Thursday 29 October 2009 | By: Menaga Sathia

கேரட் ஒட்ஸ் மஃபின்

தே.பொருட்கள்:

துருவிய கேரட் - 2
முட்டையின் வெள்ளைக்கரு - 2
தயிர் - 1 கப்
ஒட்ஸ் -1 கப்
கோதுமை மாவு - 1கப்
காய்ந்த திராட்சை - 10
தேன் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு



செய்முறை :

*ஒரு பவுலில் தயிர்+ஒட்ஸ்+திராட்சை கலக்கவும்.

*இன்னொரு பவுலில் கோதுமை மாவு+பேக்கிங் பவுடர்+உப்பு+பட்டைத்தூள் கலக்கவும்.

*முட்டை வெள்ளைக்கரு+தேனை ஒட்ஸில் நன்கு கலந்து அடித்துக் கொள்ளாவும்.

*கோதுமை+ஒட்ஸ் கலவை இரண்டையும் நன்கு கலந்து அதில் துருவிய கேரட் கலந்து மஃபின் கப்பில் ஊற்றவும்.

*அவனை 350 டிகிரியில் 20-25 நிமிடம் டைம் செட் செய்து பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் கப்பிலிருந்து ஈஸியாக எடுக்க வரும்.
Tuesday 27 October 2009 | By: Menaga Sathia

சிக்கன் தந்தூரி

தே.பொருட்கள்:

சிக்கன் லெக்பீஸ் - 1/2 கிலோ
தயிர் - 125 கிராம்
கரம் மசாலா - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
ரெட்கலர் - 1 சிட்டிகை
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு


செய்முறை :

*சிக்கனை சுத்தம் செய்து அதில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து 1மணிநேரம் ஊறவைக்கவும்.

*அவனில் 300 டிகிரியில் 20 நிமிடம் வைத்து க்ரில் செய்து எடுக்கவும்.


பி.கு:

*.அவரவர் அவனுக்கேற்ப டைம் செட் செய்யவும்.

*தந்தூரி மசாலா இல்லையெனில் மிளகாய்த்தூளை கொஞ்சம் தேவைக்கேற்ப அதிகம் சேர்த்து செய்யவும்.
Sunday 25 October 2009 | By: Menaga Sathia

பகோடா வத்தல் / Pakoda Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 2 கப்
அரிசிமாவு -2 கப்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் -10
சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடியளவு
இஞ்சி - 1 பெரிய துண்டு


செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+புதினா கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*அரிசிமாவு+ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*தண்ணீர் கொதித்ததும் பொடியாக அரிந்த பொருட்கள்+உப்பு+ஜவ்வரிசி+அரிசிமாவு சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை கொஞ்ச கொஞ்சமா கிள்ளி வைக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.பொரிக்கும் போது பகோடா பொரித்தது போல் வாசனையாக இருக்கும்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
Thursday 22 October 2009 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் -வாசனைக்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது

செய்முறை :

*எலுமிச்சை பழத்தை பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைஅக்ளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.

பி.கு:

1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.
2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.
3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
Wednesday 21 October 2009 | By: Menaga Sathia

கொத்தவரங்காய் பொரியல்

தே.பொருட்கள்:

கொத்தவரங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் -1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் -4
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை :

* கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவகைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*பின் வெந்த காயை கொட்டி,அரைத்தமசாலாவுடன் சிறிது நீர் சேர்த்து கிளறவும்.

*நீர் சுண்டிய பின் நன்கு கிளறி இறக்கவும்
Tuesday 20 October 2009 | By: Menaga Sathia

புளியோதரை (புளி சாதம்)


தே.பொருட்கள்:

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 3கப்
புளி- 3எலுமிச்சை பழ அளவு(100கிராம்)
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய்- தே.அளவு
நல்லெண்ணெய்- 1 1/2 டேபிள்ஸ்பூன்


தாளிக்க:

காய்ந்த மிளகாய்- 4
கடலைப்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெ.உ.பருப்பு- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்
கருவேப்பில்லை- சிறிது
வறுத்த வேர்க்கடலை- 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க வேண்டியவை:

தனியா- 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கா.மிளகாய்- 3
கடலைப்பருப்பு- 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
வெந்தயம்- 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.

