Showing posts with label அசைவம். Show all posts
Showing posts with label அசைவம். Show all posts
Tuesday, 11 April 2017 | By: Menaga Sathia

பிடி கருணை கருவாட்டு குழம்பு/ Pidi Karunai Karuvattu(Dry Fish )Kuzhambu

தே.பொருட்கள்
பிடி கருனை -1/4 கிலோ
கருவாடு - 5 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் -1
பூண்டுப்பல் -8
சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன்
புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி -1
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*பிடிகருணையை மண்ணில்லாமல் நன்கு கழுவி தேங்காய் ஒடு சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும்.

*தேங்காய் ஒடு சேர்த்து வேகவைப்பது கருணை கிழங்கு அரிப்பில்லாமல் இருக்கும்.

*புளிபேஸ்டினை 2 கப் நீர் ஊற்றி உப்பு,தக்காளி,சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வேங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
*புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்தபின் சுத்தம் செய்த கருவாடு,வேகவைத்த கிழங்கினை துண்டுகளாக அரிந்து சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பி.கு
*நான் சேர்த்திருப்பது வஞ்சிரம் கருவாடு.

*கருவாடு சேர்க்காமல் இதேபோல் பிடிகருணை காரகுழம்பு செய்யலாம்.

*பிடிகருணை சேர்க்கும்போது வேறு எந்தகாயும் சேர்க்கவேண்டாம்.
Thursday, 23 March 2017 | By: Menaga Sathia

பச்சை கத்திரிக்காய் சென்னாகுன்னி பொரியல்/ Green Brinjal Sennakunni(Dried Baby Shrimps ) Poriyal

 சென்னாகுன்னி என்பது காய்ந்த இறால்,இதனை கத்திரிக்காயுடன் சேர்த்து பொரியல் செய்தால் மிக நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்
சென்னாகுன்னி - 1/4 கப்
பச்சை கத்திரிக்காய் -1/4 கிலோ
வெங்காயம் -1
சாம்பார் பொடி -2 டீஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
வடகம் -1 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு

செய்முறை
*வெறும் கடாயில் சென்னாகுன்னியை வாசனை வரும் வரை வறுத்து சுத்தம் செய்துக் கொள்ளவும்.
 *பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகம் +கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*நறுக்கிய கத்திரிக்காய்,சாம்பார் பொடி,உப்பு சேர்த்து வதக்கி தேவைக்கு நீர் ஊற்றி வேகவைக்கவும்.


*கத்திரிக்காய் வெந்ததும் சுத்தம் செய்த சென்னாகுன்னியை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Monday, 6 February 2017 | By: Menaga Sathia

சென்னாகுன்னி இட்லி பொடி / Sennakunni (Dried Baby Shrimps ) Idli Podi | Side Dish For Idli & Dosa

 சென்னாகுன்னி என்பது காய்ந்த சிறிய இறால். இதில் வறுவல்,இட்லி பொடி  செய்யலாம்.இதன் இட்லி பொடி எங்க ஊரில் மிக பிரபலம்.
இட்லிக்கு தொட்டு சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

இந்த பொடியை இட்லியுடன் சாப்பிடும்போது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடகூடாது.

தே.பொருட்கள்

சென்னாகுன்னி - 1/4 கப்
பொட்டுக்கடலை -1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு

செய்முறை
*வெறும் கடாயில் சென்னாகுன்னியை லேசாக மணம்வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.
 *இதனை முறத்தில் போட்டு சூடாக இருக்கும்போதெ கையால் தேய்த்தால் மண் எல்லாம் வந்துவிடும்.பின் மேலோடு புடைத்து எடுத்து தனியாக வைக்கவும்.
*பின் மற்ற பொருட்களில் உப்பை தவிர அனைத்தையும் தனிதனியாக வறுத்து ஆறவைத்த பின் உப்பு மற்றும் சுத்தம் செய்த சென்னாகுன்னியுடன் கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும்.
Wednesday, 2 November 2016 | By: Menaga Sathia

வாணியம்பாடி சிக்கன் பிரியாணி/Vaniyambadi Chicken Biryani


இந்த பிரியாணியில் தக்காளி சேர்க்காமல் வெங்காயத்தினை அரைத்து நன்றாக வதக்கி சேர்க்க வேண்டும்.

