Showing posts with label வத்தல்/வடகம். Show all posts
Showing posts with label வத்தல்/வடகம். Show all posts
Sunday, 21 May 2017 | By: Menaga Sathia

வெண்டைக்காய்&பாகற்காய் வத்தல் / Okra & Bittergourd Vathal | Summer Spl

வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் வத்தல் செய்யும் போது தயிர் சேர்த்து செய்ய வேண்டும்.
வெண்டைக்காயில் தயிர் சேர்ப்பது அதன் கொழகொழப்பு தன்மையை நீக்கும்.பாகற்காயில் தயிர் சேர்ப்பது வாசனையாகவும்,கசப்பில்லாமலும் இருக்கும்.
பாகற்காய் வத்தல் சேர்த்து குழம்பு செய்யும் போது அதனுடன் வேறு காய் வத்தல் சேர்த்து செய்ய வேண்டாம்.

தே.பொருட்கள்
வெண்டைக்காய் -1/4 கி
பாகற்காய் -1/4 கி
புளித்த தயிர்  - 1 கப்
உப்பு-தேவைக்கு

செய்முறை

*காய்களை கழுவி வெண்டைக்காயை நடுத்தர துண்டுகளாகவும்,பாகற்காயை வட்டமாகவும் நறுக்கவும்.

*நான் மிதி பாகற்காயில் செய்துள்ளேன்,பெரிய பாகற்காயில் செய்யும் போது நறுக்கும் போது விதைகளை நீக்கவும்.

*நறுக்கிய வெண்டைக்காயினை மட்டும் 1 நாள் முழுக்க வெயிலில் காய வைக்கவும்.

*தயிரை உப்பு சேர்த்து நன்கு கடைந்துக் கொள்ளவும்.

*மாலையில் காய வைத்த வெண்டைக்காயில் கடைந்த 1/2 கப் தயிர் சேர்த்து ஊறவைக்கவும்.

*பாகற்காயில் மீதி 1/2 கப் தயிர் சேர்த்து கலக்கி 1 நாள் ஊறவைக்கவும்.

*மறுநாள் வெயிலில் காய்களை மட்டும் எடுத்து காயவைக்கவும்.மாலையில் திரும்ப தயிரில் ஊறபோடவும்.

*இதே போல் தயிர் வற்றும் வரை செய்து பின் நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும்.

*காய்கள் இல்லாத சமயத்தில் இந்த வத்தல் போட்டு குழம்பு செய்யலாம்.


Wednesday, 26 April 2017 | By: Menaga Sathia

உப்பு (அட ) மாங்கா /Uppu (Ada )Manga | Summer Spl

போன வருடம் ஊருக்கு சென்றிருந்த போது மாமியார் இந்த அட மாங்காயை கொடுத்தாங்க.அவங்க செய்யும் போது பார்த்தாலும் படம் எடுக்கவில்லை.

இது எனக்கு ரொம்ப பிடிக்கும்,அப்படியே கூட சாப்பிடலாம்,மோர் குழம்பு ,வத்தல் குழம்பு,பச்சடி என செய்யலாம்.

இந்த மாங்காயின் கொட்டையை குழம்பு வைக்கலாம்.உடம்புக்கு மிக நல்லதும் கூட...

இதில் உப்பு அதிகம் இருப்பதால் குழம்பில் உப்பின் அளவை குறைத்து போடவும்.

வத்தல்களில் உப்பு தான் ப்ரிசர்வேடிவ் என்பதால் உப்பினை அதிகம் போடவும்.

தே.பொருட்கள்

கிளி மூக்கு மாங்காய்-  5
கல் உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*மாங்காயை கழுவி நன்கு துடைத்து பக்கவாட்டில் முக்கால் பாகம் வரை நறுக்கவும்.

*எப்படி என்று மேலிருக்கும் படத்தை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்.

*கல் உப்பு,மஞ்சள்தூள் இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*உப்பு கலவையை நறுக்கிய மாங்காயில் நங்கு அடைத்து வைக்கவும்.இப்படியே அனைத்து மாங்காயில் செய்த பின் பீங்கான் ஜாடி அல்லது பானையில் வைத்து மெல்லிய துணியால் மூடி வைக்கவும்.

*இப்போழுது மறுநாள் மாங்காய்  நங்கு ஊறி நீர் விட்டிருக்கும்.

*தனியாக மாங்காயினை மட்டும் தட்டில் வைத்து வெயிலில் காய்வைக்கவும்.மாங்காய் ஊறவைத்த பானையும் நீரோடு ,துணியால் மூடி வெயிலில் வைக்கவும்.

