Thursday 29 October 2015 | By: Menaga Sathia

அவல் மிக்ஸர் / AVAL (POHA) MIXTURE | DIWALI RECIPES



print this page PRINT IT
  தே.பொருட்கள்

அவல் -2 கப்
ஒமப்பொடி -1 கப்
வேர்கடலை -1/3 கப்
பொட்டுக்கடலை -1/3 கப்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு- 1/4 கப்
எண்ணெய் -பொரிக்க‌
கறிவேப்பிலை -3 கொத்து

செய்முறை

*எண்ணெய் காயவைத்து அவல்+வேர்கடலை+பொடூக்கடலை+கரிவேப்பிலை+முந்திரி இவற்றை தனிதனியாக வறுத்து கிச்சன் பேப்பரில் எண்ணெய் வடியவிடவும்.

*பாத்திரத்தில் வறுத்த வேர்கடலை+பொட்டுக்கடலை+கறிவேப்பிலை+முந்திரி+மிளகாய்த்தூள்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.

*பின் வறுத்த அவல்+ஒமப்பொடி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்






Saturday 24 October 2015 | By: Menaga Sathia

காஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BURFI) | DIWALI RECIPES



print this page PRINT IT
காஜு கத்லி முதல் முறையாக செய்யும் போது பாகுபதம் தவரி சொதப்பிவிட்டது,மேலும் முந்திரியை சரியாக பொடிக்காமல் செய்ததாலும் சரியாகவரவில்லை.

பின் இரண்டவது முறை செய்யும் போது முந்திரியை பொடித்து சலித்து,சரியான பாகு பதம் எடுத்து செய்ததில் சரியாக வந்தது.

தே.பொருட்கள்

முந்திரி -1/2 கப்
சர்க்கரை -1/2 கப்
நீர்- 1/4 கப்
நெய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*முந்திரியை மிக்ஸியில் நிறுத்தி நிறுத்தி நைசாக பொடிக்கவும்.தொடர்ந்து  பொடித்தால் எண்ணெய் விடும்.

*பொடித்த முந்திரியை ரவை சலிக்கும் சல்லடையில் சலிக்கவும் அல்லது நைசாக பொடித்திருந்தால் சலிக்க தேவையில்லை.

*நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+நீர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

*1 கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரியை தூவி சிறுதீயில் கலக்கவும்.

*சிறிது நேரத்தில் அனைத்தும் சேர்ந்தார் போல் வரும் போது இறக்கவும் அல்லது சிறிது மாவினை எடுத்து உருட்டி பார்த்தால் உருட்டும் பதத்தில் வந்தால் அதுவே சரியான பதம்.

*நெய் தடவிய தட்டு அல்லது பலகையில் கொட்டி,கை பொறுக்கும் சூட்டில் மாவினை பிசையவும்.

*குட்டியான பதத்தில் மிருதுவான‌  உருண்டையாக வரும்.

*இப்போழுது பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது உருண்டையை அதன் மீது இன்னொரு பட்டர் பேப்பர் வைத்து 1/4 அளவு தடிமனாக உருட்டவும்.

*மேலிருக்கும் பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு டைமண்ட் வடிவில் கட் செய்யவும்.

*சுவையான காஜூ கத்லி தயார்

பி.கு

*1 கம்பி பதம் என்பது சர்க்கரை பாகினை இரண்டு விரல்களுக்கு இடையை தொட்டு பார்த்தால் 1 இழை போல வரும்.

*முந்திரியை ப்ரிட்ஜில் வைத்திருந்தால் அறை வெப்பநிலையில் வந்த பிறகு பொடிக்கவும்,மேலும் மிக்ஸியின் ஜாரும் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

*முந்திரியை பொடித்து சலித்துக் கொள்வது நல்லது.

*உருட்டும் போது சதுர வடிவில் உருட்டு துண்டுகள் போட்டால் அதிகம் வீணாகமல் இருக்கும்.