தே.பொருட்கள்

பாஸ்மதி -3 கப்
வெங்காயம் -2 பெரியது
கீறிய பச்சை மிளகாய்- 4
புதினா கொத்தமல்லி தலா -1 கைப்பிடி
நெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

சிக்கனில் ஊறவைக்க‌
சிக்கன்- 1/2 கிலோ
தயிர் -1 கப்
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -5 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு -4
பிரியாணி இலை -2

செய்முறை
*வெங்காயத்தினை நன்றாக மைய அரைக்கவும்.

*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களிளை சேர்த்து குறைந்தது 1 மணிநேரமாவது ஊறவைக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காய விழுதினை சேர்த்து குறைந்த தீயில் நன்கு பச்சை வாசனை போகுமளவு வதக்கவும்.

*பின் கீறிய பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
*ஊறவைத்த சிக்கனை சேர்த்து சிக்கன் முக்கால் பதம் வேகும் வரை வதக்கவும்.

*4 கப் நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதிக்கும் போது அரிசியை சேர்க்கவும்.

*தண்ணீர் நன்கு வற்றி வரும் போது தோசைகல்லை காயவைத்து அதன் பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.


*பின் நெய் சேர்த்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

பி.கு

*வெங்காய விழுதினை நன்கு வதக்கவும் இல்லையெனில் பச்சை வாசனை அடிக்கும்.

*சிக்கன் நீர் விடும் மேலும் வெங்காய விழுது சேர்த்திருப்பதால் நான் 1/2 கப் நீர் குறைத்து சேர்த்துள்ளேன்.


Friday, 17 June 2016 | By: Menaga Sathia

நெஞ்சு எலும்பு குழம்பு / Nenju Elumbu Kuzhambu

 தே.பொருட்கள்
நெஞ்சு எலும்பு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -2 கப்
தக்காளி -1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கெட்டி தேங்காய்ப்பால் -1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -1
பிரியாணி இலை -2

செய்முறை
*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 *வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்க்கவும்.
 *தக்காளி நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த எலும்பினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 *எலும்பின் நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 *தேவையான நீர் மற்றும் உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

 *கடைசியாக தேங்காய்ப்பால் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
பி.கு
*இந்த குழம்பிற்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்யவும்.
Wednesday, 9 March 2016 | By: Menaga Sathia

பாதாம் புதினா சிக்கன் /Badham Pudhina Chicken (Almond Mint Chicken ) | Chicken Recipes


நாண் ,நெய் சாதம்,புலாவ் ,சப்பாத்தி இவற்றிற்கு நன்றாக இருக்கும்...

Recipe Source : Here

தே.பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 5
பாதாம் -20
தயிர் -1/2 கப்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப் பால் -  1 கப்
புதினா - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு

அரைக்க

இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 10
ஏலக்காய் - 3
பட்டை - சிறிது
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் தயிரில் ஊறவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.பாதாமை வெந்நீரில் ஊறவைத்து,தோலுரித்து விழுதாக அரைக்கவும்.

*ஊறவைத்த சிக்கனை குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கடாயில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*பின் வேகவைத்த சிக்கன்+பாதாம் விழுது+உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

*5 நிமிடம் கழித்து புதினாவை தூவி இறக்கவும்.
Sunday, 7 February 2016 | By: Menaga Sathia

கருவாட்டு குழம்பு (கேரளா ஸ்டைல் ) / Dry Fish Kuzhambu ( Kerala Style)


print this page PRINT IT 
எந்த கருவாடு போட்டும் செய்யலாம்.இதில் நெத்திலி கருவாடு போட்டு செய்துருக்கேன்.

புளிக்கு பதில் மாங்காயினை புளிப்பிற்கேற்ப போட்டு செய்ய வேண்டும்.

தே.பொருட்கள்

நெத்திலி கருவாடு -2 கைப்பிடி
வாழைக்காய்- 1
மாங்காய்- 1
நீர் -3 கப்
வரமிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
சின்ன வெங்காயம்- 10
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
உப்பு- தேவைக்கு

தாளிக்க‌
கடுகு- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 5
கறிவேப்பிலை- 1 கொத்து
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்

செய்முறை

*வாழைக்காயினை தோல் சீவவும்.மாங்காய் மற்றும் வாழைக்காயினை அவியலுக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

*தேங்காயினை மைய அரைத்து வைக்கவும்.

*கருவாட்டினை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.

*மண்சட்டியில் நீர்+உப்பு+மஞ்சள்தூள்+வரமிளகாய்த்தூள்+இஞ்சி+கீறிய பச்சை மிளகாய்+1 டீஸ்பூன் எண்ணெய்+நறுக்கிய சின்ன வெங்காயம்+சுத்தம் செய்த கருவாடு+நறுக்கிய வாழைக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.