*மாலையில் திரும்ப மாங்காயினை பானையில் போட்டு எடுத்துவைக்கவும்.இதே போல் நீர் வற்றும் வரை செய்த பின் மாங்காய் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.

*இதனை மீண்டும் நன்கு காயவைத்து எடுத்து பத்திரபடுத்தவும்.அதாவது  மாங்காயை ஆட்டினால் உள்ளிருக்கும் கொட்டை சத்தம் கேட்க வேண்டும்.

மாந்தோல் குழம்பு 
மாம்பருப்பு குழம்பு

Tuesday, 4 April 2017 | By: Menaga Sathia

சுண்டைக்காய் வத்தல் /Sun Dried Turkey Berry(Sundakkai) Vathal | Summer Spl

 சுண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது,ஏராளமான பயன்கள் கொண்டது.இணையத்திலிருந்து எடுத்த சில பயன்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

இருமலுக்கு - 2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 2 வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிடலாம்..
தலைவலிக்கு - சுண்டைக்காய் வத்தலை பொடித்து தினமும் இதனை  முகர்ந்தால் சரியாகும்.
வயிற்றுவலிக்கு - 5-6 சுண்டைக்காய் வத்தலை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் சரியாகும்.
இரத்தசோகைக்கு -2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 3 வேளை 1/4 டீஸ்பூன் சாப்பிடலாம்.

தே.பொருட்கள்
ப்ச்சை சுண்டைக்காய் -3 கப்
தயிர் - 2கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை
*பச்சை சுண்டைக்காயின் காம்பினை நீக்கி கழுவவும்.
*இதனை இடிப்பானில் லேசாக நசிக்கியோ அல்லது கத்தியில் கீறியோ வைக்கவும்.
*தயிரை கட்டியில்லாமல் நன்கு கடைந்து உப்பு சேர்த்து 1/2 கப் நீர் ஊற்றி சுண்டைக்காயை 1 நாள் ஊறவிடவும்.
*மறுநாள் வெயிலில் சுண்டைக்காயினை மட்டும் தட்டில் வைத்து காயவைக்கவும்.
*மோரினை வெயிலில் வைக்ககூடாது,மாலையில் திரும்பவும் மோரில் ஊறவைக்கவும்.

*இதேபோல் மோர் வற்றும் வரை செய்து பின் வெயிலி நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும்.

*வத்தகுழம்பு செய்தால் நன்றாக இருக்கும்.குறிப்பினை இங்கே பார்க்கவும்.

*இதே போல் மணத்தக்காளி காயில் செய்யலாம்,அப்படி செய்யும் போது நேரடியாகவே தயிரில் ஊறவைத்து காயவைக்கவும்.நசுக்கி போட தேவையில்லை.

*தயிரில் ஊறவைத்து போடுவது வாசனையாக இருக்கும்.
Thursday, 7 May 2015 | By: Menaga Sathia

உப்பு நார்த்தங்காய் / Uppu Naarthangai | Dry Naarthangai Vathal |Summer Spl


print this page PRINT IT 
நார்த்தங்காய் எலுமிச்சை பழவகையை சார்ந்தது.இதன் பழங்கள் பெரியதாகவும்,தோல் தடிமனாகவும் இருக்கும்.

இதில் ஊறுகாய்,சாதம்,பச்சடி என செய்யலாம்.அதிக மருத்துவகுணம் வாய்ந்தது.

இதனை உணவில் சேர்த்துவர வயிற்றுப்புண்,வயிற்றுப்புழு நீங்கும்.பசியை அதிகரிக்கும்.

இதில் மிக சுவையான குழம்புகூட செய்யலாம்.அதனை வேறொருநாளில் பகிர்கிறேன்.

தே.பொருட்கள்

நார்த்தங்காய் -3
கல் உப்பு -தேவைக்கு

செய்முறை

*நார்த்தங்காயை கழுவி துடைக்கவும்.

*அதனை நான்காக கீறவும்.அதனுள் கல் உப்பு வைத்து அடைக்கவும்.

*இதனை மண்சட்டி அல்லது பீங்கான் ஜடியில் போட்டு 3 நாள் ஊறவைக்கவும்.

*3ஆம் நாள் பழம் ஊறி நீர் விட்டிருக்கும்.பழத்தினை மட்டும் எடுத்து தட்டில் வைத்து வெயிலில் காயவைக்கவும்.

