Thursday 31 December 2009 | By: Menaga Sathia

கல்கண்டு சாதம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பால் - 1கப்
டைமண்ட் கல்கண்டு - 1 கப்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*அரிசி+பாசிப்பருப்பை குக்கரில் 1கப் பால்+1 1/4 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும்.(நீரில் கரைய நேரமாகும்).

*கல்கண்டு பவுடரை சிறிது நீர் விட்டு பாகுபதம் வரை காய்ச்சி வெந்த அரிசி பருப்பில் சேர்க்கவும்.

*நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை+ஏலக்காய்த்தூள்+மீதமிருக்கும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

*சுவையான கல்கண்டு சாதம் ரெடி.அம்மனுக்கு பிடித்த நைவேத்தியம் இது.
Tuesday 29 December 2009 | By: Menaga Sathia

கொள்ளு - ஒட்ஸ் கொழுக்கட்டை

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
ஒட்ஸ் - 1 + 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு +எண்ணெய்= தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கொள்ளை 4 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.

*1 கப் ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்துப் பொடிக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஒட்ஸில் சேர்க்கவும்.அதனுடன் அரைத்த கொள்ளு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறு உருண்டைகளாக பிடித்து மீதமிருக்கும் 1/2 கப் ஒட்ஸில் பிரட்டி எடுத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சுவையான கொழுக்கட்டை ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

பி.கு:

விருப்பப்பட்டால் ஒழுக்கட்டையில் தேங்காய்ப்பல் சேர்க்கலாம்.
Sunday 27 December 2009 | By: Menaga Sathia

பார்லி - ரவை இனிப்பு பணியாரம்

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
ரவை -1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு


செய்முறை :

* பார்லியை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.பின் அதனுடன் ரவை சேர்த்து மேலும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

*வெல்லத்தை கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டி பார்லியில் கலக்கவும்.அதனுடன் சுக்குத்தூள்+ஏலக்காய்த்தூள்+மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கவும்.
* நெய் விட்டு பணியாரகுழியில் மாவை ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.

கவனிக்க:

பார்லியை 1 கப் நீர் ஊற்றி ஊறவைத்த பின் ரவை போடும் போது சிறிது நீர் விட்டு ஊறவைக்கவும்.அப்போழுது தான் கரைத்த வெல்லம் சேர்க்கும் போது மாவு கெட்டியான பதமா இருக்கும்.
Thursday 24 December 2009 | By: Menaga Sathia

பீர்க்கங்காய்த் தோல் துவையல்

தே.பொருட்கள்:

பொடியாக வெட்டிய பீர்க்கங்காய்த் தோல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 நெல்லிக்காயளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கொள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு


செய்முறை :

*எள்+உளுத்தம்பருப்பு+கொள்ளு வெரும் கடாயில் வறுக்கவும்.

*எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய்+தேங்காய்த்துறுவல் வதக்கவும்.

*சிறிது எண்ணெய் விட்டு பீர்க்கங்காய்த்தோலை வதக்கவும்.

*ஆறியதும் புளி+உப்பு சேர்த்து அனைத்தையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்.
Tuesday 22 December 2009 | By: Menaga Sathia

கீரை ராய்த்தா

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
வெங்காயம் - 1சிறியது
தயிர் - 150 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபில்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை :
*வெங்காயம்+கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கீரை+உப்பு சேர்த்து மூடி வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*கீரை நன்கு வதங்கியதும் ஆறவைத்து தயிரில் கலக்கி பறிமாறவும்.

பி.கு:
கீரை விடும் நீர் வற்றும் வரை வதக்கவும்.விருப்பப்பட்டால் தயிரில் தேங்காய்+சீரகம்+பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கலாம்.நான் பசலை கீரையில் செய்துள்ளேன்.
Sunday 20 December 2009 | By: Menaga Sathia

பிடி கொழுக்கட்டை/Pidi Kozhukattai

தே.பொருட்கள்:

அரிசிமாவு - 2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
வறுத்த எள் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
உப்பு- 1 சிட்டிகை


செய்முறை :

*வெல்லத்தை சிறிது நீர் விட்டுக் காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*அரிசிமாவு+உப்பு+தேங்காய்த்துறுவல்+எள்+பாசிப்பருப்பு+வடிகட்டிய வெல்லம் அனித்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*அதை உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
Thursday 17 December 2009 | By: Menaga Sathia

உருளை சாலட்

தே.பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய கேரட்,வெங்காயம்,தக்காளி,
வெள்ளரிக்காய்,மாங்காய் கலந்த கலவை - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு
முளைக்கட்டிய கறுப்புக்கடலை - 1/4 கப்
உப்பு- தேவைக்கு


செய்முறை :

*உருளைக்கிழங்கை பொடியாக அரிந்து +நறுக்கிய காய்கறிகள்+பயிறு+உப்பு+ஆலிவ் எண்ணெய்+மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
Tuesday 15 December 2009 | By: Menaga Sathia

தேங்காய் கட்லெட்


தே.பொருட்கள்:
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
பொடித்த ஒட்ஸ் - 1/4 கப்
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*தேங்காய்த்துறுவல்+மசித்த உருளைக்கிழங்கு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை+உப்பு+பட்டாணி அனைத்தையும் கெட்டியாக பிசையவும்.

*பொடித்த ஒட்ஸையும்,காய்ந்த தேங்காய்த்துறுவலையும் ஒரு தட்டில் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*பிசைந்த வைத்துள்ள மாவை சிரு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸ் கலவையில் புரட்டி எடுக்கவும்.

*அதனை ப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்.ஏனெனில் வறுக்கும் தேங்காய்த்துறுவல் கொட்டாது.

