Thursday 26 February 2015 | By: Menaga Sathia

மெது போண்டா/ MEDHU BONDA

print this page PRINT IT
 மெது போண்டாவில் டால்டா பயன்படுத்துவார்கள்.அதற்கு பதில் மர்கரின் பயன்படுத்தலாம்.நான் வெண்ணெய் சேர்த்து செய்துள்ளேன்,அதனால் ஆறினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.

தே.பொருட்கள்
கடலை மாவு -1 கப்
அரிசி மாவு -1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்(அறை வெப்பநிலையில்)
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை
*பாத்திரத்தில் வெண்ணெய்+பேக்கிங் சோடா சேர்த்து நன்கு நுரை வரும் வரை கலக்கவும்.

*பின் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை சேர்த்து கலக்கவும்.

*இப்பொழுது 1 டேபிள்ஸ்பூன் அளவு நீர் சேர்த்து கலக்கவும்.மாவின் பதம் இட்லி மாவை விட கெட்டியாக இருக்கவேண்டும்.

*எண்ணெய் காயவைத்து சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பி.கு

*அரிசி மாவு இதே அளவில் சேர்த்தால் போதும்.நிறைய சேர்த்தால் சுவை மாறுபடும்.

*வெண்ணெய் சேர்த்து செய்வது திகட்டாமல் இருக்கும்.
Monday 23 February 2015 | By: Menaga Sathia

தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை / DHARMAPURI SPL MILAGAA VADAI OR KAARA DOSA | GUEST POST BY SRIVIDHYA NAVIN


print this page PRINT IT
தோழி வித்யா நவீன் அவர்கள் முகநூல் குரூப்பில் அறிமுகமானவங்க.எப்போதவாது சாட்டிங் செய்வதும் உண்டு.அவர்களிடம் அவர் ஊரின் ஸ்பெஷல் மிளகாய் வடை / கார தோசை குருப்பினை கெஸ்ட் போடுமாறு கேட்ட போது உடனே சம்மதித்து குறிப்பினை 3 நாட்களுக்குள் அனுப்பிவிட்டாங்க.உங்கள் ஊரின் சுவையான மாலை நேர சிற்றுண்டியை பகிர்ந்து கொண்டதற்காக நன்றி வித்யா!!

இந்த மிளகாய் வடையின் செய்முறையில் தோசையும் சுடலாம்.மாவினை உடனே அரைத்து செய்யலாம்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1.5 கப்
துவரம்பருப்பு -1 கப்
சின்ன வெங்காயம் -3/4 கப்
இஞ்சி -1 சிறு துண்டு
பூண்டுப்பல் -5
தனியா -2 டீஸ்பூன்
வரமிளகாய் -10(அ)12
கிராம்பு -4
சோம்பு -2 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை

*அரிசி+பருப்பினை ஒன்றாக 1 மணிநேரம் உறவைக்கவும்.


*முதலில் பட்டை+கிராம்பு+சோம்பு+தனியா இவற்றை பொடித்த அதனுடன் பின் இஞ்சி +பூண்டு+காய்ந்த மிளகாய்+சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த பின் அரிசி மற்றும் பருப்பினை உப்பு சேர்த்து கொரகொரப்பாகவும் கெட்டியாகவும் அரைக்கவும்.

*பின் அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

*எண்ணெய் காயவைத்து சிறு கரண்டி மாவினை எடுத்து ஊற்றி இருபக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதனையே தோசை போல் செய்ய‌

*மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்!!

Sunday 22 February 2015 | By: Menaga Sathia

நானும் வலைச்சரமும்...

Image : Google


வலைச்சர வலைப்பூவில் கடந்த 1 வாரமாக பிப் 16 முதல் பிப்22 வரை ஆசிரியர் பொறுப்பேற்றி பல புதுமுக தமிழ் வலைப்பூக்களை அறிமுகபடுத்தியுள்ளேன்.இந்த வாய்ப்பினை எனக்களித்த வலைச்சர ஆசிரியர்களான சீனா ஐயாவுக்கும்,சகோ பிரகாஷ்க்கும் நன்றிகள் பல..

வலைச்சரத்தில் என்னைப்  பற்றி

வலைசரத்தில் 2 ஆம் நாள்

வலைச்சரத்தில் 3 ஆம் நாள்

வலைச்சரத்தில் 4 ஆம் நாள்

வலைச்சரத்தில் 5 ஆம் நாள் 

வலைச்சரத்தில் 6 ஆம் நாள்

வலைச்சரத்தில் 7 ஆம்நாள்
Saturday 21 February 2015 | By: Menaga Sathia

செட்டிநாடு சிக்கன்/CHETTINAD CHICKEN | CHICKEN RECIPES


print this page PRINT IT
இந்த செட்டிநாடு சிக்கன் காரசாரமாக இருக்கும்.