* புளியை கெட்டியாக 1கப் அளவுக்கு கரைத்துக்கொள்ளவும்,மஞ்சள் தூள்+உப்பு சேர்க்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை பொடித்து,புளி பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

*1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

பி.கு:

இதற்கு தொட்டுக்கொள்ள இரால்,உருளைக்கிழங்கு ,கறி வருவல்,மசால் வடை,புதினா துவையல் நன்றாக இருக்கும்.

மீதமிருக்கும் பொடியை வறுவல்,வத்தக்குழம்புக்கு பயன்படுத்தலாம்.
Monday 19 October 2009 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு சுகியன்

தே.பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
வெல்லம்- 1/4 கப்
மைதா - 1/2 கப்
தோசை மாவு - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*பாசிப்பருப்பை மலர வேகவைத்து நீரை வடிகட்டி மசிக்கவும் அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

*தேங்காய்த்துறுவல்+மசித்த பாசிப்பாருப்பை வெறும் கடாயில் லேசாக வதக்கவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக்காய்ச்சி மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.

*வடிகட்டிய வெல்லத்தில் பிசுப்பிசுப்பு பதம் வந்ததும் தெங்காய்த்துருவல்+பசிப்பருப்பு+ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும்.

*அதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதா+உப்பு+தோசைமாவு சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*பிடித்து வைத்த உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.



பி.கு:

தோசை மாவு சேர்த்து கரைப்பதால் ரொம்ப மென்மையாக இருக்கும்.கடலைப்பருப்பில் செய்வதை விட பாசிப்பருப்பில் செய்தால் இன்னும் டேஸ்டாக இருக்கும்.தேங்காய்துறுவல்+பாசிப்பருப்பை நன்கு வதக்கினால் 2 நாள் வரை வைத்திருக்கலாம்.
Friday 16 October 2009 | By: Menaga Sathia

இனிப்பு பூந்தி/Sweet Bhoondi

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை,டைமண்ட் கல்கண்டு - தேவைக்கு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.

*அதனுடன் மஞ்சள் கலர் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.

*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.

*முந்திரி,திராட்சையை நெய்யில் வறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.2 விரல்களால் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கனும்.அதுதான் பூந்திக்கு சரியான பதம்.

*அடுப்பை நிறுத்திவிட்டு பூந்தி+ஏலக்காய் பொடி+கல்கண்டு+முந்திரி திராட்சை+மீதமிருக்கும் நெய் சர்க்கரை பாகில் கலந்து மூடி வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூந்தி பொலபொலவென இருக்கும்.


பி.கு:

*இது நான் லட்டுக்காக செய்த குறிப்பு.சர்க்கரை பாகு ஆறிவிட்டதால் லட்டு பிடிக்க வரவில்லை.இளஞ்சூடாக இருக்கும் போதே நெய் தொட்டு லட்டுகளாக பிடிக்கவும்.

*கரைத்த கடலைமாவில் 3 பங்காக பிரித்து சிவப்பு+பச்சை+மஞ்சள் கலர் சேர்த்து கலர் பூந்தி செய்யலாம்.பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.

கீரை சுண்டல் /Keerai Sundal

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
பொடித்த ஒட்ஸ் - 1கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு

செய்முறை :

*கீரையை சுத்தம் செய்து லேசாக வதக்கி பச்சை மிளகாய்+உப்பு+சீரகம் சேர்த்து அரைக்கவும்.

* அதில் பொடித்த ஒட்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளைத் தாளித்து.தேங்காய்த் துறுவல் வேக வைத்த உருண்டையில் சேர்க்கவும்.

பி.கு:

நான் சேர்த்திருப்பது முருங்கை கீரை.சுவை நன்றாக இருந்தது.
Thursday 15 October 2009 | By: Menaga Sathia

வெல்ல அதிரசம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து தண்ணியில்லாமல் வடிகட்டி நிழலில் ஈரமில்லாமல் உலர்த்தி மாவாக்கவும்.

*மாவு ரொம்ப நொறநொறன்னு இருக்ககூடாது.

*ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு அது சிறிது நீர்விட்டு காய்ச்சவும்.வெல்லம் கரைந்ததும் மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்கவும்.

*ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு வெல்லத்தை விடவும் அது உருட்டும் பதத்திற்க்கு வந்தால் அதுதான் சரியான பதம்.

*சரியான பதம் வந்ததும் இறக்கி அரிசி மாவு+ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.அதன் மீது நெய்விடவும்.

*பின் உருண்டைகளாக உருட்டி ரொம்ப மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

*சுவையான அதிரசம் ரெடி.

கவனிக்க:

*கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும்,தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

*அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

*மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

*அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும்.ஆறியதும் மெத்தென்று இருக்கும்.
Wednesday 14 October 2009 | By: Menaga Sathia

ஈஸி தட்டை / Easy Thattai

தே.பொருட்கள்:

பச்சரிசிமாவு - 2 கப்
காய்ந்த மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கட்லை - 1/2 கப்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
உருக்கிய பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*மிளகாய்+பெருஞ்சீரகம்+பூண்டுபல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பொட்டுக்கடலை+மிளகு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

*ஊறிய கடலைப்பருப்பு+பொட்டுக்கடலை மாவு+அரைத்த மிளகாய் விழுது+உப்பு+உருக்கிய பட்டர்+கறிவேப்பிலை இவற்றை அரிசி மாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவு சிறு உருண்டையாக எடுத்து ஒரு ப்ளாஸ்திக் கவரில் எண்ணெய் தொட்டு வட்டமாக தட்டி பேப்பரில் போட்டு உலர விடவும்.

*ரொம்ப நேரம் உலர விடக்கூடாது அப்படி செய்தால் பேப்பரிலிருந்து எடுக்கும் போது தட்டை உடைந்து விடும்.

*எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பொன்னியரிசி (புழுங்கலரிசி) தட்டையின் செய்முறைக்காண இங்கே க்ளிக் செய்யவும்.


பி.கு:

கடையில் விற்கும் அரிசிமாவில் செய்தேன்.செய்வதற்க்கும் மிக எளிது.
Tuesday 13 October 2009 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு ஒமப்பொடி

இது என்னுடைய 150 வது பதிவு.எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளுக்கும்,பாலோவர்ஸ் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி,நன்றி!!


தே.பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாமல் மசிக்கவும்.

*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு+கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.


பி.கு:

உருளைக்கிழங்கை தேவைக்கு அதிகமா வேகவைத்துவிட்டேன்.அதை வீணாக்கமல் இப்படி செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தே.பொருட்கள்:

குட்டி கத்திரிக்காய் - 8
புளி தண்ணீர் - 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 5
கறிவேப்பிலை -சிறிது
தக்காளி - 1 சிறியது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 3 கீறிய பத்தை
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை -சிறிது

செய்முறை :

*புளிதண்ணீரில் உப்பு+தக்காளி கரைத்து வைக்கவும்.

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ளவையுடன் தேங்காய் சேர்த்து விழுதாக ரைக்கவும்.

*வெங்காயம்+பூண்டுப்பல் நறுக்கவும்.கத்திரிக்காயை நான்காக கீறவும்(முழுவதும் வெட்டக்கூடாது).
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்+பூண்டு+கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த விழுதை சேர்த்து புளிகரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
Monday 12 October 2009 | By: Menaga Sathia

இனிப்பு சோமாஸ் / SWEET SOMAS | DIWAL RECIPES

தே.பொருட்கள்:

மைதா - 1 கப்
உப்பு - 1 பிஞ்ச்
உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

பூரணத்துக்கு:

ரவை - 1/2 கப்
மெல்லிய சேமியா -1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை:

*மைதா மாவில் உப்பு+நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.


*தேங்காயை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

*பின் நெய் விட்டு முந்திரி+திராட்சையை வதக்கி ரவை+சேமியாவை பொன் முறுவலாக வறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் வதக்கிய தேங்காய்+ஏலக்காய்த்தூள்+ரவை+சேமியா+முந்திரி +திராட்சை+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*இப்போழுது பூரணம் ரெடி.

*மைதாமாவை நன்கு பிசைந்து சிறு சிரு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும்.



* தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது சோமாஸ் கட்டரில் வெட்டி எடுக்கவும்.

*பின் மிதமான எண்ணெய் சூட்டில் பொரிக்கவும்.சுவையான சோமாஸ் ரெடி.


கவனிக்க:

* மைதாவை நன்கு ஊறவைத்து பிசைவதால் சோமாஸ் நன்றாக இருக்கும்.பிசையும் போது வெந்நீர் ஊற்றி பிசைந்தால் சீக்கிரம் நமத்து போகாது.

* பூரணத்தை வைத்த பிறகு ஓரங்களை நன்றாக மடிக்கவும் இல்லையெனில் பொரிக்கும் போது எண்ணெயில் கொட்டும்.எண்ணெயை ரொம்ப சூடாக இருக்ககூடாது.

*நான் ஓரங்களை மடித்து செய்ததால் இந்த அளவுகள் சரியாக இருக்கும்.சோமாஸ் அச்சியில் செய்தால் அளவுகள் ஒரே சீராக இருக்கும்,சோமாஸும் அதிகமா வரும் ஆனால் பூரணம் இன்னும் அதிகமா செய்யனும் மற்றும் வேலை அதிகமா இருக்கும்.

*இந்த அளவில் செய்ததில் 15 சோமாஸ் வந்தது.

*10 சோமாஸ் செய்ததும் பொரிக்கவும்,பின் மறுபடியும் உருட்டி பொரிக்கவும்.மொத்தமாக பொரித்தால் சோமாஸ் காய்ந்துபோய் எண்ணெயில் பொரிக்கும் போது பூரணம் கொட்டும்.

*சேமியா இல்லையெனில் வெறும் ரவை மட்டும் போட்டு செய்யலாம்.

*இன்னொரு வகை பூரணம் செய்ய பொட்டுக்கடலை மாவு 1/2 கப்+பொடித்த சர்க்கரை 1/2 கப்+ஏலக்காய்த்தூள் 1/4 டீஸ்பூன்+தேங்காய்த்துறுவல் 1/2 கப்.தேங்காயை வறுத்து ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.படங்களில் இருப்பது இந்த பூரணம் வைத்து செய்தது.
Sunday 11 October 2009 | By: Menaga Sathia

கோதுமை மாவு சுண்டல் /Wheat Flour Sundal

தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கேரட் + மாங்காய்த் துறுவல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்


செய்முறை :

*கோதுமை மாவில் உப்பு+நெய்+கரம் மசாலா+மிளகாய்த்துள் சேர்த்து ஒன்றாக கலந்து நீர் விட்டு சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும்.

* அதை சிறு உருண்டைகளாக உருட்டி பட்டன்போல் லேசாக தட்டிக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் பட்டன் உருண்டைகளைப் போட்டு,வெந்து லேசாக எழும்பி வரும்போது எடுத்து வடியவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கேரட்+மாங்காய்த் துறுவல் சேர்த்து உருண்டையில் கொட்டவும்.

*ஈசி சுண்டல் ரெடி.

கவனிக்க:

*உருண்டையாக உருட்டி போட்டால் வேக லேட்டாகும்.அதனால் பட்டன்போல் தட்டிப் போட்டால் 5 நிமிடத்தில் அனைத்தும் உருண்டைகளும் மேலே எழும்பி வரும்.

*விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவலும் சேர்க்கலாம்.
Thursday 8 October 2009 | By: Menaga Sathia

பொங்கல் / Sweet Pongal

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 1 கப்
வெல்லம் -1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
பால் - 1/2 கப்
முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2

செய்முறை :

*அரிசியை கழுவி 1 1/2 கப் நீர்+பால் சேர்த்து வேக வைக்கவும்.


*வெல்லத்தை சிறிது நீர்விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*முக்கால் பாகம் அரிசி வெந்தவுடன் காய்ச்சிய வெல்லம்+உப்பு சேர்த்து மேலும் குழைய வேகவைக்கவும்.


*வெந்ததும் இறக்கி ஏலக்காயை தட்டிப் போடவும்.

*நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்து பொங்கலில் போடவும்.மீதமுள்ள நெய்யையும் அதன்மேல் ஊற்றி இறக்கவும்.
Tuesday 6 October 2009 | By: Menaga Sathia

வாழைப்பூ+வெள்ளரிக்காய் பச்சடி

தே.பொருட்கள்:

சுத்தம் செய்து பொடியாக அரிந்த வாழைப்பூ - 1/2 கப்
துருவிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
தயிர் - 125 கிராம்
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

*வெங்காயம்+கொத்தமல்லித்தழை+தக்காளி விதை நீக்கவும் பொடியாக நறுக்கவும்.

*வாழைப்பூவையும்,வெள்ளரிக்காயையும் கலக்கவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து வாழைப்பூ கலவையில் கொட்டவும்.

*பறிமாறும் போது உப்பு+தயிர்+மல்லித்தழை+வெங்காயம்+தக்காளி சேர்த்துக் கலக்கவும்.

கவனிக்க:

வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும்.கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்து.
Sunday 4 October 2009 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தே.பொருட்கள்:

மாங்காய் இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

* மாங்காய் இஞ்சியை கழுவி தோல் சீவி நறுக்கவும்.

*அதனுடன் உப்பு+கீறிய பச்சை மிளகாய்+எலுமிச்சை சாறு சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மிளகாய்தூள் சேர்த்து உடனே ஊறுகாயில் கொட்டவும்.

*இதை உடனே செய்து சாப்பிடலாம்.

பி.கு:

மாங்காய் இஞ்சி பார்ப்பதற்க்கு இஞ்சி போலவே இருக்கும்,சுரண்டிப் பார்த்தால் மாங்காய் வாசனை வரும்.
Saturday 3 October 2009 | By: Menaga Sathia

புரட்டாசி சனிக்கிழமை


இன்று புரட்டாசி 3வது சனிக்கிழமை.அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவாங்க.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
இன்று நான் செய்த தளியல் படையல்கள் :

உப்பு போடாத சாதத்தில் வெல்லம்,தயிர் சேர்த்த சாதம்,பொங்கல்,எலுமிச்சை சாதம்,புளி சாதம்,தயிர் சாதம் (படம் மிஸ்ஸிங் கொஞ்சமா செய்த்தால் காலியாயிடுச்சு), தேங்காய் சாதம்,காராமணி சுண்டல்,உருளை வறுவல்,பாசிப்பருப்பு பாயாசம்,முருங்கைக் கீரை பிரட்டல்,கொள்ளு வடை,அப்பளம்,சாம்பார்.
Thursday 1 October 2009 | By: Menaga Sathia

முளைப்பயிறு பணியாரம்

தே.பொருட்கள்:

ப்ரவுன் ரைஸ் - 1/2 கப்
முளைக்கட்டிய சென்னா,பாசிப்பயறு - தலா 1/2 கப்
இஞ்சி - 1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை :

*அரிசியை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+உப்பு+முளைப்பயறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மாவில் கலக்கவும்.
* பணியார குழியில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

விருதுகள்.....

தோழி ப்ரியாராஜ் அவர்கள் எனக்கு 4 விருதினை கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை சஞ்சய்காந்தி,ஷஃபிக்ஸ்,ஜமால்,பாயிஷா,நவாஸுதீன்,கோபி,இராகவன்,
ராஜ்,சிங்கக்குட்டி,சந்ரு,ஜலிலாக்கா,சாருஸ்ரீராஜ்
இவர்களுக்கு வழங்குகிறேன்
இந்த விருதினை பிரியமுடன் வசந்த்,மலிக்கா,சம்பத்குமார்,தேவன்மாயம்,சூர்யாகண்ணன்,திவ்யா விக்ரம்,சக்தி இவர்களுக்கு வழங்குகிறேன்.

இந்த விருதினை பிரியமுடன் வசந்த்,ஹர்ஷினி அம்மா,அம்மு,இயற்கை,சுரேஷ் குமார்,லஷ்மி வெங்கடேஷ்,ப்ரியா இவர்களுக்கு வழங்குகிறேன்
இந்த விருதினை ப்ளாக் பாலோவர்ஸ் அனைவருக்கும் கொடுக்கிறேன்
01 09 10