*பிறகு தவாவில் எண்ணெய் விட்டு கட்லெட்டுகளாக சுட்டெடுக்கவும்.
Sunday 13 December 2009 | By: Menaga Sathia

முட்டை பரோட்டா

ஹர்ஷினி அம்மாவின் கொத்து பரோட்டா குறிப்பை பார்த்து செய்தேன்.இதில் பரோட்டா குருமா நான் சேர்த்து செய்துள்ளேன்.மிகவும் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்:

பரோட்டா - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
முட்டை - 3
பரோட்டா குருமா - 3 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பரோட்டா செய்முறையை இங்கே பார்க்கவும்.

*பரோட்டாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+தக்காளி+கரம் மசாலா+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*பின் முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.பரோட்டா சேர்த்து நன்கு கொத்தவும்.

*பரோட்டா குருமா சேர்க்கவும்.இல்லையெனில் தண்ணீர் தெளிக்கவும்.

*பரோட்டாவில் உப்பு இருப்பதால் பார்த்து போடவும்.

*நன்கு கொத்தியதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


பி.கு:

விருப்பப்பட்டால் இதனுடன் கொத்துக்கறியும் சேர்க்கலாம்.காரமாக இருந்தால் எலுமிச்சைசாறு சேர்க்கவும்.
Thursday 10 December 2009 | By: Menaga Sathia

ரவை பணியாரம்

தே.பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :

*ரவையை உப்பு+தயிர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

*அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகள தாளித்து ரவையில் கலந்து தோசை மவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

*பணியாரக் குழியில் மாவை விட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
Wednesday 9 December 2009 | By: Menaga Sathia

ப்ரோக்கலி 65

தே.பொருட்கள்:

ப்ரோக்கலி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
ரெட் கலர் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு



செய்முறை :

*ப்ரோக்கலியை சிறிய பூக்களாக பிரித்து உப்புப் போட்ட வெந்நீரில் சிறிது நேரம் போடவும்.

*பொடியாக அரிந்த பச்சை மிளகாய்+கலர்+இஞ்சி பூண்டு விழுது+ப்ரோக்கலி+சோளமாவு+மிளகாய்த்தூள்+அரிசிமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


பி.கு:

இதே செய்முறையில் காலிப்ளவரிலும் செய்யலாம்.
Monday 7 December 2009 | By: Menaga Sathia

பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல்

தே.பொருட்கள்:

பீர்க்கங்காய் - 3 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - சிறிது

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பின் பீர்க்கங்காய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*தண்ணீர் ஊற்றதேவையில்லை.காய் விடும் நீர் போதுமானது.

*வெந்ததும் வேர்க்கடலை+தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Thursday 3 December 2009 | By: Menaga Sathia

சுறா புட்டு

தே.பொருட்கள்:

சுறாமீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5
இஞ்சி - சிறுத்துண்டு


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும்.

*வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் )

*பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும்.

*வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து இஞ்சி+பூண்டு+வெங்காயம்+பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் மீனைப் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு:

விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.
Tuesday 1 December 2009 | By: Menaga Sathia

பழக்கலவைத் தொக்கு

தே.பொருட்கள்:

பழக்கலவை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் - 1சிட்டிகை

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு


செய்முறை :

*பழங்களை சதுரதுண்டங்களாக நறுக்கி குக்கரில் நீர் விடாமல் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்த பழங்களை மசிக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

*உடனே மசித்த பழக்கலவையை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி எடுக்கவும்.

*மோர்,ரசம் சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.


பி.கு:

*பழங்கள் அதிகமாக இருந்தால் இப்படி செய்யலாம்.

*நான் சேர்த்திருக்கும் பழங்கள் க்ரீன் ஆப்பிள்+பைனாப்பிள்+மஞ்சள் மற்றும் வெள்ளை மெலன் பழங்கள்.
Sunday 29 November 2009 | By: Menaga Sathia

அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்



செய்முறை :

*அரைக்க கொடுத்துள்ளவைகளை முதலில் பொடித்து பின் நீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

*சிக்கனில் தயிர் + 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+மீதமிருக்கும் இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+கரம் மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த மசாலா விழுதினை போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

*பின் சிக்கனை போட்டு வதக்கி உப்பு+மஞ்சள்தூள் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதிக்கும் போது தோல்சீவி துண்டுகளாகிய உருளைக்கிழங்கைப்போடவும்.

*குழம்பு நன்கு கொதித்து சிக்கனும் உருளையும் நன்கு வெந்ததும் இறக்கவும்.

*கமகமக்கும் சிக்கன் குழம்பு ரெடி.
Thursday 26 November 2009 | By: Menaga Sathia

கீரை பட்டாணி புலாவ்


தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
ப்ரோசன் பச்சைப்பட்டாணி - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் - 6
பொடியாக அரிந்த பசலைக்கீரை - 1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்


செய்முறை :

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் கீரை+பட்டாணி சேர்த்து லேசாக வதக்கி அரிசி+தேங்காய்ப்பால்+தண்ணீர்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*3 விசில் அல்லது வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஈஸியான கீரை பட்டாணி புலாவ் ரெடி.

*இதற்க்கு முட்டை தொக்கு,உருளை வறுவல் நன்றாகயிருக்கும்.


பி.கு:

பட்டாணிக்கு பதில் கேரட் துறுவல் சேர்த்தும் செய்யலாம்.
Wednesday 25 November 2009 | By: Menaga Sathia

விருதுகள்!!


