Tuesday 11 April 2017 | By: Menaga Sathia

பிடி கருணை கருவாட்டு குழம்பு/ Pidi Karunai Karuvattu(Dry Fish )Kuzhambu

தே.பொருட்கள்
பிடி கருனை -1/4 கிலோ
கருவாடு - 5 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் -1
பூண்டுப்பல் -8
சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன்
புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி -1
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*பிடிகருணையை மண்ணில்லாமல் நன்கு கழுவி தேங்காய் ஒடு சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும்.

*தேங்காய் ஒடு சேர்த்து வேகவைப்பது கருணை கிழங்கு அரிப்பில்லாமல் இருக்கும்.

*புளிபேஸ்டினை 2 கப் நீர் ஊற்றி உப்பு,தக்காளி,சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வேங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
*புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்தபின் சுத்தம் செய்த கருவாடு,வேகவைத்த கிழங்கினை துண்டுகளாக அரிந்து சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பி.கு
*நான் சேர்த்திருப்பது வஞ்சிரம் கருவாடு.

*கருவாடு சேர்க்காமல் இதேபோல் பிடிகருணை காரகுழம்பு செய்யலாம்.

*பிடிகருணை சேர்க்கும்போது வேறு எந்தகாயும் சேர்க்கவேண்டாம்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mrs.Mano Saminathan said...

நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்! அத்தனை சிறப்பாக இருக்கிறது இந்தக்குறிப்பு! கருவாடு இல்லாமல் செய்து பார்க்கிறேன் மேனகா!

01 09 10