Showing posts with label குழம்பு. Show all posts
Showing posts with label குழம்பு. Show all posts
Monday, 19 June 2017 | By: Menaga Sathia

முடக்கத்தான் கீரை குழம்பு / Mudakathan Keerai (Balloon Vine) Kuzhambu | Kuzhambu Recipe

முடக்கத்தான் கீரையை மாதம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.ஏற்கனவே முடக்கத்தான் கீரை சூப் பகிர்ந்துள்ளேன் . குறிப்பினை இங்கே  பார்க்கவும்.

தே.பொருட்கள்

முடக்கத்தான் கீரை - 1/2 கப்
புளிகரைசல் -2 கப்
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1/4 கப்
பூண்டுப்பல் -4
வெங்காயம் -1 (நீளவாக்கில் அரிந்தது)
கறிவேப்பிலை - சிறிது
வடகம் -2 டீஸ்பூன்

செய்முறை

முடக்கத்தான் கீரை

 * பாத்திரத்தில் முடக்கத்தான்    கீரையை  சிறிது நல்லெண்ணெயில் வதக்கி ஆறவைக்கவும்.

 *அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி வடகம் சேர்த்து தாளித்து வெங்காயம்,பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 *பின் சாம்பார் பொடி சேர்த்து லேசாக வதக்கி,உப்பு மற்றும் புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்றாக கொதிததும்,வதக்கிய கீரையை ஒன்றும்பாதியுமாகவோ அல்லது மைய அரைத்து குழம்பில் சேர்க்கவும்.

*நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும்.
Thursday, 9 February 2017 | By: Menaga Sathia

பிடி கருணை மசியல் / Pidi Karunai Masiyal | Karunai Kizhangu Masiyal

 30 நாள் வெஜ் லஞ்ச் மெனுவில் சேனை கிழங்கில் மசியல் செய்துருப்பேன்.சேனை கிழங்கை விட  பிடி கருணை மசியல் நன்றாக இருக்கும்.

பிடி கருணையின் அரிப்பு தன்மையை போக்க வாங்கியதும் உடனே சமைக்காமல் 2 வாரம் கழித்து சமைத்தால் அரிப்பு இருக்காது.

மேலும் இதனை வேக வைக்கும் போது தேங்காய் ஒடு சேர்த்து வேகவைத்தாலும் அரிப்பு இருக்காது என்பது என் அம்மாவின் டிப்ஸ்.

இந்த குறிப்பினை முகநூல்  பானுமதி மாமியிடம் கற்றுக்கொண்டேன்.

தே பொருட்கள்
பிடிகருணை - 6
சிறிய தேங்காய் ஒடு - பிடிகருணை வேகவைக்க
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

செய்முறை
*பிடி கருணையை மண்ணில்லாமல் கழுவி தேங்காய் ஒடு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேகவிடவும்.

*வெந்ததும் தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.
 *பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பச்சை மிளகாய்,இஞ்சி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
 *பின் மசித்த கருணை,உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*லேசாக கொதித்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

பி.கு
*இதனை சாதத்தில் சேர்த்து  வறுவலுடன்  சேர்த்து சாப்பிடலாம்.அல்லது பக்க உணவாக காரகும்புடன் சேர்த்து சாப்பிடலாம்.

Wednesday, 9 March 2016 | By: Menaga Sathia

பாதாம் புதினா சிக்கன் /Badham Pudhina Chicken (Almond Mint Chicken ) | Chicken Recipes


நாண் ,நெய் சாதம்,புலாவ் ,சப்பாத்தி இவற்றிற்கு நன்றாக இருக்கும்...

Recipe Source : Here

தே.பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 5
பாதாம் -20
தயிர் -1/2 கப்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப் பால் -  1 கப்
புதினா - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு

அரைக்க

இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 10
ஏலக்காய் - 3
பட்டை - சிறிது
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் தயிரில் ஊறவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.பாதாமை வெந்நீரில் ஊறவைத்து,தோலுரித்து விழுதாக அரைக்கவும்.

*ஊறவைத்த சிக்கனை குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கடாயில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*பின் வேகவைத்த சிக்கன்+பாதாம் விழுது+உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

*5 நிமிடம் கழித்து புதினாவை தூவி இறக்கவும்.
Sunday, 31 January 2016 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kathirikkai (Brinjal ) Poricha Kuzhambu | Kuzhambu Recipe


print this page PRINT IT

30 நாள் வெஜ் லஞ்ச் மெனுவில் இந்த குறிப்பினை போட்டுள்ளேன்..பொரியல்/வறுவலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இதில் வேகவைத்த பாசிப்பருப்பு (அ) துவரம்பருப்பு சேர்க்கலாம்.