இசைச்செல்வி,சுஸ்ரீ,சுதாகர் அண்ணா மூவரும் எனக்கு விருது கொடுத்திருக்காங்க.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை

பாயிசாகாதர்
கீதா ஆச்சல்
ஹர்ஷினி அம்மா
ஜலிலாக்கா
மலிக்கா
பவித்ரா
மலர் காந்தி
தேனம்மை லக்‌ஷ்மண்
நித்யா
ஷாமா நாகராஜன்
திவ்யா விக்ரம்
ப்ரியாராஜ்
மலர்விழி
சித்ரா
அம்மு மது
ஸ்ரீப்ரியா
டவுசர் பாண்டி
இராகவன் நைஜிரியா
ஸாதிகா அக்கா
சாருஸ்ரீராஜ்
தமிழ்நாடான்
ராஜ்
சந்ரு
கிருத்திகா
சிங்கக்குட்டி
சஞ்சய் காந்தி
சம்பத்குமார்
தேவன்மாயம்
சிவனேசு
சூர்யா கண்ணன்
ஜெட்லி
ப்ரியமுடன் வசந்த்
நாஸியா
நவாஸுதின்
ஷஃபிக்ஸ்
கோபிநாத்
கோபி
ஜெகநாதன்
கிருத்திகன்
ஹூசைனம்மா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவு இட்டு கலக்குறாங்க.யாரையும் தவிர்க்க முடியவில்லை.அதனால் என்னால் முடிந்த வரை அனைவருக்கும் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.நீங்களும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.








Tuesday 24 November 2009 | By: Menaga Sathia

பரோட்டா&முட்டைக் குருமா

சகோதரர் தமிழ்நெஞ்சம் அவர்களின் தளத்தில் 3 நிமிடத்தில் பரோட்டா செய்வதெப்படி? என்று ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார்.அதைப் பார்த்து நான் செய்த பரோட்டா ஒரளவுக்கு நன்றாக வந்தது.இப்போழுது தான் முதன்முதலில் பரோட்டா செய்தேன்.வீடியோவுடன் எளிதாக இருந்ததில் செய்வதற்க்கு ஈஸியாக இருந்தது.அவருக்கு மனமார்ந்த என் நன்றி!!

தே.பொருட்கள்:


பரோட்டாவுக்கு:

மைதா - 5 கப்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்+தேவைக்கு
நெய் 2 டேபிள்ஸ்பூன்

குருமாவுக்கு:

முட்டை - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மல்லித்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2


செய்முறை :

*மைதா+உப்பு+நெய்+சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவை நன்கு தளர பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி ஊறவிடவும்.

*ராத்திரி செய்வதாக இருந்தால் காலையிலேயே பிசைந்து வைக்கலாம்.

*ஊறிய மாவை நன்கு அடித்து தேவையான அளவில் உருண்டைகள் போடவும்.

*ஒவ்வொரு உருண்டையின் போல் எண்ணெய்த் தடவி மறுபடியும் ஈரத்துணியால் மூடி 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*பின் உருண்டையை பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து கையால் நன்கு அடிக்கவும்.அதாவ்து கிழிந்த பனியன் போல நன்கு அடிக்கவும்.

*அதை அப்படியே சுருட்டி அதன் மேல் எண்ணெய்த் தடவி வைக்கவும்.இப்படியாக அனித்து உருண்டைகளை செய்யவும்.

* கடாய் காயவைத்து உருட்டிய உருண்டையை எண்ணெய் தொட்டு கையால் தட்டி வேகவைத்து எடுக்கவும்.

*4 பரோட்டக்கள் சுட்டதும் 2 கையாலும் பரோட்டகளை தட்டவும்.அப்போழுது தான் லேயராக வரும்.

*முட்டையின் வெள்ளைகரு+மஞ்சள்கரு தனியாக பிரிக்கவும்.

*வெள்ளைகரு நன்கு அடித்து கடாயில் ஊற்றி பொடிமாஸ் போல கொத்தி எடுத்து தனியாக வைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காய்ம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+கரம்மசாலா+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*தேவையானளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.

*கொதித்ததும் மஞ்சள்கருவை ஒவ்வொன்றாக ஊற்றி வேகவிடவும்.

*மஞ்சள் கரு வெந்ததும் பொடித்த வெள்ளைக்கருவினை போட்டு ஒரு கொதி கொதித்ததும் இறக்கவும்.

*பரோட்டவுடன் பறிமாறவும்.
Sunday 22 November 2009 | By: Menaga Sathia

ஆப்பம் / Appam

செய்துட்டேன் செய்துட்டேன் நானும் ஆப்பம் செய்து சாப்பிட்டேன்.கிட்டத்தக்க 3 வருஷமாச்சு ஆப்பம் சாப்பிட்டு.இந்த வருஷம் எங்கண்ணி ஆப்பசட்டியும்,பணியாரகல்லும் வாங்கி வந்து கொடுத்தாங்க.அந்த ஆப்பசட்டிக்கு இப்பதான் நேரம் வந்துச்சு.யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக...

சுதாகர் அண்ணா அவர் பதிவில் மென்மையான ஆப்பம் பதிவிட்டிருந்தார்.அதிலிருந்து ஆப்பத்துல மேல ஒரு கண்ணு.ஆவ்ருடைய ஆப்ப பதிவால் தான் எனக்கு ஆப்பம் செய்ய தோனுச்சு.அதனால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!!.அந்த பதிவைப் பார்த்து சில மாற்றங்களுடன் நான் செய்த ஆப்பம்...

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கலரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
இளநீர் - 1
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*அரிசி வகைகள்+உளுந்து+ஜவ்வரிசி அனைத்தையும் 4 மணிநேரம் ஊறவைத்து இளநீர்+தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

*அரைத்த மாவிலிருந்து 2 கரண்டி மாவெடுத்து 1 கப் நீர்விட்டு கரைத்து ராகி கூழ் போல காய்ச்சவும்.