*இளஞ்சூடாக இருக்கும் போது உருட்டி துண்டுகள் போடவும்,ஆறினால் துண்டுகள் போட கஷ்டமாக இருக்கும்.

*பிசையும் போது  டிரையாக இருந்தால் சிறிது பால் தெளித்து மாவினை பிசையும்,அப்படி பிழையும் போது சீக்கிரமே பயன்படுத்திவிடவும்.

*பால் சேர்க்காமல் செய்தால் 1 வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*முந்திரியை பால் விட்டு அரைத்து செய்யும் போது பர்பிChewy ஆக‌ இருக்கும்.




Monday 19 October 2015 | By: Menaga Sathia

நெல்லூர் கோங்கூரா பச்சடி / Nellore Gongura Pachadi

print this page PRINT IT 

 இந்த பச்சடி கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் மிக நல்ல சுவையாக இருக்கும்.

புளிச்ச கீரையில் இரு வகை உண்டு,இலையின் பின்புறத்தில் சிவப்பு நிறத்தோடு இருக்கும் கீரையில் புளிப்பு அதிகம் இருக்காது,அதற்கு புளி சேர்த்து அரைக்க வேண்டும்.சிவப்பு நிறத்தில் இல்லாமல் இருக்கும் கீரை அதிக புளிப்பு தன்மை கொண்டது அதற்கு புளி சேர்க்க தேவையில்லை.

தே.பொருட்கள்

புளிச்ச கீரை -1 சிறிய கட்டு
காய்ந்த மிளகாய்- 6
தனியா- 3 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நல்லெண்ணெய்- தேவைக்கு

தாளிக்க‌
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை- 1 கொத்து
நசுக்கிய பூண்டுப்பல் -1/4 கப்

செய்முறை

*கீரையை சுத்தம் செய்து நீரை வடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தனியா+காய்ந்த மிளகாய்+சீரகம்+வெந்தயம்+கடுகு இவற்றை எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

*பின் கீரையை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் வறுத்த மசாலாக்களை முதலில் பொடித்த பின் கீரையை உப்பு சேர்த்து நீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.


*கடாயில் 1/3 கப் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த கீரையில் சேர்த்து கலக்கவும்.

Tuesday 13 October 2015 | By: Menaga Sathia

பச்சை பட்டாணி சுண்டல் / Green Peas Sundal | Pachai Pattani Sundal | Sundal Recipes

இந்த சுண்டலில் கொத்தமல்லிதழை+பச்சை மிளகாயினை அரைத்து சேர்த்துள்ளேன்.

தே.பொருட்கள்

பச்சை பட்டாணி -1/2 கப்
கொத்தமல்லித்தழை- 1 கைப்பிடி
பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல்- 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மாங்காய் -1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு தலா -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/8 டீஸ்பூன்

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

*மறுநாள் குக்கரில் பட்டாணி+உப்பு சேர்த்து தேவைக்கு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

*கொத்தமல்லித்தழை+பச்சை மிளகாயினை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து அரைத்த கொத்தமல்லி மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


*பின் வேகவைத்த பட்டாணியை சேர்த்து நன்கு கிளறிய பின் தேங்காய்த்துறுவல்+கறிவேப்பிலை+மாங்காயினை சேர்த்து கிளறவும்.



*கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

Friday 9 October 2015 | By: Menaga Sathia

தக்காளிக்காய் அவியல் / Green Tomato Aviyal | Thakkalikaai Aviyal | Aviyal Recipes

print this page PRINT IT 

அவியல் செய்ய காய்கள் இல்லையெனில்,தக்காளிக்காயில் செய்யலாம்.மிக சுலபமானதும் கூட..

அவியலுக்கு தேங்காய் எண்ணெயும் மிக முக்கியமானது,கண்டிப்பாக சேர்க்கவும்.