*பின் மாலையில் திரும்பவும் உப்பு நீரில் போடவும்.இதே போல் உப்பு நீர் வற்றும் வரைவெயிலில் காயவைக்கவும்.

*பின் ஒரு நாள் முழுக்க பழத்தினை வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*சுவையான ஊறுகாய் ரெடி,1 வருடத்திற்கும் மேல் வைத்திருந்து பயன்படுத்தலாம்.






Tuesday, 5 May 2015 | By: Menaga Sathia

பகோடா வத்தல் / Pakoda Vathal | Pakoda Killu Vathal | Summer Spl


print this page PRINT IT 
 இந்த பகோடா பொரிக்கும் போது செம வாசனையாக இருக்கும்.

தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
அளவு - 3 கப்

தே.பொருட்கள்
பச்சரிசி மாவு -1 கப்
நீர் -3 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -1/2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி- 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*குக்கரில் 3 கப் நீரை நன்கு கொதிக்கவிடவும்.

*அரிசிமாவில் சிறிது நீர்விட்டு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.

*நீர் கொதிக்கும் போது அரிசிமாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

*மாவு வெந்து கெட்டியாகி கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் எலுமிச்சைசாறு ஊற்றி கிளறி இறக்கவும்.

*இதில் மேற்கூறிய வெங்காயம் மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து கிளறவும்.


*ஆறியதும் துணியில் மாவினை எடுத்து கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*மறுநாள் காலையில் துணியில் பின்புறத்தில் நீர் தெளித்து வற்றல்களை எடுத்து நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.

*பொரிக்கும் போது எண்ணெய் நன்கு காயவைத்து பொரித்தெடுக்கவும்.

பி.கு

*சின்ன வெங்காயம் மட்டுமே சேர்க்கவும்.பெரிய வெங்காயம் சேர்க்கும் போது சுவையில் வித்தியாசம் தெரியும்.

*அரிசிமாவுக்கு பதில் அரிசி ஊறவைத்து அரைத்தும் செய்யலாம்.
Monday, 27 April 2015 | By: Menaga Sathia

கோதுமை வடாம் /Wheat Vadam(Godhumai Vathal ) | Summer Spl | Diabetic Recipes



print this page PRINT IT 
இது வட இந்தியர்கள் செய்யும் குறிப்பு.சென்றமாதத்தில் முகநூல் CAL குரூப்பில் பார்த்து செய்தது.அவர்கள் காரம் எதுவும் போடாமல் செய்துருந்தாங்க.இதில் என் சுவைக்கேற்ப நாம் எப்போழுதும் செய்வது போல பச்சை மிளகாய்+சீரகம்ச் ஏர்த்து செய்துருக்கேன்.

இதில் கோதுமை ஊறவைத்து அரைத்து மாவினை புளிக்க வைத்து செய்வது.நான் இந்த மாவிலேயே பாதி கூழ் வத்தலும்,கஞ்சி வத்தலும் செய்தேன்.சுவை மிக அருமை.

வத்தலை பொரிக்கும் போது மிதமான சூட்டில் பொரிக்கவும்,இல்லையெனில் சிவந்துவிடும்.நான் கொஞ்சம் அதிக சூட்டில் காயவைத்து பொரித்ததால் கொஞ்சம் சிவந்து விட்டது.

அதே போல் வத்தல் பொரிக்கும் போது 2மடங்காக உப்பி வரும்,அதனல் எண்ணெய் கொஞ்சம் தாளராமாக ஊற்றி பொரிக்கவும்.

ஊறவைக்கும் நேரம் -8 மணிநேரங்கள்
தயாரிக்கும் நேரம் -15 நிமிடங்கள்
அளவு -3 கப்

தே.பொருட்கள்

முழு கோதுமை- 1 கப்
உப்பு -தேவைக்கு
பச்சை மிளகாய் -3
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

செய்முறை

*கோதுமையை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.


*அதனை அரைத்து மூன்று முறை பால் எடுக்கவும்.

*அரைத்த பாலினை ஒர் இரவு முழுக்க புளிக்க வைத்து மேலோடு இருக்கும் நீரினை ஊற்றி விடவும்.

*கெட்டி பாலை அளக்கவும்.1 கப்ப்பிற்கு 3 கப் தண்ணீர் வைக்கவும்.

