Wednesday 29 April 2009 | By: Menaga Sathia

மட்டன் பிரியாணி /Mutton Biryani


தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 4 மேஜைகரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
புதினா - 1 கட்டு
தயிர் - 250 கிராம்
எலுமிச்சைப் பழம் - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 3

மேலேதூவ:

ஏலக்காய் - 5 (பொடித்துக் கொள்ளவும்)
ஜாதிக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த வறுத்த வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீயை வடித்துக் கொள்ளவும்.

*வெங்காயம்+தக்காளி +கொத்தமல்லிதழை+புதினா இவற்றை அரிந்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயைக் கீறவும்.




*மட்டனை சுத்தம் செய்து 1 மேஜைக்கரண்டிஇஞ்சிபூண்டு விழுது+கரம் மசாலா+125 கிராம் தயிர்+1/2 டேபிள்ஸ்பூன் கலந்த மிளகாய்த்தூள் +1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும்.



*பாத்திரத்தில் பட்டர்+எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் செர்த்து வதக்கவும்.

*பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+தயிர்+மீதமிருக்கும் தூள் வகைகள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

*குக்கரைத் திறந்து கறியைத் தனியாக வைத்து,தண்ணீயை அளந்துக் கொள்ளவும்.

*மசாலா நன்கு வதங்கியதும்,1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் மொத்தம் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்[கறி வேக வைத்த தண்ணீர்+தண்ணீர்].

*நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு+உப்பு+கறி+அரிசி சேர்க்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

*தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் 10 நிமிடம் பிரியாணியை அவனில் வைக்கவும்.

*அரிசி நன்கு வெந்து பொலபொலவென இருக்கும் போது சமபடுத்தி மேலேதூவ சொன்ன பொருட்களை தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

பி.கு:அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்




Sunday 26 April 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் வெள்ளைக் குருமா


தே.பொருட்கள்:

பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
தேங்காய்ப்பால் - 1 சின்ன டின்
புதினா - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்

அரைக்க:

இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 6

தாளிக்க:

பட்டை - 1துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - ௧

செய்முறை:

*பீன்ஸ்+வெங்காயம்+தக்காளி இவைகளை அரிந்துக் கொள்ளவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது+புதினா ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கி உப்பு+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து காய் வெந்ததும் எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.
Friday 24 April 2009 | By: Menaga Sathia

மீன் கட்லட்


தே.பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
வேகவைத்த உருளைக் கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு +எண்ணெய் = தேவையான அளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - பிரட்டுவதற்க்கு
சோம்புத்தூள் - 11/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்து வைக்கவும்,உருளைக்கிழங்கை மசித்து வைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்புத்தூள்+வெங்காயம்+மிளகாய்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் மீன்+உருளைக்கிழங்கு சேர்த்து
கலவை ஓன்றாகும் வரை நன்கு பிரட்டவும்.

*உப்பு பார்த்து போடவும், மீனில் ஏற்கனவே உப்பு இருக்கும்.கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு ஆறவிடவும்.

*முட்டையை நன்கு அடித்து வைக்கவும்.ஒரு தட்டில் ரஸ்க்தூள் வைக்கவும்.

*மீன் கலவையை நமக்கு விருப்பமான வடிவில் செய்து முட்டையில் நனைத்து ரஸ்க்தூளில் நன்கு பிரட்டி வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கட்லட்டை இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.

*கெட்சப்,மிளகாய் சாஸுடன் சூடாக பரிமாறலாம்.

பி.கு:
நான் உருண்டையாக உருட்டியதில் 12 கட்லட் வந்தது.தூனா மீனை பிரெஞ்சில் Thon poisson என்று சொல்வாங்க.


Thursday 23 April 2009 | By: Menaga Sathia

புதினா துவையல்


தே.பொருட்கள்:

புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
கறிவேப்பில்லை - 3 இணுக்கு
இஞ்சி - சிறுதுண்டு
தாளிப்பு வடகம் - 2 டேபிள்ஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 கோலிக்குண்டளவு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 11/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை:

* புதினா,கொத்தமாலி,கறிவேப்பிலை அனைத்தும் சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.

*இஞ்சி,காய்ந்தமிளகாயை எண்ணெயில் வறுக்கவும்.

*வடகத்தை எண்ணெயில் பொரிக்கவும்,பின் புதினாவை லேசாக வதக்கவும்.

*ஆறியதும் வதக்கிய அனைத்து பொருட்கள்+உப்பு+புளி+கறிவெப்பிலை+கொத்தமல்லி சிறிது நீர் தெளித்து விழுதாக கெட்டியாக அரைக்கவும்.

*கறிவேப்பிலை,கொத்தமல்லியை வதக்ககூடாது.பச்சையாகதான் அரைக்கனும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்துக் கிளறவும்.

*எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி ஆறவைத்து உபயோக்கிக்கலாம்.

பி.கு:
அனைத்து வகை சாதம்,இட்லி,தோசைக்கு ஏற்றது.ஒரு வாரம் வரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
Wednesday 22 April 2009 | By: Menaga Sathia

புடலங்காய் பொரியல்


தே.பொருட்கள்:

புடலங்காய் - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்தேங்காய்துருவல் - 1/4 கப்

தாளிக்க:

கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
உப்பு + எண்ணெய் = தேவைக்கேற்ப

செய்முறை:

*.புடலங்காயை பொடியாக கட்செய்து உப்பு+மஞ்சள்தூல் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

*அப்போழுது தான் அதில் இருக்கும் நீர்விடும்.15 நிமிடம் கழித்து நீரில் அலசி பிழிந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புடலங்காயை சேர்க்கவும்.

*1 கப் நீர்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

பி.கு:
விருப்பப்பட்டால் சிறிது வறுத்த வேர்கடலையை லேசாக பொடித்துப் போடலாம்.
Sunday 19 April 2009 | By: Menaga Sathia

பொருளாங்கா உருண்டை



தே.பொருட்கள்:
பச்சரிசி[அ]பொன்னி அரிசி - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 1
தேங்காய் துறுவல் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

*அரிசியைக் கழுவி தண்ணீரை வடிக்கட்டவும்.அப்போழுது தான் சீக்கிரமாக பொரியும்.

*வடிகட்டிய அரிசியை வெறும் கடாயில் போட்டு அரிசி பொரியும் வரை பொரிக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஏலக்காய் சேர்த்தரைத்து மாவாக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசிக்கு 21/2 கப் தண்ணீரில் வெல்லம் போட்டு கரைந்ததும் வடிக்கட்டவும்.வடிகட்டிய வெல்லத்தை மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

*பிசுக்கு பதம் வந்ததும் உப்பு+மாவு சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

*மாவு நன்கு வந்ததும் இறக்கவும்.[மாவு வேகவில்லை எனில் வெந்நீர் சேர்த்துக் கிளறவும்].

*ஒரு தட்டில் தேங்காய் துறுவலைக் கொட்டவும்.

*நம் கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக உருட்டி தேங்காய்த் துறுவலில் சேர்த்து பிறட்டி எடுக்கவும்.

*இப்போழுது சுவையான உருண்டை ரெடி.

பி.கு:

இதில் தேங்காய் சேர்த்து இருப்பதால் அன்றே உபயோக்கிக்கனும்.எங்கம்மா செய்யும் இனிப்பில் இதுவும் ஒன்று எனக்கு ரொம்ப பிடிக்கும்.
.
Thursday 16 April 2009 | By: Menaga Sathia

மீன் குழம்பு


தே.பொருட்கள்:

மீன் - 8 துண்டுகள்
புளி - 1எலுமிச்சை பழ அளவு
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
கத்திரிக்காய் - விருப்பதிற்கேற்ப
மாங்காய் - 4 துண்டுகள்
உப்பு + எண்ணெய் = தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

நசுக்கிக் கொள்ள:

சின்ன வெங்காயம் - 8
பூண்டு பல் - 5
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

தாளிக்க:

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* மீனை சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.

* புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+மிளகாய்தூள்+அரைத்த தக்களி விழுது சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

*நசுக்க வேண்டிய பொருட்களை நசுக்கிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து,நசுக்கிய பொருள்+கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.

*பின் வதங்கியதும் புளி கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* கொதித்ததும் மீன்+மாங்காய் துண்டுகளை
போட்டு நன்கு கொதித்த பின் மல்லித்தழை தூவி இறக்கவும்.






Tuesday 14 April 2009 | By: Menaga Sathia

அறுசுவை உணவு


அனைவருக்கும் ''விரோதி'' வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இனிப்பு - பொங்கல்
புளிப்பு - மாங்காய் பச்சடி
காரம் - உருளை வறுவல்
துவர்ப்பு - வாழைப்பூ பொரியல்
கசப்பு - பாகற்காய் வறுவல்
உவர்ப்பு - அது என்ன உப்பு சமையல்?உப்பு போட்டு செய்றதுதான் உவர்ப்புனு நினைக்கிறேன்.இதப் பத்தி எனக்கு சரியா தெரியல.

இப்படி அறுசுவை உணவு செய்து பூஜை செய்வாங்க.நானும் எனக்கு தெரிந்ததை செய்தேன்.



அப்புறம் வழக்கம்போல் சாதம்,சாம்பார்,
உளுந்துவடை,அப்பளம் செய்து படைத்தேன்.

எல்லோரும் சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ...!!!


