Sunday 31 January 2016 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kathirikkai (Brinjal ) Poricha Kuzhambu | Kuzhambu Recipe


print this page PRINT IT

30 நாள் வெஜ் லஞ்ச் மெனுவில் இந்த குறிப்பினை போட்டுள்ளேன்..பொரியல்/வறுவலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இதில் வேகவைத்த பாசிப்பருப்பு (அ) துவரம்பருப்பு சேர்க்கலாம்.

அதே போல் வேகவைத்த காராமணி (அ) வேர்கடலை சேர்க்கலாம்.

தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காய்- 8
புளிகரைசல் -1 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு- 1/4 கப்
வேகவைத்த வேர்கடலை- 1 கைப்பிடி
சீரகம்- 3/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க‌

மிளகு- 1/2 டீஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 6
கறிவேப்பிலை- 1 கொத்து

தாளிக்க‌

எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சீரகம்+தேங்காய்த்துறுவல் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டீஸ்பூன் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுது+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்றாக கொதித்து வரும் போது வேகவைத்த வேர்கடலை சேர்க்கவும்.


*கடைசியாக மீதமுள்ள எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
Saturday 23 January 2016 | By: Menaga Sathia

மத்தி மீன் குழம்பு(கேரளா ஸ்டைல் ) / Sardine(Mathi) Fish Kuzhambu (Kerala Style)


print this page PRINT IT
  கேரளாவில் குழம்பிற்கு கொடாம்புளி சேர்ப்பார்கள்,இல்லையெனில் சாதரண புளியே சேர்க்கலாம்.

சிறிய மத்தி மீனில் செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
சிறிய மத்தி மீன்- 10
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 10
பொடியாக நறுக்கிய தக்காளி- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டு- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -3/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 1/2 டீஸ்பூன்
புளிகரைசல்- 3/4 கப்
நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகள்- 6
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.


*பின் இஞ்சி+பூண்டு+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி என வரிசையில் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*நன்கு கொதித்த பின் மீன்+மாங்காய்துண்டுகள் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


*கடைசியாக தேங்காய்ப்பாலை ஊற்றி 2 நிமிடங்கள் கொதித்த பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*மீன் போட்ட பிறகு கரண்டியால் கிளற வேண்டாம்.
Monday 18 January 2016 | By: Menaga Sathia

தேங்காய் துவையல் | Coconut Thogaiyal / Thengai Thuvaiyal


print this page PRINT IT 
இந்த துவையல் 30 நாள் வெஜ் லஞ்ச் மெனு குறிப்பில் போட்டுள்ளேன்.செய்வதற்கு மிக சுலபமானது,சுவையானதும் கூட.காரகுழம்பிற்கு பெஸ்ட் காம்பினேஷன்.

தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
வெ.உ.பருப்பு- 2  டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
புளி -சிறிய நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்+பெருங்காயம்/பெருங்காயத்தூள்+உளுந்ததம்பருப்பு இவற்றை தனிதனியாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.

*மிக்ஸியில் காய்ந்த மிளகாய்+பெருங்காயம்+உளுத்தம்பருப்பு சேர்த்து முதலில் பொடித்த பின் தேங்காய்த்துறுவல்+புளி+உப்பு+ 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

Wednesday 13 January 2016 | By: Menaga Sathia

பால்(வெள்ளை) பொங்கல் / Paal (Vellai ) Pongal | Pongal Recipe


print this page PRINT IT 
தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
பால்- 4 கப்
நீர்- 3 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் பால்+நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.


*கொதிக்கும் போது அரிசியை கழுவி போட்டு வேக விடவும்.

*சிறுதீயில் வேகவைடவும் இல்லையெனில் அடிபிடிக்கும்,மேலும் அவ்வபோழுது கிளறிவிடவும்.

*வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

*பொங்கல் குழம்புடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
Monday 11 January 2016 | By: Menaga Sathia

மீன் பொளிச்சது / Meen Pollichathu ( Fish Roasted in Banana Leaf ) | Kerala Recipe


print this page PRINT IT
கேரளாவின் மிக பிரபலமான சுவையான மீன் சமையல் இது.மீனை லேசாக தேங்காய் எண்ணெயில் பொரித்த பின் வாழையிலையில் மசாலா வைத்து அதன் மேல் பொரித்த மீனை வைத்து தவாவில் சூடு செய்து பரிமாறுவது தான் மீன் பொளிச்சது.