*ஆறியதும் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.மாவு தோசைமாவு பதத்திற்க்கு இருக்கனும்.

*நான் ஸ்டிக் ஆப்பக் கடாயில் ஒரு குழிக்கரண்டி மாவு ஊற்றி ஆப்பசட்டியால் ஒரு சுற்று சுற்றி மூடி வேகவிடவும்.

*வெந்ததும் எடுக்கவும்.திருப்பி போடக்கூடாது.தேங்காய்ப் பாலுடன் பறிமாறவும்.

பி.கு

மாவை கூழ் போல் காய்ச்சி ஊற்றுவதால் ரொம்ப சாப்டா இருந்தது.சீக்கிரம் புளித்துவிட்டது.
Thursday 19 November 2009 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு காலா ஜாமூன்

தே.பொருட்கள்:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1/4 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதாமாவு - 3/4 கப்
பால் - சிறிதளாவு
எண்ணெய் - பொரிக்க
புட் கலர் - 1 சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*3/4 கப் பால் பவுடர்+ 1/4 கப் மைதா+மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது பால் தெளித்து பிசையவும்.இந்த கலவை வெள்ளைக்கலரில் இருக்கனும்.

*மீதமிருக்கும் பால் பவுடர்+மைதா+கலர் சேர்த்து பால் கலந்து கெட்டியாக மிருதுவாக பிசையவும்.

*வெள்ளைக் கலரில் இருக்கும் மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி,அதனுள் கலர் உருண்டையை பட்டாணி அளவு எடுத்து ஸ்டப் செய்யவும்.

*இப்படியாக உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

*திரும்பவும் ஒருமுறை உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கவும்.அப்பொழுது கறுப்பு கலரில் இருக்கும்.

*சர்க்கரை நீர் விட்டு காய்ச்சி பிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+நெய்++பொரித்த் உருண்டைகள் சேர்க்கவும்.

*3 அல்லது 4 மணிநேரம் கழித்து பரிமாறலாம்.
Tuesday 17 November 2009 | By: Menaga Sathia

வாழைப்பழ அப்பம்

தே.பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 1
ஏலக்காய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
ரவை - 2டேபிள்ஸ்பூன்
கோதுமைமாவு - 1/2 கப்
உப்பு -1 சிட்டிகை
எண்ணெய் -பொரிக்க

செய்முறை :

*வெல்லத்தை சிறிது நீர்விட்டு கரைத்து மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.
*ஒரு பாத்திரத்தில் வாழப்பழத்தைப் போட்டு மசிக்கவும்.

*அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்ப் பொடி+ரவை+உப்பு+கோதுமைமாவு+வெல்லம் கரைத்த நீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவிட்டு மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து ஊற்றவும்.

*ஒரு அப்பம் மேலே எழும்பி வந்ததும் இன்னொன்று ஊற்றவும்.

*இப்படியாக மாவை அப்பங்களாக ஊற்றி எடுக்கவும்.

கவனிக்க:

மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமலும்,தண்ணியாக இல்லாமலும் இருக்கனும்.இந்த அப்பம் மிகவும் மென்மையானதாக இருக்கும்.
Sunday 15 November 2009 | By: Menaga Sathia

தக்காளி புலாவ்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
தக்காளி விழுது - 1 1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 1 1/2 கப்
புதினா - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2


செய்முறை :

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+புதினா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் தக்காளி விழுது+மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வதக்கி தேங்காய்ப்பால்+1 கப் நீர்+உப்பு +அரிசி சேர்த்து வேகவிடவும்.

*3 விசில் அல்லது வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஈஸியான தக்காளி புலாவ் ரெடி.

*இதற்க்கு ராய்த்தா,உருளை வறுவல்,எண்ணெய் கத்திரிக்காய் நன்றாகயிருக்கும்.



Saturday 14 November 2009 | By: Menaga Sathia

விருது


ஜலிலா அக்கா எனக்கு ஒரு விருது கொடுத்து சந்தோஷபடுத்தியிருக்காங்க.அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை மற்ற சமையல் ராணிகளுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

1.ப்ரியா
2.ப்ரியாராஜ்
3.பவித்ரா
4.நித்யா
5.ப்ரியா
6.சித்ரா
7.லஷ்மி வெங்கடேஷ்
8.ஸ்ரீவித்யா
9.ஷாமா நாகராஜன்
10.செல்வி
11.மலர் காந்தி
12.திவ்யா விக்ரம்

இந்த விருதினை மற்றவர்களுக்கும் பகிர்ந்துக்கலாம்..
Thursday 12 November 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் பூரி & மசாலா

தே.பொருட்கள்:

பூரிக்கு

ஒட்ஸ் - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

உருளை மசாலா

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*ஒட்ஸை வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடிக்கவும்.அதனுடன் கோதுமைமாவு+உப்பு+வெந்நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறு உருண்டையாக எடுத்து மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தேய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய் நீளவாக்கில் அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+மஞ்சள்தூள்+உருளைக்கிழங்கு சேர்த்து 1/4 கப் நீர் சேர்க்கவும்.

* ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

*சுவையான பூரி மசால் ரெடி!!

பி.கு:

பூரிக்கு மாவு பிசைந்தவுடன் அப்பவே தேய்த்து சுடனும்.தேய்க்கும் போது ரொம்ப மெல்லியதாக தேய்க்ககூடாது.அப்படித் தேய்த்தால் பூரி உப்பாது.