Monday 13 April 2009 | By: Menaga Sathia

சிக்கன் மசாலா ப்ரை


தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவையான அளவு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்

தாளிக்க:
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - சிறு துண்டு

செய்முறை:

*சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.

*வறுக்க குடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+அரைத்த மசாலா+புதினா ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் சிக்கன்+உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*சிக்கன் தண்ணீர் விடும்,தண்ணீர் சுண்டும் வரை நன்கு பொன்முறுவலாக சேர்த்து கிளறி இறக்கவும்.
Wednesday 8 April 2009 | By: Menaga Sathia

பருப்பு உருண்டைக் குருமா


தே.பொருட்கள்:

க்ரேவிக்கு:

வெங்காயம் பெரியது - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் விழுது -1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லிதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவைக்கேற்ப

உருண்டைக்கு:

கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டு பல் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி,கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் -1

செய்முறை:

*பருப்புக்களை 3/4 மணிநேரம் ஊறவைத்து பூண்டு+சோம்புடன் கொரகொரப்பாக அரைக்கவும்.

*இத்துடன் பொடியாக அரிந்த வெங்காயம்+பச்சை மிளகாய்+ உப்பு+கறிவேப்பிலை+கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+தக்காளி+விழுது வகைகள்+தூள் வகைகள் சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் உப்பு+தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கி கொதித்ததும் உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.

*10 நிமிடம் கழித்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

பி.கு: இதே மாதிரி புளி சேர்த்தும் செய்யலாம்.


Saturday 4 April 2009 | By: Menaga Sathia

மோர் ரசம் / Mor(Buttermilk) Rasam



தே.பொருட்கள்:
புளித்த மோர் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

வறுத்து பொடிக்க:
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2டீஸ்பூன்

தாளிக்க‌
எண்ணெய் - 1/2டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1/8 டீஸ்பூன்

செய்முறை:
*வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் லேசாக வறுத்துப் நைசாக‌ பொடிக்கவும்.
*மோரில் உப்பு+மஞ்சள்தூள்+கறிவேப்பிலை +1 டேபிள்ஸ்பூன் வறுத்த பொடி+1/2 கப் நீர்  சேர்த்து நன்கு  கலக்கவும்.
*மோர் கலந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து,இடைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.லேசாக கொதி வரும் போது இறக்கி தாளித்து சேர்க்கவும்.

வத்தல் மோர்குழம்பு


தே.பொருட்கள்:

புளித்த மோர் - 1 கப்
பச்சரிசி - 3/4 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 11/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது

தாளிக்க:

மணத்தக்காளி[அ]சுண்டைக்காய் வத்தல் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு
சீரகம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

*பச்சரிசி+து.பருப்பு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*ஊறியதும் இவற்றுடன் தேங்காய்+சீரகம்+ப.மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
*மோரைக்கடைந்து உப்பு+மஞ்சள்தூள்+அரைத்து விழுது சேர்த்து நீர்க்க கரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மோரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழைத் தூவி இறக்கவும்.

பி.கு:
இந்த குழம்பு கொஞ்சம்கூட கசக்காது.காயோ,வெங்காயமோ இல்லாத சமயத்தில் வத்தல் போட்டு செய்யலாம்.ரொம்ப நல்லா இருக்கும்.
வெளிநாட்டில் தயிர் புளிக்காது,அதற்க்கு நம் புளிப்பு தகுந்த மாதிரி எலுமிச்சைசாறு சேர்த்து கொள்ளலாம்.

வெங்காய வடகம் அல்லது தாளிப்பு வடகம் / Vengaya(Onion) Vadagam| Thalippu Vadagam | Summer Spl


தே.பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 2 கிலோ
மஞ்சள்தூள் - 1/3 கப்
கடுகு - 1/2 கப்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 கப்
உப்பு - 1/2 கப்
பூண்டு - 4 பெரிய முழு பூண்டு
சீரகம்+சோம்பு தலா 1/4 கப்
கறிவேப்பிலை - 1/3 கப்
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் - 50 கிராம்

செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து கழுவி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுத்தி எடுக்கவும்.


*மிக்ஸியைக் கழுவி அந்த தண்ணீரை வெங்காயத்தில் சேர்க்கவும்.

*மஞ்சள்தூள்,உப்பு[உப்பு கரிக்கும் அளவு இருந்தால் தான் கெடாது]சேர்த்து மண்சட்டியில் அல்லது பிளாஸ்டிக் வாளியில் பிசைந்து வைக்கவும்.

*3 வது நாளில் கடுகு+வெ.உ.பருப்பு+சீரகம்+வெந்தயம்+சுத்தம் செய்த கறிவேப்பிலை+தோலுடன் நசுக்கிய பூண்டு இவற்றை எல்லாத்தையும் வெங்காயத்தில் சேர்த்து பிசைந்து 2 நாள் ஊறவிடவும்.


