Saturday 11 October 2014 | By: Menaga Sathia

சாத்தூர் சேவ் / சாத்தூர் காரா சேவ் / SATTUR SEV | SATTUR KARA SEV | DIWALI RECIPES

 சென்னை - கன்னியாகுமாரி போகும் வழியில் சாத்தூர் ஊரில் சேவ் மிக பிரபலமானது.

இதில் சேர்க்கபடும் முக்கிய பொருளே பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் தான்.இதில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பிசைய தேவையில்லை.விரும்பினால் சேர்க்கலாம்.

இந்த சேவ் சுவையாக இருக்க காரணம் அந்த ஊரின் தண்ணீரும் ஒரு காரணம்.


தே.பொருட்கள்

கடலை மாவு -  1/2 கப்
அரிசி மாவு -1/2 கப்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் -5
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பூண்டு+பெருங்காயத்தூள் இவற்றினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 *பாத்திரத்தில் மிளகாய்த்தூள்+உப்பு இவற்றினை சிறிது நீரில் கரைக்கவும்.
 *பின் கடலை மாவு+அரிசி மாவு+சீரகம்+அரைத்த பூண்டு விழுது சேர்க்கவும்.
 *தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
 *எண்ணெய் காயவைத்து சேவ் அச்சியி அல்லது தேன் குழல் அச்சியில் போட்டு பிழியவும்.
*பிழியும் போது 1 சுற்று மட்டுமே சுற்றி பிழியவும். அதிக சுற்று சுற்றினால் சேவ் வேகாது மேலும் தனிதனியாக பிரிக்க முடியாது.

*பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

*ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya said...

Ipo than nanum post poten pa .Arumaiya irukum .

Ranjanis Kitchen said...

Looks crisp...

'பரிவை' சே.குமார் said...

படத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்...
எனக்கு சேவ் ரொம்பப் பிடிக்கும்... கடையில் வாங்கி சாப்பிடுவதுடன் சரி...
நல்ல பகிர்வு அக்கா...

Unknown said...

Nice crispy snack,beautifully explained,will try

Sangeetha Priya said...

interesting sev!!!

Beena said...

Yummy and crispy

Chitra said...

Super sev. I will try with garlic n pepper :)

Shama Nagarajan said...

mom/s favourite....tempting

Lifewithspices said...

sooper tatsy looking

Unknown said...

I & Monu Gillani are celebrating our very 1st combine event series - HM Besties Event #1 - Meat Lovers Month- U are most welcomed to link ur recipes here :) For details click here: Meat lovers Month

Kurinji said...

crispy and yummy sev...

Unknown said...

My daughter's fav... looks superb!!

mullaimadavan said...

Looks crispy,yummy too. Deepavali Vazhthukal!

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் சகோதரி

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_25.html

நன்றி

01 09 10