சப்பாத்திக்கு மாவு பிசைந்து எவ்வளவு நேரம் ஊறவைக்கிறோமோ அவ்வளவு சாப்டாக இருக்கும்.மெல்லியதாக தேய்க்கனும்.
Tuesday 10 November 2009 | By: Menaga Sathia

தக்காளி குருமா/Tomato Kurma


தே.பொருட்கள்:

வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிது
தனியாத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு -2
கசகசா -1/2 டீஸ்பூன்

செய்முறை :

*ஒரு தக்காளியை வெந்நீரில் போட்டு தோலெடுத்து அரைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+அரைத்த தக்காளி விழுது+பச்சை மிளகாய்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் அனித்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேவையான நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் தேங்காய்விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்தி அனைத்துக்கும் இந்த குருமா நன்றாக இருக்கும்.
Sunday 8 November 2009 | By: Menaga Sathia

பார்லி கேசரி

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
பால் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கேசரி கலர் - 1 சிட்டிகை



செய்முறை :

*நான் ஸ்டிக் கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பார்லியை வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.

*முந்திரி திராட்சையை வறுக்கவும்.பாலை நன்கு சுண்ட காய்ச்சவும் அதாவது 1/2 கப் ஆகும் வரை காய்ச்சவும்.

*அதே கடாயில் தண்ணீர்+பால் விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதிக்கும் போது கேசரிகலர்+பார்லியை சேர்க்கவும்.

*பார்லி நன்கு வெந்து வரும் சமயத்தில் சர்க்கரை சேர்க்கவும்.

*சர்க்கரை கரைந்து அனைத்தும் நன்கு சுண்டி வரும் போது ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+பால் பவுடர்+மீதமிருக்கும் நெய் சேர்த்து இறக்கவும்.


பி.கு:

இதன் சுவை ரொம்ப நல்லாயிருந்தது.என்ன் கொஞ்சம் அல்வாபோல் கொழகொழன்னு இருந்தது.
Saturday 7 November 2009 | By: Menaga Sathia

பிடித்த பிடிக்காத 10

இத்தொடரை எழுத அழைத்த தோழி மலிக்காவுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

கவிஞர்

பிடித்தவர் –கண்ணதாசன்

பிடிக்காதவர்- பா.விஜய்



பூ

பிடித்தது - ரோஜா,மல்லிகைப்பூ

பிடிக்காதது- வாசனையில்லாதப்பூக்கள் அனைத்தும்


இயக்குனர்

பிடித்தவர்- மகேந்திரன்

பிடிக்காதவர்- எஸ் .ஜே சூர்யா,பேரரசு


அரசியல்வாதி

பிடித்தவர்- ஜெயலலிதா[இவரின் துணிச்சலுக்காக பிடிக்கும்]

பிடிக்காதவர்-ராமதாஸ்,திருமாவளவன்


விளையாட்டு

பிடித்தது - ஹாக்கி,செஸ்

பிடிக்காதது - வாலிபால்

நடிகை

பிடித்தவர் - ஜோதிகா[மொழி படத்துக்காக]

பிடிக்காதவர் - லைலா

நடிகர்

பிடித்தவர்- விக்ரம்

பிடிக்காதவர்- தனுஷ்



பேச்சாளர்

பிடித்தவர்- சாலமன் பாப்பையா

பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்


எழுத்தாளர்

பிடித்தவர்- ரமணிச்சந்திரன்,ராஜேஷ் குமார்

பிடிக்காதவர்-ஆர்னிகா நாசர்


இசையமைப்பாளர்

பிடித்தவர் - இளையராஜா

பிடிக்காதவர்- தேவா.

நான் அழைக்கும் பதிவர்கள்

ஸாதிகா அக்கா

கோபிநாத்

ஆர்.கோபி
Thursday 5 November 2009 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சட்னி/Brinjal Chutney

தே.பொருட்கள்:


கத்திரிக்காய் - 1 பெரியது
புளி - 1 எலுமிச்சை பழளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்பால் - 1/2 கப்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கத்திரிக்காய்+தக்காளி பொடியாக அரிந்து வேகவைத்து மசிக்கவும்.

*புளியை கெட்டியாக கரைக்கவும்.வெங்காயம்+பச்சை மிளகாய் பொடியாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாயை வதக்கவும்.

*பின் மசித்த கத்திரிக்காய்+உப்பு+மஞ்சள்தூள்+கெட்டியான புளிகரைசல்+தேங்காய்ப்பால் அனைத்தும் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இட்லி,தோசை,சாதம்,சப்பாத்தி அனைத்துக்கும் நன்றாகயிருக்கும்.

பி.கு:

விதையில்லாத பெரிய கத்திரிக்காயில் செய்தால் இந்த சட்னி நன்றாகயிருக்கும்.
Wednesday 4 November 2009 | By: Menaga Sathia

முட்டை வேர்க்கடலை ப்ரை

நாம் சாதரணமாக வறுவல் வகைகளை எண்ணெய் விட்டு வறுப்போம்.அப்படி செய்யாமல் வேர்க்கடலையை மிக்ஸியில் மாவாக்கி அதில் செய்தால் எண்ணெய் விட்டு செய்யத் தேவையில்லை.வேர்க்கடலையில் விடும் எண்ணெயே போதும்.

என்ன இதற்க்கு கொஞ்சம் நேரமும்,பொறுமையும் வேணும்.நான் ஸ்டிக் கடாயில் செய்தால் நல்லது.முட்டையை எண்ணெய் விட்டு வறுக்கும் போது வெடிக்கும் ஆனால் வேர்க்கடலை மாவில் புரட்டி செய்தால் வெடிக்காது.கட்லட் கூட நிலக்கடலையில் பிரட்டி எண்ணெய் விடாமல் செய்யலாம்.நீங்களும் செய்து பாருங்களேன்.....