தக்காளிக்காய் புளிப்பாக இருக்குமென்பதால் இதில் தயிர்/புளி எதுவும் சேர்க்கவேண்டாம்.இந்த காயினை வேகவைக்கும் போது நீரினை மிக குறைவாக சேர்க்கவும்.இது நீர்காய் என்பதால் வெந்ததும் நீர் விடும்.

தக்காளிக்காயில் அவியல் செய்து ருசித்து விட்டால் நீங்கள் வேறு எந்தகாயிலும் அவியல் செய்யமாட்டீங்க..

தே.பொருட்கள்
தக்காளிக்காய்- 6 நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
பச்சை மிளகாய்- 2
சீரகம்- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- 2

செய்முறை
*தக்காளிக்காயினை நீளவாக்கில் வெட்டி,பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நீரினை மிக குறைவாக சேர்த்து வேகவிடவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம் தவிர மற்ற அனைத்தையும் நைசாக அரைக்கவும்.கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து மேலும் 3- 4 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.

*கடைசியாக தேங்காய் எண்ணெய்+கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

*15 நிமிடங்கள் கழித்து பரிமாறினால் மிக சுவையாக இருக்கும்.

பி.கு

*காய் சீக்கிரம் வெந்து விடும்,அதனால் கவனம் தேவை.

*மசாலா சேர்த்து கிளறும் போது கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தவும்,இதனால் காய் குழையாமல் இருக்கும்.

*கறிவேப்பிலை தே.எண்ணெய் சேர்த்த பின்,சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.அவையிரண்டு மணமும் சேர்ந்து சாப்பிட சூப்பராயிருக்கும்.

Wednesday 7 October 2015 | By: Menaga Sathia

மொச்சை சுண்டல்/ Field Beans ( Mochai ) Sundal | Navaratri Recipes

print this page PRINT IT 
இதில் மசாலாவிற்கு பிஸிபேளாபாத் பொடியை பயன்படுத்தியிருக்கேன்.

தே.பொருட்கள்
மொச்சை- 1/2 கப்
பிஸிபேளாபாத் பொடி- 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

செய்முறை

*மொச்சையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு+தேவைக்கு நீர் சேர்த்து குக்கரில் 3விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்த மொச்சையை நீரை வடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து மொச்சை+பிஸிபேளாபாத் பொடி சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

பி.கு
*விரும்பினால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.

*வாங்கிபாத் மசாலா சேர்த்தும் செய்யலாம்.
Monday 5 October 2015 | By: Menaga Sathia

கடலைப்பருப்பு சுண்டல் /CHANNA DAL SUNDAL | KADALAI PARUPPU SUNDAL | SUNDAL RECIPES


print this page PRINT IT 
தே.பொருட்கள்

கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மாங்காய் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு  -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*கடலைப்பருப்பை உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து முழ்குமளவு நீர் சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும்.




*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து  பச்சை மிளகாய்+வேகவைத்த கடலைப்பருப்பு +மாங்காய் சேர்த்து வதக்கி தேங்காய்த்துறுவல்+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

பி.கு
*விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கலாம்.

*வடிகட்டிய நீரை வீணாக்காமல் சூப்/ரசம் செய்யலாம்.
Thursday 1 October 2015 | By: Menaga Sathia

கோஸ் கோப்தா/Cabbage Kofta

தே.பொருட்கள்

துருவிய கோஸ் - 1 கப்
கடலைமாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் =தேவைக்கு

செய்முறை
*துருவிய கோஸில் உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடங்கள் வைத்திருந்து எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கெட்டியாக பிசையவும்.
*நீர் சேர்க்க தேவையில்லை.கோஸிலிருந்து வரும் நீரே போதுமானது.
*உருண்டைகளாக உருட்டி குழிபணியார கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
பி.கு

*விரும்பினால் உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

*கிரேவி போல் செய்து கோப்தக்களை பரிமாறும் போது போட்டு பரிமாறலாம்.
01 09 10