அதே போல் வேகவைத்த காராமணி (அ) வேர்கடலை சேர்க்கலாம்.

தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காய்- 8
புளிகரைசல் -1 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு- 1/4 கப்
வேகவைத்த வேர்கடலை- 1 கைப்பிடி
சீரகம்- 3/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க‌

மிளகு- 1/2 டீஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 6
கறிவேப்பிலை- 1 கொத்து

தாளிக்க‌

எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சீரகம்+தேங்காய்த்துறுவல் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டீஸ்பூன் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுது+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்றாக கொதித்து வரும் போது வேகவைத்த வேர்கடலை சேர்க்கவும்.


*கடைசியாக மீதமுள்ள எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
Monday, 14 December 2015 | By: Menaga Sathia

திருவாதிரை களி குழம்பு/தாளகம் | THIRUVADHIRAI KALI KUZHAMBU | THALAGAM


print this page PRINT IT
 திருவாதிரை குழம்பு தாளகம்,ஏழுகறி குழம்பு  எனவும் சொல்வார்கள். இந்த குழம்பினை திருவாதிரை களியுடன் சமைத்து ஆருத்ரா தரிசனம் அன்று  இறைவனுக்கு படையல் செய்வார்கள்.

இந்த குழம்பிற்கு நாட்டுகாய்கள் மட்டுமே சேர்த்து சமைப்பாங்க.

இதில் சேனைக்கிழங்கு ,மஞ்சள் பூசணிக்காய், ப்ரெஷ் அல்லது டிரை மொச்சை, அவரைக்காய்,சேப்பங்கிழங்கு,வாழைக்காய்,சக்கரைவள்ளிக்கிழங்கு,கொடிவகை காய்கள் என 7 காய்கள் சேர்க்கலாம்.

நான் சேர்த்திருப்பது காய்ந்த 1/4 கப் மொச்சை,1 சிறிய உருளை,1 சிறிய சக்கரைவள்ளிகிழங்கு,1/4 கப்  மஞ்சள் பூசணி,1/4 அவரை துண்டுகள்,சிறிய வாழைக்காயில் பாதி, 1/4 கப் சேனைக்கிழங்கு துண்டுகள்

தே.பொருட்கள்

7 வகை காய்கள் ‍- மேலே சொன்ன அளவில்
புளிகரைசல்- 1/2 கப்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

வறுத்து அரைக்க‌

காய்ந்த மிளகாய் -7
கடலைபருப்பு- 2டீஸ்பூன்
வெ.உ.பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்


தாளிக்க‌

எண்ணெய்- 3/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*மொச்சையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

*குக்கரில் காய்களை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி,தேவையான நீர்+மஞ்சள்தூள் சேர்த்து 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வருத்து நைசாக அரைக்கவும்.

*காய்கள் வெந்ததும் புளி கரைசல்+உப்பு+வேகவைத்த மொச்சை+அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்கவிடவும்.


*குழம்பு கொதித்து கெட்டியாக வரும் போது தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கவும்.
Wednesday, 12 August 2015 | By: Menaga Sathia

மாம்பழ புளிசேரி / Mambazha Pulissery | Side Dish For Idiyappam | Onam Sadya Recipes

print this page PRINT IT
நம்ம ஊர் மோர்குழம்பு போலதான்.இதே போல் பைனாப்பிளிலும் செய்யலாம்.

புளிப்பு,இனிப்பு,காரம் கலந்த சுவையுடன் இருக்கும்.சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் அல்லது இடியாப்பத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.செம காம்பினேஷன்.

இதனை குட்டியாக இருக்கும் மாம்பழங்களில் தோலை சீவி பயன்படுத்துவார்கள்.நான் பெரிய மாம்பழத்தை துண்டுகளாகி செய்துள்ளேன்.

Recipe Source :
Here

தே.பொருட்கள்

மாம்பழம்- 2 பெரியது
கெட்டி தயிர்- 1 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 2
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -3/4 கப்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
தே.எண்ணெய்- 1டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


*பின் உப்பு  மாம்பழத்தை தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி முழ்குமளவு நீர் ஊற்றி வேகவிடவும்.

*வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து மேலும் கொதிக்கவைத்து இறக்கவும்.

*ஆறியதும் கடைந்த தயிரினை சேர்த்து கலக்கவும்.