தே.பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 4
வேர்க்கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
உப்பு - தேவைக்கு


செய்முறை :

* முட்டையை இரண்டாக கட் செய்யவும்.அதில் உப்பு+மிளகாய்த்தூள்+நசுக்கிய பூண்டு சேர்த்துக் கலக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் முட்டையை வேர்க்கடலை மாவில் புரட்டி இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

*இதற்க்கு கொஞ்சநேரம் ஆகும்.எண்ணெய்விடத்தேவையில்லை.வேர்க்கடலை விடும் எண்ணெயே போதுமானது.
Tuesday 3 November 2009 | By: Menaga Sathia

சிக்கன் இஞ்சி குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 10
பூண்டுப்பல் - 10
இஞ்சி - 2 அங்குலத்துண்டு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1கப்
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு


செய்முறை :

*சிக்கனை சுத்தம் செய்யவும்.இஞ்சி பூண்டு +பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி நீளவாக்கில் அரியவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது +பச்சை மிளகாய் விழுது+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் சிக்கன்+உப்பு+மஞ்சள்தூள்+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*சிக்கன் வெந்ததும் புதினா+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.


பி.கு:

* இதே போல் மட்டனிலும் செய்யலாம்.

* இந்த குழம்பிற்க்கு பூண்டை விட இஞ்சி அதிகமாக போடனும்.காரம் வேண்டுபவர்களுக்கு பச்சை மிளகாயை அதிகமாக போடவும்.
Sunday 1 November 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் கொள்ளு உசிலி

தே.பொருட்கள்:

பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

உசிலிக்கு:

கொள்ளு -1/2 கப்
காய்ந்த மிளகாய் -3
மிளகு - 6
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -3


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.

*கொள்ளை 5 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+காய்ந்த மிளகாய்+மிளகு+சோம்பு+பூண்டுப்பல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி பீன்ஸ்+உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து வேக விடவும்.

*மற்றொரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த கொள்ளினை சேர்த்து பொலபொலவென வரும் வரை வதக்கவும்.

*பீன்ஸ் வெந்ததும் வதக்கிய கொள்ளினை சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு:

*விருப்பப்பட்டால் தேங்காய் துறுவல் சேர்க்கலாம்.

*உசிலி துவரம்பருப்பில் செய்து போரடித்துவிட்டால் கொள்ளு,காராமணி சேர்த்து செய்யலாம்.
Thursday 29 October 2009 | By: Menaga Sathia

கேரட் ஒட்ஸ் மஃபின்

தே.பொருட்கள்:

துருவிய கேரட் - 2
முட்டையின் வெள்ளைக்கரு - 2
தயிர் - 1 கப்
ஒட்ஸ் -1 கப்
கோதுமை மாவு - 1கப்
காய்ந்த திராட்சை - 10
தேன் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு



செய்முறை :

*ஒரு பவுலில் தயிர்+ஒட்ஸ்+திராட்சை கலக்கவும்.

*இன்னொரு பவுலில் கோதுமை மாவு+பேக்கிங் பவுடர்+உப்பு+பட்டைத்தூள் கலக்கவும்.

*முட்டை வெள்ளைக்கரு+தேனை ஒட்ஸில் நன்கு கலந்து அடித்துக் கொள்ளாவும்.

*கோதுமை+ஒட்ஸ் கலவை இரண்டையும் நன்கு கலந்து அதில் துருவிய கேரட் கலந்து மஃபின் கப்பில் ஊற்றவும்.

*அவனை 350 டிகிரியில் 20-25 நிமிடம் டைம் செட் செய்து பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் கப்பிலிருந்து ஈஸியாக எடுக்க வரும்.
Tuesday 27 October 2009 | By: Menaga Sathia

சிக்கன் தந்தூரி

தே.பொருட்கள்:

சிக்கன் லெக்பீஸ் - 1/2 கிலோ
தயிர் - 125 கிராம்
கரம் மசாலா - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
ரெட்கலர் - 1 சிட்டிகை
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு


செய்முறை :

*சிக்கனை சுத்தம் செய்து அதில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து 1மணிநேரம் ஊறவைக்கவும்.

*அவனில் 300 டிகிரியில் 20 நிமிடம் வைத்து க்ரில் செய்து எடுக்கவும்.


பி.கு:

*.அவரவர் அவனுக்கேற்ப டைம் செட் செய்யவும்.

*தந்தூரி மசாலா இல்லையெனில் மிளகாய்த்தூளை கொஞ்சம் தேவைக்கேற்ப அதிகம் சேர்த்து செய்யவும்.
Sunday 25 October 2009 | By: Menaga Sathia

பகோடா வத்தல் / Pakoda Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 2 கப்
அரிசிமாவு -2 கப்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் -10
சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடியளவு
இஞ்சி - 1 பெரிய துண்டு


செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+புதினா கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*அரிசிமாவு+ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*தண்ணீர் கொதித்ததும் பொடியாக அரிந்த பொருட்கள்+உப்பு+ஜவ்வரிசி+அரிசிமாவு சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை கொஞ்ச கொஞ்சமா கிள்ளி வைக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.பொரிக்கும் போது பகோடா பொரித்தது போல் வாசனையாக இருக்கும்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
Thursday 22 October 2009 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் -வாசனைக்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது

செய்முறை :

*எலுமிச்சை பழத்தை பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைஅக்ளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.

பி.கு:

1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.
2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.
3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
Wednesday 21 October 2009 | By: Menaga Sathia

கொத்தவரங்காய் பொரியல்

தே.பொருட்கள்:

கொத்தவரங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் -1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் -4
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை :

* கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவகைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*பின் வெந்த காயை கொட்டி,அரைத்தமசாலாவுடன் சிறிது நீர் சேர்த்து கிளறவும்.