இதற்கு கறிமீன் மட்டுமே பயன்படுத்துவாங்க,அதற்கு பதில் நான் சாதராண மீனிலேயே செய்துள்ளேன்,சுவை அபாரம்...

பரிமாறும் அளவு - 2
தயாரிக்கும் நேரம் -20 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மீன் துண்டுகள்- 4
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 2 1/2 டேபிள்ஸ்பூன்
வாழையிலை துண்டுகள்- 4

மீனில் ஊறவைக்க‌

மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

மசாலா செய்ய‌

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/3 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி- 1/4 கப்
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல்- 3
பொடியாக நறுக்கிய இஞ்சி ‍- 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்+கரம் மசாலா -தலா 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

தாளிக்க‌

கடுகு- 1/2 டீஸ்பூன்
சீரகம்+வெந்தயம்  -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

*மீனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*மீன் பொரித்த அதே எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

*பின் இஞ்சி+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+சின்ன வெங்காயம் என இந்த வரிசையில் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியம் தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.பின் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை சேர்த்து வதக்கவும்.

*கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி ,மசாலா கெட்டியாக வற்றும்வரை கொதிக்கவிடவும்.

*கெட்டியானதும் எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

*வாழையிலையில் சிறிதளவு மசாலா வைத்து அதன் மேல் பொரித்த 1 மீன் துண்டினை வைக்கவும்.


*விரும்பினால் மீன் மேலேயும் மசாலா வைக்கவும்.

*அப்படியே 4 பக்கமும் சுருட்டி வைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாழையிலை வைக்கவும்.இலையில் நிறம் மாறி வாசனை வரும் போது இருபக்கமும் பிரட்டி எடுக்கவும்.

*இதனை அப்படியே இலையோடு பரிமாறவும்.சாம்பார் சாத‌த்திற்கு
நன்றாக இருக்கும்.

பி.கு

*இதனை தேங்காய் எண்ணெயிலேயே சமைக்கவும்.பாராம்பரிய சுவையோடு இருக்கும்.

*மீனை மொறுமொறுப்பாக பொரிக்க வேண்டாம்,லேசாக வறுத்து எடுத்தாலே போதும்.

*வாழையிலைக்கு பதில் அலுமினியம் பாயிலில் கூட செய்யலாம்,ஆனால் சுவை நிச்சயம் மாறுபடும்.

*மசாலாவில் சேர்க்கபடும் தக்காளி புளிப்பாக இருந்தால் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டாம்.
Monday 4 January 2016 | By: Menaga Sathia

நெய் பாயாசம் / Nei Payasam ( Sharkara Payasam ) /Aravana Payasam | Kerala Recipe

print this page PRINT IT
இதனை சர்க்கரை பாயாசம் / அரவனை பாயாசம் /பகவதி சேவை பாயாசம் எனவும் சொல்வார்கள்.

இது நாம் செய்யும் சர்க்கரை பொங்கல் தான்,ஆனால் இதில் அரிசியை மசிக்காமல் செய்வார்கள்,மேலும் இதில் விரும்பினால் மட்டும் முந்திரி திராட்சை சேர்க்கலாம்.

நெய் அதிகமாகவும்,தேங்காயை பல்லாக நறுக்கியும் சேர்ப்பார்கள்.மேலும் இதில் கேரளா பச்சரிசியில் செய்வார்கள்.

தே.பொருட்கள்

பச்ச‌ரிசி -1/2 கப்
நீர்- 1 கப்
நெய் -1/4 கப்
வெல்லம்- 1 கப்
ஏலக்காய்த்தூள்- 1/8 டீஸ்பூன்
சுக்குப்பொடி- 1/8 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் -1/8 கப்

செய்முறை

*குக்கரில் அரிசி+நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*பாத்திரத்தில் வெல்லம்+சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் வெல்ல நீரை வேகவைத்த அரிசியில் சேர்த்து கொதிக்கவிடவும்.

*இடையே 1/8 கப் நெய்யினை சிறிது சிறிதாக  சேர்க்கவும்.

*பாயாசம் கெட்டியாக வரும் போது ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி சேர்த்து இறக்கவும்.

*மீதமுள்ள நெய்யில் தேங்காய்ப்பல்லினை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.

பி.கு

*வெல்லம்+நெய் அதிகம் சேர்த்திருப்பதால் இதனை சிறிதளவே சாப்பிடமுடியும்.

*பாயாசம் ஆறிவிட்டால் லேசாக சூடு செய்து பரிமாறவும்.
01 09 10