Monday 24 August 2009 | By: Menaga Sathia

இறால் ஊறுகாய்

நேற்றுதான் ஆனந்தவிகடன் வாங்கிப் பார்த்தேன்.என் ப்ளாக் ஆனந்தவிகடன் வரவேற்பரையில் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இச்செய்தியை முதலில் தெரிவித்து வாழ்த்து சொன்ன வால்பையனுக்கும் மற்ற தோழர் தோழியர்க்கும் மனமார்ந்த நன்றி!!நன்றி!!நன்றி!!


தே.பொருட்கள்:


இறால் - 500 கிராம்
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் -1 1/2குழிக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து பொடிக்க:

கடுகு - 1/2டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

*இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*வறுத்து பொடிக்க குடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கடாயில் இறாலை சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் உற்றி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கி,மிளகாய்த்தூளை சேர்க்கவும்.

*உடனே வருத்த பொடி+உப்பு+வினிகர்+இறால் இவற்றை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

*மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றவும்.

*ஆறியபின் உபயோகப்படுத்தவும்.

*1 வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


கவனிக்க:

இறாலை எண்ணெயில் வதக்கும் போது நீர் விடும்.அது சுண்டும் வரை கிளறி இறக்கவும்.தண்ணீர் சேர்த்து வதக்ககூடாது.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

சூப்பர் இறால் ஊறுகாய்...நன்றாக இருக்கின்றது மேனகா...டாப் டக்கர்...

Unknown said...

இறால் ஊறுகாய் கடையில் தான் வாங்கி சாப்பிட்டு இருக்கேன். செய்ததில்லை.. முயற்சி செய்கிறேன்.. நோன்பு முடியட்டும்

Prapa said...

என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!

SUFFIX said...

இறால் ஊறுகாயா..? அது சரி, தங்கமணியிடம் சொல்லிட வேண்டியது தான்

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!

Menaga Sathia said...

நோன்பு முடிந்ததும் செய்துபாருங்கள்,கருத்துக்கு நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

உங்களின் ப்ளாக் வந்தேன்,மிகவும் நன்றாக உள்ளது பிரபா.

Menaga Sathia said...

ஆமாம் ஷஃபிக்ஸ்,இறால் ஊறுகாய்தான்.செய்துபார்த்து சொல்லுங்கள்.நன்றி!!

SUFFIX said...

இங்கே ஒரு கடினமான சமையல் குறிப்பு இருக்கு, முடிந்தால் வந்து பாருங்களேன் Please!!
http://shafiblogshere.blogspot.com/2009/08/blog-post_16.html

UmapriyaSudhakar said...

இறால் ஊறுகாய் இதுவரைக்கும் சாப்பிட்டது கிடையாது. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

Anonymous said...

hi மேனகா இறால் ஊறுகாய் super ya ........ Alagarjayakodi from chennai

நிலாமதி said...

என் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் செய்து பார்த்துசொல்கிறேன். நன்றி உங்கள் பதிவுக்கு.நிலாமதி

Menaga Sathia said...

உங்கள் வலைப்பூவிற்க்கு வந்து பார்த்து பதிவு போட்டுள்ளேன் ஷஃபிக்ஸ்!!

Menaga Sathia said...

செய்துபார்த்து சொல்லுங்க உமா,நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அழகர் ஜெயக்கொடி!!

Menaga Sathia said...

செய்துபார்த்து சொல்லுங்கள்,தங்கள் கருத்துக்கு நன்றி நிலாமதி!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் விகடனுக்கு(ம்).

பார்க்கவே நாக்கு ஊறுதுங்கோ ...

Pavithra Elangovan said...

Wow looks tempting ...yummy

Sanjai Gandhi said...

விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள். அதை சொல்ல தான் வந்தேன். பாருங்க.. நாம் கமெண்ட் போட்ட 2 வது நாள் விகடன்ல வந்துட்டிங்க. அதனால எதுனா ஸ்பெஷலா செஞ்சி அனுப்பி வைங்க. :)

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சஞ்சய் காந்தி!!என்ன ஸ்பெஷல் செய்து அனுப்பனும்னு நீங்களே சொல்லுங்கள் செய்து அனுப்புறேன்.

PriyaRaj said...

Again this also new to me ..wanna to try it soon ....how many days can we store this pa.....

Menaga Sathia said...

1 வாரம்வரை வைத்திருந்து உபயோகிக்கலாம் ப்ரியா.செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்.நன்றிப்பா!!

Priya Suresh said...

Pondicherry makkal anaivarukum terincha virumbiya oorukai eral oorukai thana, yennaku udane prepare pannalama'nu thonuthu..my favourite..

Menaga Sathia said...

ஆமாம் நீங்கள் சொல்வதுப்போல் இது நம்மஊர் ஸ்பெஷல்.அப்புறமென்ன உடனே செய்து சாப்பிடுங்க.நன்றி ப்ரியா!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

பாத்திடுவோம்!!!! இனிமே இராலுக்கு கஷ்ட காலம் தான்!!!

Menaga Sathia said...

அய்யோ பாவம்!! உங்ககிட்ட மாட்டிக்கபோற இறாலை நினைத்தா பாவமா இருக்கு.பாவம் விட்டுடுங்க,நன்றி ராஜ்!!

01 09 10