண்ணெய் வடி கட்டும் கரண்டியா?

சி.பி.செந்தில்குமார் said...

ஃபோட்டோவில் இருக்கும் காரா பூந்தில மிளகாய்ப்பொடி தூவி இருக்கா? இல்லையா? டவுட்டு டேவிட்டு

'பரிவை' சே.குமார் said...

பூந்தி சுலபமா செய்யலாம் போலவே...

Priya Suresh said...

Deepavaliku ready aytinga pola irruke, crispy boondis looks awesome..

ஸாதிகா said...

சீஸனுக்கேற்ற குறிப்பு.மேனகா இந்த வருட தீபாவளி ஸ்பெஷலா இது உங்கள் வீட்டில்?:-)

ஆமினா said...

பூண்டு வாசனைக்கே சாப்பிட வைக்கும்

நல்ல குறிப்பு

Raks said...

I love the kara boondhi both ways,with and without garlic,lovely recipe

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
ஃபோட்டோவில் இருக்கும் காரா பூந்தில மிளகாய்ப்பொடி தூவி இருக்கா? இல்லையா? டவுட்டு டேவிட்டு//

ஏன் கையில நெப்போலியன் பிராண்டி வச்சிருக்குறியாக்கும், சைடிஸ்'க்கு கேக்குற மாதிரி கேக்குற ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
கண் கரண்டின்னா என்ன? பூரி சுட யூஸ் பண்ற எண்ணெய் வடி கட்டும் கரண்டியா?//

அண்ணே நீ இன்னைக்கு ஆப்பை அடி வாங்குரதிலையே குறியா இருக்கிறியே என்னாச்சு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

பகிர்வுக்கு நன்றி மேனகா...!!!

K.s.s.Rajh said...

ஆகா பார்க்கும் போதே சாப்பிடத்தோனுதே?
குறிப்புக்கு நன்றி மேடம்

Jaleela Kamal said...

எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ் இது தான் எப்போதும் எங்க வீட்டில் இருக்கும்.
மிக அருமை

SURYAJEEVA said...

நானும் செய்து பார்த்தேன், எனக்கு வரவில்லை, அதிகமாக எண்ணெய் இழுக்கிறது... அதை குறைக்க என்ன வழி

Unknown said...

boondi romba கரா கரா irikku - சூப்பர் - தீபாவளி vazhthukkal

Lavanya Selvaraj said...

Visiting your blog for the first time... Attahasama iruku.... Kara boondhi kandippa indha diwaliku try panna poaraen!.

-Lavanya
My Recent Post: Beetroot Curry

Sangeetha M said...

kara bhoondi roomba nalla vandhirukku...diwali Vazhthukkal!!!

Unknown said...

I love it. I love to much while i read some intereting books.

Cheers,
Uma
My Kitchen Experiments

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luks so good.Yumm and crisp-fried.Luv it

San said...

Its combo with anything right from rice, raita, chaats is so wonderful. Thanks for the recipe.

முற்றும் அறிந்த அதிரா said...

கார பூந்தி சூப்பர்.

Menaga Sathia said...

@சூர்யாஜீவா
இந்த அளவில் செய்து பாருங்கள்,அந்தளவுக்கு எண்ணெய் இழுக்காது....

avainaayagan said...

நீங்கள் தந்திருக்கும் குறிப்புகளைப் பார்த்தால் காராபூந்தியை மிக சுலபமாகச் செய்யலாம் போலிருக்கிறதே!

sasikumar said...

அட!!!!!!!!

Jayanthy Kumaran said...

home made snacks are always the best in flavor n taste..
your recipe sounds easy ..will giv a try soon..tq..;)
Tasty Appetite

Asiya Omar said...

ஈசியாக இருக்கே..ஹைய்யா!..

மாய உலகம் said...

காரா பூந்தி சூப்பர்

SURYAJEEVA said...

thanks for the reply. i will try

ஸாதிகா said...

பூந்தி முத்து முத்தாக வரணுமே.எனக்கும் இப்படித்தான் தட்டையாக வரும்.முத்து முத்தாக வருவதற்கு என்ன செய்யவேண்டும்?

Menaga Sathia said...

@ஸாதிகா அக்கா

பூந்தி முத்து முத்தாக வர,எண்ணெயில் பூந்தியை போடதும் கரண்டியை நன்கு துடைத்துவிட்டு போட்டால் அடுத்த சுற்று ஊற்றும்போது முத்து முத்தாக வரும்...

01 09 10