Recipe Source : Here

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் -25
தக்காளி -2
பூண்டுப்பல்- 15
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

அரைக்க 1
இஞ்சி -சிறுதுண்டு
சின்ன வெங்காயம் -8
பூண்டுப்பல்- 8
பச்சை மிளகாய் -2
வரமிளகாய்த்தூள்- 3/4 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்- 1 1/2 டேபிள்ஸ்பூன்

அரைக்க 2
தேங்காய்த்துறுவல் -4 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4 அல்லது கசகசா- 1 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்

சிக்கனில் ஊறவைக்க‌
சிக்கன்- 1/2 கிலோ
தயிர் -1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது  -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு- 4
பிரியாணி இலை -2
சோம்பு- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
புதினா -1 கைப்பிடி

செய்முறை
*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  அரைக்கவும்.

*பின் நறுக்கிய சின்ன  வெங்காயம் +பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த விழுது 1 சேர்த்து வதக்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
*தக்காளி வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.
*சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது,சிக்கன் வெந்ததும் அரைத்த விழுது 2  சேர்க்கவும்.


*நன்கு எண்ணெய் பிரியும் வரை சுருள கிளறி இறக்கவும்.
Thursday 19 February 2015 | By: Menaga Sathia

முருங்கைக்கீரை கடையல்/ DRUMSTICK LEAVES(MURUNGAIKEERAI) KADAIYAL


print this page PRINT IT
தே.பொருட்கள்
சுத்தம் செய்த முருங்கைக்கீரை -2 கப்
துவரம்பருப்பு -1/3 கப்
பூண்டுப்பல்- 4
பச்சை மிளகாய்- 2
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

தாளிக்க‌
வடகம் -1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை
*குக்கரில் துவரம்பருப்பு+பச்சை மிளகாய்+பூண்டு +தேவையான  நீர் சேர்த்து 2 விசில் வரை வேகவிடவும்.


*இப்போழுது பருப்பு முக்கால் பதம் வெந்து இருக்கும்.அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

*கீரையை சேர்த்து மூடி போடாமல் வேகவிடவும்.



*கீரை வெந்ததும் நன்கு ஆறவிடவும்.

*ஆறியதும் கீரையில் இருக்கும் நீரை வடித்துவிட்டு கீரை மட்டும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.


*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதனையும் அரைத்த கீரையில் சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.



*கீரை வேகவைத்த நீரை சேர்த்து கலக்கி பரிமாறவும்.

பி.கு 

*கீரை கலவை கெட்டியாக இருந்தால் சாதம் வடித்த நீரை சேர்த்து கலக்கி பரிமாறவும்.குளிர்ந்தநீரை சேர்க்கவேண்டாம்.

*கீரை வேகவைக்கும் போது மூடி போட்டு வேகவைக்கவேண்டாம்,கீரையின் நிரம் மாறிவிடும்.


Tuesday 17 February 2015 | By: Menaga Sathia

அவரைக்காய் சாம்பார் / AVARAKKAI (BROAD BEANS) SAMBAR



print this page PRINT IT

ஒவ்வொரு காய் போட்டு சாம்பார் வைக்கும் தனி ருசி தான்.அதில் நாட்டு அவரைக்காயும் ஒன்று.இந்த காய் போட்டு சாம்பார் வைக்கும் போது சாம்பாரின் ருசியே தனிதான்.

நாட்டு அவரைக்காய் சமைக்கும் போது சீக்கிரம் வெந்து விடும்.

தே.பொருட்கள்
நாட்டு அவரைக்காய் -10
துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி- 2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி -1
கீறிய பச்சை மிளகாய்- 2
புளிகரைசல்- 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்+ 1 டீஸ்பூன்
வடகம்- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்கயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*துவரம்பருப்பினை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.


*அவரைக்காயின் இரு பக்கங்களிலும் நாரினை நீக்கி விட்டு அப்படியே கையால் 2 அல்லது 3 ஆக ஒடிக்கலாம்.

*பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்கயம்+பச்சை மிளகாய்+தக்காளி+அவரைக்காய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் வேகவைத்த துவரம்பருப்பு+சாம்பார் பொடி +தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*அவரைக்காயை வதக்கி சேர்ப்பதால் 2- 3 நிமிடங்களிலேயே வெந்துவிடும்.

*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


*கடைசியாக மீதமிருக்கும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Sunday 15 February 2015 | By: Menaga Sathia

தண்டை / THANDAI (SPICED ALMOND MILK ) | HOLI RECIPES


print this page PRINT IT
 இது வடஇந்தியாவின் ஸ்பெஷல் பானகம்.மஹாசிவராத்திரி மற்றும் ஹோலி அன்று செய்வார்கள்.

தண்டை மசாலா பொடியினை மொத்தமாக பொடித்து வைத்துக் கொண்டால் தேவையான போது செய்யலாம்.

நான் கொஞ்சமாக செய்ததால் மசாலாவினை அரைத்து செய்துள்ளேன்.