*நீர் சுண்டிய பின் நன்கு கிளறி இறக்கவும்
Tuesday 20 October 2009 | By: Menaga Sathia

புளியோதரை (புளி சாதம்)


தே.பொருட்கள்:

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 3கப்
புளி- 3எலுமிச்சை பழ அளவு(100கிராம்)
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய்- தே.அளவு
நல்லெண்ணெய்- 1 1/2 டேபிள்ஸ்பூன்


தாளிக்க:

காய்ந்த மிளகாய்- 4
கடலைப்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெ.உ.பருப்பு- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்
கருவேப்பில்லை- சிறிது
வறுத்த வேர்க்கடலை- 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க வேண்டியவை:

தனியா- 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கா.மிளகாய்- 3
கடலைப்பருப்பு- 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
வெந்தயம்- 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.

* புளியை கெட்டியாக 1கப் அளவுக்கு கரைத்துக்கொள்ளவும்,மஞ்சள் தூள்+உப்பு சேர்க்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை பொடித்து,புளி பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

*1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

பி.கு:

இதற்கு தொட்டுக்கொள்ள இரால்,உருளைக்கிழங்கு ,கறி வருவல்,மசால் வடை,புதினா துவையல் நன்றாக இருக்கும்.

மீதமிருக்கும் பொடியை வறுவல்,வத்தக்குழம்புக்கு பயன்படுத்தலாம்.
Monday 19 October 2009 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு சுகியன்

தே.பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
வெல்லம்- 1/4 கப்
மைதா - 1/2 கப்
தோசை மாவு - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*பாசிப்பருப்பை மலர வேகவைத்து நீரை வடிகட்டி மசிக்கவும் அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

*தேங்காய்த்துறுவல்+மசித்த பாசிப்பாருப்பை வெறும் கடாயில் லேசாக வதக்கவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக்காய்ச்சி மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.

*வடிகட்டிய வெல்லத்தில் பிசுப்பிசுப்பு பதம் வந்ததும் தெங்காய்த்துருவல்+பசிப்பருப்பு+ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும்.

*அதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதா+உப்பு+தோசைமாவு சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*பிடித்து வைத்த உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.



பி.கு:

தோசை மாவு சேர்த்து கரைப்பதால் ரொம்ப மென்மையாக இருக்கும்.கடலைப்பருப்பில் செய்வதை விட பாசிப்பருப்பில் செய்தால் இன்னும் டேஸ்டாக இருக்கும்.தேங்காய்துறுவல்+பாசிப்பருப்பை நன்கு வதக்கினால் 2 நாள் வரை வைத்திருக்கலாம்.
Friday 16 October 2009 | By: Menaga Sathia

இனிப்பு பூந்தி/Sweet Bhoondi

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை,டைமண்ட் கல்கண்டு - தேவைக்கு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.

*அதனுடன் மஞ்சள் கலர் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.

*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.

*முந்திரி,திராட்சையை நெய்யில் வறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.2 விரல்களால் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கனும்.அதுதான் பூந்திக்கு சரியான பதம்.

*அடுப்பை நிறுத்திவிட்டு பூந்தி+ஏலக்காய் பொடி+கல்கண்டு+முந்திரி திராட்சை+மீதமிருக்கும் நெய் சர்க்கரை பாகில் கலந்து மூடி வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூந்தி பொலபொலவென இருக்கும்.


பி.கு:

*இது நான் லட்டுக்காக செய்த குறிப்பு.சர்க்கரை பாகு ஆறிவிட்டதால் லட்டு பிடிக்க வரவில்லை.இளஞ்சூடாக இருக்கும் போதே நெய் தொட்டு லட்டுகளாக பிடிக்கவும்.

*கரைத்த கடலைமாவில் 3 பங்காக பிரித்து சிவப்பு+பச்சை+மஞ்சள் கலர் சேர்த்து கலர் பூந்தி செய்யலாம்.பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.

கீரை சுண்டல் /Keerai Sundal

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
பொடித்த ஒட்ஸ் - 1கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு

செய்முறை :

*கீரையை சுத்தம் செய்து லேசாக வதக்கி பச்சை மிளகாய்+உப்பு+சீரகம் சேர்த்து அரைக்கவும்.

* அதில் பொடித்த ஒட்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளைத் தாளித்து.தேங்காய்த் துறுவல் வேக வைத்த உருண்டையில் சேர்க்கவும்.

பி.கு:

நான் சேர்த்திருப்பது முருங்கை கீரை.சுவை நன்றாக இருந்தது.
Thursday 15 October 2009 | By: Menaga Sathia

வெல்ல அதிரசம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து தண்ணியில்லாமல் வடிகட்டி நிழலில் ஈரமில்லாமல் உலர்த்தி மாவாக்கவும்.

*மாவு ரொம்ப நொறநொறன்னு இருக்ககூடாது.

*ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு அது சிறிது நீர்விட்டு காய்ச்சவும்.வெல்லம் கரைந்ததும் மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்கவும்.

*ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு வெல்லத்தை விடவும் அது உருட்டும் பதத்திற்க்கு வந்தால் அதுதான் சரியான பதம்.

*சரியான பதம் வந்ததும் இறக்கி அரிசி மாவு+ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.அதன் மீது நெய்விடவும்.

*பின் உருண்டைகளாக உருட்டி ரொம்ப மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

*சுவையான அதிரசம் ரெடி.