பி.கு

*இது ஊற்றி சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும்.அதனால் நீரின் அளவை அதற்கு ஏற்றாற்போல் சேர்க்கவும்.
Tuesday, 4 August 2015 | By: Menaga Sathia

தீயல் / Theeyal | Onam Sadya Recipes

print this page PRINT IT 
இது நம்ம ஊர் காரகுழம்பு போல தான்.இதற்கு தேங்காயை நிறைய அரைத்து சேர்ப்பார்கள்

இதில் முருங்கைக்காய் சேர்த்து செய்துருக்கேன்.மற்றகாய்கள் சேர்த்து எப்படி செய்வதுன்னு பின் குறிப்பில் கீழே பார்க்கவும்.

Recipe Source : Here

தே.பொருட்கள்
புளி- எலுமிச்சை பழளவு
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
கடுகு+வெந்தயம்- தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்- 2 கப்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
மிளகு +சீரகம்-தலா 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- 2
கறிவேப்பிலை- 1 கொத்து
தனியாப்பொடி-2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி-2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய்-1 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம்+மிளகு+சீரகம்+கறிவேப்பிலை+தேங்காய்த்துறுவல்+சின்ன வெங்காயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தேங்காய் நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும்.அதே சமயம் தீய்ந்து விடாமலும் இருக்க வேண்டும்.

*அடுப்பை அணைத்து விட்டு தனியா மற்றும் மிளகாய்பொடிகளை சேர்க்கவும்.கடாயின் சூட்டிலயே வறுப்பட்டுவிடும்.

*ஆறியதும் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*புளியை 2 கப் நீர் அளவில் கரைத்து அரைத்த விழுதினை உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

*முருங்கைக்காயை தனியாக நீர்+உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.


*குழம்பு நன்றாக கொதிக்கும் போது வேகவைத்த முருங்கையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதித்து இறக்கவும்.

*இதற்கு பருப்புத்துவையல் பெஸ்ட் காம்பினேஷன்.

பி.கு

*வெண்டைக்காய்,பாகற்காய்,கத்திரிக்காய் சேர்க்கும் போது தாளிப்பின் போது எண்ணெயில் வதக்கி புளிகரைசலில் வேகவிட்ட பின் மசாலாவை சேர்க்கவும்.

*சேனை,முருங்கை,கொத்தவரங்காய் சேர்க்கும் போது தனியாக உப்பு சேர்த்து வேகவைத்த பின் புளிகரைசல்+மசாலா சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

*பூண்டு,வெங்காயம் சேர்க்கும் போது தாளிதத்தின் போதே எண்ணெயில் நன்கு வதக்கி புளிகரைசல்+மசாலா சேர்க்கவும்.

*எல்லா காய்களும் ஒன்றாக போட்டும் செய்யலாம்.அருமையாக இருக்கும்.ஆனால் பாகற்காயுடன் மற்ற காய்களை சேர்க்க வேண்டாம்.


Monday, 9 February 2015 | By: Menaga Sathia

பீர்க்கங்காய் சொதி /RIDGE GOURD(PEERKANGAI) SODHI


print this page PRINT IT
அக்காவிடம் கற்றுக்கொண்ட குறிப்பு

தே.பொருட்கள்
பீர்க்காங்காய் -1 பெரியது
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி -1
நசுக்கிய பூண்டுப்பல்- 3
கீறிய பச்சை மிளகாய்- 2
பால் -1/2 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்- தேவைக்கு

தாளிக்க‌
கடுகு + உளுத்தம்பருப்பு- தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*பீர்க்காங்காயை தோல் சீவி சதுரதுண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+பூண்டு+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


*பின் தக்காளி+பீர்க்கங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி உப்பு +மஞ்சள்தூள் மற்றும் 1/2 கப் நீர் சேர்த்து 5- 6 நிமிடங்கள் வேகவிடவும்.

*காய் வெந்ததும் கடைசியாக பால் சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும்.

பி.கு
*பீர்க்கங்காயின் தோலில் துவையல் செய்யலாம்.
Saturday, 24 January 2015 | By: Menaga Sathia

ஈஸி சிக்கன் குழம்பு(ப்ரெஷர் குக்கர் செய்முறை)/Easy Chicken Kuzhampu (Pressure Cooker Method)



தே.பொருட்கள்

சிக்கன்  - 1/2 கிலோ
வெங்காயாம் - 1 பெரியது
தக்காளி  - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*மிக்ஸியில் வெங்காயம்+தக்காளியை ஒன்றும் பாதியுமாக தனித்தனியாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அரைத்த வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


*நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.




*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து க்ரேவி நீர்க்க இருந்தால் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

01 09 10