* 2 நாள் கழித்து பிளாஸ்டி ஷீட்டில் வெங்காயத்தை தண்ணீயில்லாமல் பிழிந்து உருண்டைகளாக பிடித்து காயவைக்கவும்.

*மாலையில் மறுபடியும் அதே தண்ணீயில் போடவும்.இதே மாதிரி அந்த தண்ணீர் வற்றும்வரை காயவைக்கவும்.

*வெங்காயத்தை கையில் எடுத்தால் பொலபொலவென காய வைக்கவும்.


*நன்கு காய்ந்ததும் எண்ணெய் கலந்து வைக்கவும்.

*இது எத்தனை வருடமானாலும் கெடாது.

பி.கு:
*சாம்பார்,துவையல்,வத்தக்குழம்பு,கூட்டு என அனைத்திற்க்கும் தாளிக்க பயன்படுத்தலாம்.வாசனை தூக்கலா இருக்கும்.

*வடகம் நாளாக கலர் மாறிவிடும்,அதனால் கெட்டுவிட்டது என பயப்பட வேண்டும்.

*எப்போழுதும் வடகத்திற்கு சின்ன வெங்காயம் மட்டுமே பயன்படுத்தவும்.

*வடகம் காய்ந்ததும் அளவு குறைந்துவிடும்.எப்போழுதும் தாளிக்கும் பொழுது 1 டீஸ்பூன் அளவு பயன்படுத்தவும்,என்ணெயில் பொரிந்ததும் அதிகமாகும்.

*எங்க ஊர் பாண்டி பக்கமெல்லாம் இந்த வடகம் இல்லாத சமையலே இல்லை எனலாம்.இதைதான் நாங்க பயன்படுத்துவோம்.
Thursday 2 April 2009 | By: Menaga Sathia

அருகம்புல்லின் மகிமை


* தினமும் காலையில் அருகம்புல்லை வேரோடு பரித்து மண்போக கழுவி,வேருடன் அரைத்து சாறு பிழியவும்.1/2 தேக்கரண்டி மிளகு,1/2 தேக்கரண்டிசீரகம்,1/4 டீஸ்பூன் அதிமதுரம்,1/4 டீஸ்பூன் சித்தரத்தை எல்லாவற்றையும் பொடித்து சலித்துக் கொள்ளவும்.1 டம்ளர் வெந்நீரில் மேற்கண்ட பொடியை 1 டீஸ்பூன் போட்டு 1/2 டம்ளர் அருகம்புல் சாறு கலந்து தினமும் பருகி வந்தால் இருமல்,சளி போயே போச்சு.

*அருகம்புல் வேரை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்து வைத்துக் கொண்டால் பலநோய்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

*1 டீஸ்பூன் அருகம்புல் வேர் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் மூலநோய்க்கு குட்பை சொல்லலாம்.

*அருகம்புல்லை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி,100 கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து,2 பல் பூண்டு,சிறு துண்டு இஞ்சி நசுக்கி உப்பு+அருகம்புல் சேர்த்துக் கிளரினால் அருகம்புல் பொரியல் ரெடி.இதை சாப்பிட்டால் உடலுக்கு சத்தும் ஞாபகசக்தியும் பெருகும்.

*அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

* அருகம்புல் சாறை தேனுடன் கலந்து குடித்தால் தாது விருத்தி ஏற்படும்,உடல் உறுதியாகும்,ரத்தம் பெருகும்

பாகற்காய் குழம்பு



தே.பொருட்கள்:


புளி - 1 எலுமிச்சை அளவு+2 சுண்டைக்காயளவு
கலந்த மிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
பாகற்காய் - 2 பெரியது
சின்ன வெங்காயம் -15
பூண்டு - 10 பல்
தக்காளி - 1
உப்பு+எண்ணெய் = தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


தாளிக்க:


வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை:


* எலுமிச்சையளவு உள்ள புளியைக் 1 கோப்பையளவு கரைத்துக் கொள்ளவும்.

*பாகற்காயை மெல்லிய வட்டங்களாக நறுக்கி,உப்பு சேர்த்து 10 நிமிடம் பிசிறி வைக்கவும்.பின் 2 சுண்டைக்காயளவு புளியைக் கரைத்து பாகற்காயை அந்த நீரில் 15 நிமிடம் ஊறவைத்து அலசி வைக்கவும்.இப்படி செய்தால் ஒரளவு கசப்பு குறையும்.


*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.


*வெங்காயம்,தக்காளி,பாகற்காய்,மிளகாய்த்தூள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


*வதங்கியதும் புளித்தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*நன்கு கொதித்ததும் நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடம் கொதித்தபின் இறக்கினால் வாசனையாக இருக்கும்.


பி.கு: பாகற்காய் வத்தலிலும் செய்யலாம்.
01 09 10