கவனிக்க:

*கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும்,தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

*அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

*மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

*அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும்.ஆறியதும் மெத்தென்று இருக்கும்.
Wednesday 14 October 2009 | By: Menaga Sathia

ஈஸி தட்டை / Easy Thattai

தே.பொருட்கள்:

பச்சரிசிமாவு - 2 கப்
காய்ந்த மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கட்லை - 1/2 கப்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
உருக்கிய பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*மிளகாய்+பெருஞ்சீரகம்+பூண்டுபல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பொட்டுக்கடலை+மிளகு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

*ஊறிய கடலைப்பருப்பு+பொட்டுக்கடலை மாவு+அரைத்த மிளகாய் விழுது+உப்பு+உருக்கிய பட்டர்+கறிவேப்பிலை இவற்றை அரிசி மாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவு சிறு உருண்டையாக எடுத்து ஒரு ப்ளாஸ்திக் கவரில் எண்ணெய் தொட்டு வட்டமாக தட்டி பேப்பரில் போட்டு உலர விடவும்.

*ரொம்ப நேரம் உலர விடக்கூடாது அப்படி செய்தால் பேப்பரிலிருந்து எடுக்கும் போது தட்டை உடைந்து விடும்.

*எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பொன்னியரிசி (புழுங்கலரிசி) தட்டையின் செய்முறைக்காண இங்கே க்ளிக் செய்யவும்.


பி.கு:

கடையில் விற்கும் அரிசிமாவில் செய்தேன்.செய்வதற்க்கும் மிக எளிது.
Tuesday 13 October 2009 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு ஒமப்பொடி

இது என்னுடைய 150 வது பதிவு.எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளுக்கும்,பாலோவர்ஸ் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி,நன்றி!!


தே.பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாமல் மசிக்கவும்.

*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு+கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.


பி.கு:

உருளைக்கிழங்கை தேவைக்கு அதிகமா வேகவைத்துவிட்டேன்.அதை வீணாக்கமல் இப்படி செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தே.பொருட்கள்:

குட்டி கத்திரிக்காய் - 8
புளி தண்ணீர் - 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 5
கறிவேப்பிலை -சிறிது
தக்காளி - 1 சிறியது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 3 கீறிய பத்தை
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை -சிறிது

செய்முறை :

*புளிதண்ணீரில் உப்பு+தக்காளி கரைத்து வைக்கவும்.

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ளவையுடன் தேங்காய் சேர்த்து விழுதாக ரைக்கவும்.

*வெங்காயம்+பூண்டுப்பல் நறுக்கவும்.கத்திரிக்காயை நான்காக கீறவும்(முழுவதும் வெட்டக்கூடாது).
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்+பூண்டு+கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த விழுதை சேர்த்து புளிகரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
Monday 12 October 2009 | By: Menaga Sathia

இனிப்பு சோமாஸ் / SWEET SOMAS | DIWAL RECIPES

தே.பொருட்கள்:

மைதா - 1 கப்
உப்பு - 1 பிஞ்ச்
உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

பூரணத்துக்கு:

ரவை - 1/2 கப்
மெல்லிய சேமியா -1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை:

*மைதா மாவில் உப்பு+நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.


*தேங்காயை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

*பின் நெய் விட்டு முந்திரி+திராட்சையை வதக்கி ரவை+சேமியாவை பொன் முறுவலாக வறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் வதக்கிய தேங்காய்+ஏலக்காய்த்தூள்+ரவை+சேமியா+முந்திரி +திராட்சை+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*இப்போழுது பூரணம் ரெடி.

*மைதாமாவை நன்கு பிசைந்து சிறு சிரு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும்.



* தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது சோமாஸ் கட்டரில் வெட்டி எடுக்கவும்.

*பின் மிதமான எண்ணெய் சூட்டில் பொரிக்கவும்.சுவையான சோமாஸ் ரெடி.


கவனிக்க:

* மைதாவை நன்கு ஊறவைத்து பிசைவதால் சோமாஸ் நன்றாக இருக்கும்.பிசையும் போது வெந்நீர் ஊற்றி பிசைந்தால் சீக்கிரம் நமத்து போகாது.

* பூரணத்தை வைத்த பிறகு ஓரங்களை நன்றாக மடிக்கவும் இல்லையெனில் பொரிக்கும் போது எண்ணெயில் கொட்டும்.எண்ணெயை ரொம்ப சூடாக இருக்ககூடாது.

*நான் ஓரங்களை மடித்து செய்ததால் இந்த அளவுகள் சரியாக இருக்கும்.சோமாஸ் அச்சியில் செய்தால் அளவுகள் ஒரே சீராக இருக்கும்,சோமாஸும் அதிகமா வரும் ஆனால் பூரணம் இன்னும் அதிகமா செய்யனும் மற்றும் வேலை அதிகமா இருக்கும்.

*இந்த அளவில் செய்ததில் 15 சோமாஸ் வந்தது.

*10 சோமாஸ் செய்ததும் பொரிக்கவும்,பின் மறுபடியும் உருட்டி பொரிக்கவும்.மொத்தமாக பொரித்தால் சோமாஸ் காய்ந்துபோய் எண்ணெயில் பொரிக்கும் போது பூரணம் கொட்டும்.

*சேமியா இல்லையெனில் வெறும் ரவை மட்டும் போட்டு செய்யலாம்.

*இன்னொரு வகை பூரணம் செய்ய பொட்டுக்கடலை மாவு 1/2 கப்+பொடித்த சர்க்கரை 1/2 கப்+ஏலக்காய்த்தூள் 1/4 டீஸ்பூன்+தேங்காய்த்துறுவல் 1/2 கப்.தேங்காயை வறுத்து ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.படங்களில் இருப்பது இந்த பூரணம் வைத்து செய்தது.
01 09 10