*குக்கரில் 3 கப் நீரினை ஊற்றிஉப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.பின் கோதுமை பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

*நன்கு வெந்து கண்ணாடி போல் மாவு பதம் வரும் போது பச்சை மிளகாய் விழுது+பெருங்காயப்பொடி+சீரகம் சேர்த்து கலக்கவும்.

*கெட்டியாக மாவு வந்து கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவும்.

*இதில் பாதி கெட்டியான மாவு கூழ் வத்தல் செய்ய தனியாக எடுத்துக் கொண்டேன்.

*பின் மீதி இருக்கும் மாவில் நன்கு கொதித்த நீரை ஊற்றி ஸ்பூனால் எடுத்து ஊற்றும் பதத்தில் கலக்கவும்.

*ஈரமான துணியில் கெட்டிமாவு முறுக்கு அச்சியில் பிழிந்தும்,நீர்க்க மாவை ஸ்பூனால் ஊற்றியும் வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*பின் மறுநாள் துணியின் மறுபக்கத்தில் நீரை தெளித்து வற்றலை எடுத்து 2 -3 நாட்கள் வரை வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

Thursday, 23 April 2015 | By: Menaga Sathia

மோர் மிளகாய் / MOR MILAGAI | SUN DRIED CHILLIES | SUMMER SPL

print this page PRINT IT

மோர் மிளகாய் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு ஏற்ற பக்கஉணவு.மிளகாயை சாதம் வடித்த தண்ணியில் சூடாக ஊற்றி 10 நிமிடம் வைத்திருந்து பின் நாம் செய்தால் மிளகாயின் நிறம் மாறாது மற்றும் காரமும் குறைவாக இருக்கும்.

இதனை பொதுவாக தஞ்சாவூர் குடமிளகாயில் செய்வாங்க.அதில் காரம் குறைவு,சுவையும் சூப்பர்.நான் சாதரண ஊசிமிளகாயில் செய்துருக்கேன்.

தே.பொருட்கள்

பச்சை மிளகாய் -30
நன்கு புளித்த மோர் -2 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*மிளகாயின் காம்போடு பயன்படுத்தலாம்.மிளகாயின் நடுவில் கம்பியால் குத்தவும் அல்லது மூங்கில் குச்சியில் கூட குத்தலாம்.

*அதனை சாதம் வடித்த தண்ணியில் சூடாக ஊற்றி 10 நிமிடம் வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் மோரினை உப்பு சேர்த்து கடைந்து வைக்கவும்.மிளகாயை சாதம் வடித்த தண்ணியிலிருந்து எடுத்து மோரில் 1 நாள் முழுக்க ஊறவைக்கவும்.
*ஊறியன் பின் தட்டில் மிளகாயை மட்டும் எடுத்து வெயிலில் காயவைக்கவும்.

*மாலையில் திரும்பவும் மோரில் போட்டு வைக்கவும்.

*இதே போல் மோர் வர்றும் வரை செய்த பின் திரும்பவும் 1 நாள் முழுக்க காயவைக்கவும்.

*இது வருடம் முழுக்க வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*உபயோகிக்கும் போது எண்ணெய் நன்கு காயவைத்து மிளகாயை வறுத்து பயன்படுத்தவும்.


பி.கு

*மிளகாய் வறுக்கும் போது நன்கு பொன்னிறமாக வறுத்தால் தான் சாப்பிடும் போது காரம் தெரியாது.

*மிளகாயை மோரிலிருந்த எடுத்து காயவைக்கும் போது மோரினை வெயிலில் காயவைக்ககூடாது.
Friday, 17 April 2015 | By: Menaga Sathia

இலை வடாம் / ILA VADAM | SUMMER SPL | VADAM RECIPES

print this page PRINT IT
இலை வடாம் போடுவதற்கு வெயிலில் காய வைக்க அவசியமில்லை..வீட்டினுள்ளே வெயில் படும் இடத்தில் காற்றோட்டமாக உலரவைத்த பின் 1 நாள் முழுக்க வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம்.

இதற்கு தனியாக அச்சு இருக்கு,ஆனால் நான் சிறிய தட்டுகளில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தேன்.தட்டு அல்லது வாழையிலை பயன்படுத்தலாம்.

சிறிய தட்டுகளில் மாவினை உற்றும் போது எண்ணெய்+தண்ணீர் கலந்து தடவி ஊற்றவும்.எண்ணெய் மட்டும் தடவி மாவு ஊற்றினால் தேய்க்க முடியாது.