*நன்றாக கொதித்ததும் மாங்காய்+தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் நன்கு கொதிக்க வைக்கவும்.


*பச்சை வாசனை அடங்கியதும் மீதமிருக்கும் எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

Saturday, 23 January 2016 | By: Menaga Sathia

மத்தி மீன் குழம்பு(கேரளா ஸ்டைல் ) / Sardine(Mathi) Fish Kuzhambu (Kerala Style)


print this page PRINT IT
  கேரளாவில் குழம்பிற்கு கொடாம்புளி சேர்ப்பார்கள்,இல்லையெனில் சாதரண புளியே சேர்க்கலாம்.

சிறிய மத்தி மீனில் செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
சிறிய மத்தி மீன்- 10
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 10
பொடியாக நறுக்கிய தக்காளி- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டு- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -3/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 1/2 டீஸ்பூன்
புளிகரைசல்- 3/4 கப்
நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகள்- 6
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.


*பின் இஞ்சி+பூண்டு+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி என வரிசையில் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*நன்கு கொதித்த பின் மீன்+மாங்காய்துண்டுகள் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


*கடைசியாக தேங்காய்ப்பாலை ஊற்றி 2 நிமிடங்கள் கொதித்த பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*மீன் போட்ட பிறகு கரண்டியால் கிளற வேண்டாம்.
Monday, 11 January 2016 | By: Menaga Sathia

மீன் பொளிச்சது / Meen Pollichathu ( Fish Roasted in Banana Leaf ) | Kerala Recipe


print this page PRINT IT
கேரளாவின் மிக பிரபலமான சுவையான மீன் சமையல் இது.மீனை லேசாக தேங்காய் எண்ணெயில் பொரித்த பின் வாழையிலையில் மசாலா வைத்து அதன் மேல் பொரித்த மீனை வைத்து தவாவில் சூடு செய்து பரிமாறுவது தான் மீன் பொளிச்சது.

இதற்கு கறிமீன் மட்டுமே பயன்படுத்துவாங்க,அதற்கு பதில் நான் சாதராண மீனிலேயே செய்துள்ளேன்,சுவை அபாரம்...

பரிமாறும் அளவு - 2
தயாரிக்கும் நேரம் -20 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மீன் துண்டுகள்- 4
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 2 1/2 டேபிள்ஸ்பூன்
வாழையிலை துண்டுகள்- 4

மீனில் ஊறவைக்க‌

மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

மசாலா செய்ய‌

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/3 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி- 1/4 கப்
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல்- 3
பொடியாக நறுக்கிய இஞ்சி ‍- 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்+கரம் மசாலா -தலா 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

தாளிக்க‌

கடுகு- 1/2 டீஸ்பூன்
சீரகம்+வெந்தயம்  -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

*மீனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*மீன் பொரித்த அதே எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

*பின் இஞ்சி+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+சின்ன வெங்காயம் என இந்த வரிசையில் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியம் தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.பின் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை சேர்த்து வதக்கவும்.

*கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி ,மசாலா கெட்டியாக வற்றும்வரை கொதிக்கவிடவும்.

*கெட்டியானதும் எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

*வாழையிலையில் சிறிதளவு மசாலா வைத்து அதன் மேல் பொரித்த 1 மீன் துண்டினை வைக்கவும்.


*விரும்பினால் மீன் மேலேயும் மசாலா வைக்கவும்.

*அப்படியே 4 பக்கமும் சுருட்டி வைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாழையிலை வைக்கவும்.இலையில் நிறம் மாறி வாசனை வரும் போது இருபக்கமும் பிரட்டி எடுக்கவும்.

*இதனை அப்படியே இலையோடு பரிமாறவும்.சாம்பார் சாத‌த்திற்கு
நன்றாக இருக்கும்.

பி.கு

*இதனை தேங்காய் எண்ணெயிலேயே சமைக்கவும்.பாராம்பரிய சுவையோடு இருக்கும்.

*மீனை மொறுமொறுப்பாக பொரிக்க வேண்டாம்,லேசாக வறுத்து எடுத்தாலே போதும்.

*வாழையிலைக்கு பதில் அலுமினியம் பாயிலில் கூட செய்யலாம்,ஆனால் சுவை நிச்சயம் மாறுபடும்.

*மசாலாவில் சேர்க்கபடும் தக்காளி புளிப்பாக இருந்தால் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டாம்.
01 09 10