Recipe Source :
Tarladalal

தே.பொருட்கள்

பால் -3 கப்
சர்க்கரை -1/2 கப்
குங்குமப்பூ -சிறிதளவு
பிஸ்தா பருப்பு -அலங்கரிக்க‌
ரோஸ் எசன்ஸ் -2 துளி (விரும்பினால்)


தண்டை மசாலா செய்ய‌

பாதாம் பருப்பு -30
மிளகு -15
கசகசா+சோம்பு -தலா 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் -7

செய்முறை

*பாலினை காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆறவைக்கவும்.

*சிறிதளவு வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.

*தண்டை மசாலா செய்ய கொடுத்துல்ள பொருட்களை 1/2 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.


*பால் ஆறியதும் மசாலாவினை சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

*பின் அதனை சூப் வடிகட்டியில் வடிகட்டி ரோஸ் எசன்ஸ்+குங்குமப்பூவை கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பரிமாறும் போது பிஸ்தா பருப்பு கலந்து பரிமாறவும்.

பி.கு

*தண்டை மசாலாவினை சேர்ததும் 30 நிமிடம் வைத்திருந்து வடிகட்டினால் மசாலாவின் மணம் நன்கு ஊறியிருக்கும்.

*எப்போழுதும் குளிரவைத்து பரிமாறவும்.

*ரோஸ் எசன்ஸ் சேர்ப்பது நல்ல மணம் கொடுக்கும்.சிலர் காய்ந்த ரோஜா இதழ்களை சேர்ப்பார்கள்.
Friday 13 February 2015 | By: Menaga Sathia

ரெட் வெல்வெட் க்ரீம் சீஸ் ப்ரவுணீ / RED VELVET CREAM CHEESE BROWNIES


print this page PRINT IT
இந்த குறிப்பினை ப்ரியா சுரேஷ் முகநூலில் Fondbites,Bake Along குரூப்பில் போஸ்ட் செய்த போது ரொம்ப அழகா இருந்தது.இங்கே பார்த்து செய்தேன்.பார்க்கவே மிக அழகாக இருந்தது.

அவர்கள் கொடுத்துள்ள அளவில் பாதி போட்டு செய்தேன்.மேலும் ரெட் கலருக்கு பதில் பீட்ரூட் வேகவைத்து அரைத்து செய்துள்ளேன்.

ரெட் வெல்வெட் ப்ரவுணீ செய்ய‌

மைதா- 1 1/2 கப்+1/8 கப்
சர்க்கரை -1 கப்+1/8 கப்
கோகோ பவுடர் -1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு- 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
முட்டை -1
வெஜிடபிள் எண்ணெய் -1/2 கப்
பால்- 1டேபிள்ஸ்பூன்+1 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்- 1/2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்து அரைத்த பீட்ரூட் விழுது -1/4 கப்(அ) ரெட் கலர் -1/2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை வினிகர்- 1 டீஸ்பூன்

க்ரீம் சீஸ் லேயர் செய்ய‌
க்ரீம் சீஸ்- 1/2 கப்
சர்க்கரை -1/4 கப்+1/8 கப்
முட்டை -1
வெனிலா எசன்ஸ்- 1 டீஸ்பூன்

செய்முறை

*அவனை 180°C முற்சூடு செய்யவும்.

*பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது எண்ணெய் தடவி வைக்கவும்.

*மைதா+கோகோ பவுடர்+உப்பு+சர்க்கரை+பேக்கிங் பவுடர் இவற்றை நன்றாக கலந்து நடுவில் குழி போல் செய்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் முட்டை ஊற்றி நன்கு கலக்கவும்.

*அதில் எண்ணெய்+வெனிலா எசன்ஸ்+1 டேபிள்ஸ்பூன் பால்+பீட்ரூட் விழுது +வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.

*இந்த கலவையை மாவில் ஊற்றி மிருதுவாக கலக்கவும்.

*இந்த கலவையில் 1/3 கப் அளவு எடுத்து அதில் 1 டேபிள்ஸ்பூன் பால் கலந்து வைக்கவும்.

*திக்கான ப்ரவுணீ கலவையை பேக்கிங் டிரேயில் ஊற்றி சமபடுத்தி வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ் கலவை சேர்த்து பீட்டரால் மிருதுவாக அடிக்கவும்.

*அதில் சர்க்கரை சேர்த்து 2 -3 நிமிடங்கள் கலக்கவும்.

*பின் முட்டையை ஊற்றி நன்கு பீட்டரால் அடித்து வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

*இந்த கலவையை ப்ரவுனியின் மீது பரவலாக ஊற்றி சமபடுத்தவும்.

*இப்போழுது THIN ப்ரவுணீ கலவையை க்ரீம் சீஸ் லேயர் மீது ஸ்பூனால் இடைவெளி விட்டு ஊற்றவும்.

*டூத்பிக்கினால் SWIRL ( மார்பிள் கேக்கிற்கு செய்வது )போல செய்யவும்.

*இதனை முற்சூடு செய்த அவனில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து நன்கு ஆறவிடவும்.

*இதனை அப்படியே பரிமாறலாம்(அ)இதய வடிவ குக்கீ கட்டரால் கட் செய்து பரிமாறலாம்.
01 09 10