அதே போல் மாவு பதம் தோசை மாவினை விட தண்ணியாக இருக்க வேண்டும்.மாவினை தட்டில் ஊற்றும் போது மெலிதாக தேய்க்கவேண்டும்.தடினமாக மாவினை உற்றினால் காய்வதற்கு லேட்டாக ஆகும்.

ஆவியில் வேக வைத்தபின் துணியில் வைத்து இடைவெளி விட்டு உலரவிடவும்.பின் 4 மணிநேரத்திற்கு பிறகு மறுபக்கம் திருப்பி உலரவிடவும்.

ஜவ்வரிசி சேர்த்தும்,சேர்க்காமலும் செய்யலாம்.இந்த வடாம் எண்ணெயில் பொரிக்கும் போது மிக பெரிதாக இருக்கும்.அதனால் சிறிய தட்டுகளில் உற்றி செய்யலாம்.

நான் மொத்தம் 6 சிறிய தட்டுகளில் செய்தேன்.3 தட்டு ஊற்றி எடுத்த பின் மற்ற 3 தட்டுகளில் ஊற்றி எடுத்தேன்,அதற்குள் முதலில் ஊற்றிய தட்டுகளில் இருந்து வடாம் ஆறி அழகாக எடுக்க வரும்.

மாவு சரியாக வேகவில்லை எனில் வடாம் எடுக்க வராது,பிய்த்துக் கொள்ளும்.

எப்போழுதும் வடாமிற்கு உப்பினை குறைவாக சேர்க்கவும்,எண்ணெயில் பொரித்து சாப்பிடும் போது சரியாக இருக்கும்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
ஜவ்வரிசி- 2 டேபிள்ஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 4 (அ) காரத்திற்கேற்ப‌
உப்பு -தேவைக்கு
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பச்சரிசி+ஜவ்வரிசியை ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

*அதனுடன் அரைத்த பச்சை மிளகாய் விழுது+உப்பு+பெருங்காயத்தூள்+சீரகம் +எலுமிச்சைசாறு சேர்த்து தோசைமாவினை விட நீர்க்க
கரைக்கவும்.

*எண்ணெய்+நீர் சேர்த்து கலந்து கிண்ணத்தில் வைக்கவும்.

*இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டு வைக்கவும்.

*அதன்மீது எண்ணெய் தடவிய சிறிய தட்டுகளில் மாவினை ஊற்றி ஆவியில் 1- 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.

*ஆறியதும் எடுத்து துணியில் உலரவைக்கவும்.

*வீட்டிலயே வெயில் படும் இடம் அல்லது பேன் காற்றில் 2 -3 காயவைத்து எடுக்கலாம்.ஆனால் இடையிடயே திருப்பி விட்டு உலரவிடவும்.

*பின் நன்றாக வெயிலில் 1 நாள் காயவைத்து பயன்படுத்தலாம்.

பி.கு
*ஒவ்வொரு முறையும் மாவினை தட்டில் ஊற்றும் பொது எணெய் தடவ அவசியமில்லை.

*எலுமிச்சை சாறுக்கு பதில் மாவினை முதல்நாளே அரைத்து புளிக்கவைத்து பயன்படுத்தலாம்.
*மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து வடாமை பொரிக்கவும்,இல்லையெனில் சிவந்து விடும்.



Thursday, 12 March 2015 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வத்தல் / KATHIRIKKAI VATHAL ( SUN DRIED EGGPLANT ) | SUMMER SPL


print this page PRINT IT
தே.பொருட்கள்

சிறிய கத்திரிக்காய் -5
மஞ்சள்தூள் -3/4 டீஸ்பூன்
உப்பு- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கத்திரிக்காயை கழுவி 4 ஆக நறுக்கி தண்ணீரில் போடவும்.

*பாத்திரத்தில் 3 கப் நீர்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து பாதி அளவு வெந்ததும் நீரை வடிக்கட்டவும்.

*தண்ணீர் வடிந்ததும் கத்திரிக்காயை துணியில் ஈரம் போக உலர்த்தி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.

*காய்ந்ததும் காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

*வற்றகுழம்பு வைத்தால் அருமையாக இருக்கும்.
* இதே போல் கொத்தவரங்காய் மற்றும் அவரைக்காயில் செய்யலாம்.

பி.கு

*காய்கள் பாதியளவு வெந்தால் போதும்.அவரைக்காய் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் கொதி நீரில் போட்டதும் 1 2 நிமிடங்களிலயே எடுத்துவிடவும்.
Sunday, 25 October 2009 | By: Menaga Sathia

பகோடா வத்தல் / Pakoda Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 2 கப்
அரிசிமாவு -2 கப்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் -10
சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடியளவு
இஞ்சி - 1 பெரிய துண்டு


செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+புதினா கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*அரிசிமாவு+ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*தண்ணீர் கொதித்ததும் பொடியாக அரிந்த பொருட்கள்+உப்பு+ஜவ்வரிசி+அரிசிமாவு சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை கொஞ்ச கொஞ்சமா கிள்ளி வைக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.பொரிக்கும் போது பகோடா பொரித்தது போல் வாசனையாக இருக்கும்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
Wednesday, 13 May 2009 | By: Menaga Sathia

ஜவ்வரிசி கஞ்சி வத்தல் / Sago Kanchi Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 4 கப்
உப்பு - தேவைக்கு

அரைக்க:

சீரகம் - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 7

செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தன்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*கொதித்ததும் அரைத்த விழுது+உப்பு+ஜவ்வரிசி சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை ஒரு ஸ்பூனால் கொஞ்ச கொஞ்சமா ஊற்றி எடுக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
4. பாதி தண்ணீர்+ பாதி தக்காளி சாறு சேர்த்து செய்தால் தக்காளி ஜவ்வரிசி வத்தலாகும். இன்னும் நல்லாயிருக்கும்.
Saturday, 4 April 2009 | By: Menaga Sathia

வெங்காய வடகம் அல்லது தாளிப்பு வடகம் / Vengaya(Onion) Vadagam| Thalippu Vadagam | Summer Spl


தே.பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 2 கிலோ
மஞ்சள்தூள் - 1/3 கப்
கடுகு - 1/2 கப்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 கப்
உப்பு - 1/2 கப்
பூண்டு - 4 பெரிய முழு பூண்டு
சீரகம்+சோம்பு தலா 1/4 கப்
கறிவேப்பிலை - 1/3 கப்
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் - 50 கிராம்

செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து கழுவி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுத்தி எடுக்கவும்.


*மிக்ஸியைக் கழுவி அந்த தண்ணீரை வெங்காயத்தில் சேர்க்கவும்.

*மஞ்சள்தூள்,உப்பு[உப்பு கரிக்கும் அளவு இருந்தால் தான் கெடாது]சேர்த்து மண்சட்டியில் அல்லது பிளாஸ்டிக் வாளியில் பிசைந்து வைக்கவும்.

*3 வது நாளில் கடுகு+வெ.உ.பருப்பு+சீரகம்+வெந்தயம்+சுத்தம் செய்த கறிவேப்பிலை+தோலுடன் நசுக்கிய பூண்டு இவற்றை எல்லாத்தையும் வெங்காயத்தில் சேர்த்து பிசைந்து 2 நாள் ஊறவிடவும்.


* 2 நாள் கழித்து பிளாஸ்டி ஷீட்டில் வெங்காயத்தை தண்ணீயில்லாமல் பிழிந்து உருண்டைகளாக பிடித்து காயவைக்கவும்.

*மாலையில் மறுபடியும் அதே தண்ணீயில் போடவும்.இதே மாதிரி அந்த தண்ணீர் வற்றும்வரை காயவைக்கவும்.

*வெங்காயத்தை கையில் எடுத்தால் பொலபொலவென காய வைக்கவும்.


*நன்கு காய்ந்ததும் எண்ணெய் கலந்து வைக்கவும்.

*இது எத்தனை வருடமானாலும் கெடாது.

பி.கு:
*சாம்பார்,துவையல்,வத்தக்குழம்பு,கூட்டு என அனைத்திற்க்கும் தாளிக்க பயன்படுத்தலாம்.வாசனை தூக்கலா இருக்கும்.

*வடகம் நாளாக கலர் மாறிவிடும்,அதனால் கெட்டுவிட்டது என பயப்பட வேண்டும்.

*எப்போழுதும் வடகத்திற்கு சின்ன வெங்காயம் மட்டுமே பயன்படுத்தவும்.

*வடகம் காய்ந்ததும் அளவு குறைந்துவிடும்.எப்போழுதும் தாளிக்கும் பொழுது 1 டீஸ்பூன் அளவு பயன்படுத்தவும்,என்ணெயில் பொரிந்ததும் அதிகமாகும்.

*எங்க ஊர் பாண்டி பக்கமெல்லாம் இந்த வடகம் இல்லாத சமையலே இல்லை எனலாம்.இதைதான் நாங்க பயன்படுத்துவோம்.
01 09 10