Saturday 29 November 2014 | By: Menaga Sathia

மதுரை ஸ்டைல் மீன் குழம்பு /Madurai Style Meen Kuzhambu | Fish Recipes

print this page  PRINT IT  
 இந்த மீன் குழம்பில் மசாலாவை அரைத்து செய்வதும்,காரசாரமாக இருப்பதும்,நல்லெண்ணெயில் தாளிப்பதும்  தான் இதன் ஸ்பெஷல்.

Recipe Source - Pachai Milagai

தே.பொருட்கள்

மீன் துண்டுகள் -8
புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் -10
தக்காளி - 1
பூண்டுப்பல் -6
தனியாத்தூள் - 1.5 டீஸ்பூன்
வரமிள்காய்த்தூல் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க

மிளகு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் -3
தனியாத்தூள்+வரமிளகாய்த்தூள்  - தலா 1/2 டீஸ்பூன்

தாளிக்க
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  நீர் விட்டு மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில்  எண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வடகம்+கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*பின் நறுக்கிய வெங்காயம்+தக்காளி+பூண்டு சேர்த்து வதக்கவும்.
*அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்க்கவும்.
*5 நிமிடங்களுக்கு மீதமுள்ள கறிவேப்பிலை செர்த்து இறக்கவும்.

பி.கு
*மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பினை தட்டு போட்டு  மூடவேண்டாம்.

*மீன் சேர்த்த பிறகு தட்டு போட்டு மூடினால் மீன் உடைந்து விடும்.

*இதில் குழம்பு கொதிக்கும் போது கத்திரிக்காய்,மாங்காய் சேர்த்து செய்துள்ளேன்.
Thursday 27 November 2014 | By: Menaga Sathia

முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக்/Eggless Tutti Frutti Cake | Cake Recipes

தே.பொருட்கள்

மைதா - 1 1/2 கப் +2 டீஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
உப்பு -1/4 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
சமையல் எண்ணெய் -1/2 கப்
பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
பேக்கிங்  பவுடர் -1 டீஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி -1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை

* அவனை 200 10 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்.பேக்கிங் பானில் எண்ணெய் தடவி சிறிது 1 டீஸ்பூன் மைதா தூவி விடவும்.டூட்டி ப்ரூட்டியில் 1 டீஸ்பூன் மைதா கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் தயிர்+ சர்க்கரை சேர்த்து கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.

*பின் பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா+உப்பு  சேர்த்து கலந்தல் தயிர் கலவை பொங்கி வரும்.

*மாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.வெனிலா எசன்ஸ்+டூட்டி ப்ருட்டி சேர்க்கவும்.

*பேக்கிங் பானில் ஊற்றி 180°C  40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.



Thursday 20 November 2014 | By: Menaga Sathia

கறிவேப்பிலை துவையல் / Karuveppillai Thuvaiyal | Curry Leaves Thuvaiyal

print this page PRINT IT 
கறிவேப்பிலையின் மருத்துவபயன்கள் அனைவரும் அறிந்ததே.இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

இதனை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் - கண்பார்வை அதிகரிக்கும், கெட்ட கொழுப்பினைக் குறைக்கும்,நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்,கூந்தல் நன்கு வளரும்,கேன்சரை தடுக்கும்.

தே.பொருட்கள்

கறிவேப்பிலை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
புளி - நெல்லிக்காயளவு
சின்ன வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி கா.மிளகாய் மற்றும் தேங்காய் துறுவலை மட்டும் லேசாக வதக்கி ஆறவைக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் வெங்காயம் தவிர அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.

*கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பி.கு

*இந்த துவையல் கொரகொரப்பாக அரைத்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.

*1 நாள்வரை ப்ரிட்ஜில்வைத்திருந்து பயன்படுத்தலாம்.
Monday 17 November 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு ஸ்டைல் அசைவ தாளி/CHETTINAD STYLE NON VEG THALI | THALI RECIPES


print this page PRINT IT 

நீண்ட நாட்களாக செட்டிநாடு ஸ்டைல் அசைவ தாளி உணவு செய்ய வேண்டும் என்று இருந்தேன். போட்டோ எப்பவோ எடுத்தது என்றாலும் பதிவு செய்ய இப்போழுது தான் நேரம் கிடைத்தது.

இதில் நான் செய்திருப்பது

செட்டிநாடு சிக்கன் பிரியாணி
மிளகு சிக்கன் வறுவல்
சாதம்
தக்காளி ரசம்
தக்காளி தித்திப்பு
வெள்ளரிக்காய் பச்சடி
கவுனி அரிசி பாயாசம்.

வேலை செய்ய சுலபமாக முடிய தக்காளி தித்திப்பு மர்றும் கவுனி அரிசி பாயாசம் இவற்றினை முதல்நாளே செய்து வைக்கலாம்.

மேற்கூரிய 2 சமையலை தவிர மீதி அனைத்தையும் செய்து முடிக்க 1 மணிநேரமே ஆகும்.
Thursday 13 November 2014 | By: Menaga Sathia

முதலூர் மஸ்கோத் அல்வா | MUDHALUR MUSCOTH HALWA | TAMILNADU SPL

print this page PRINT IT 
முதலூர் என்பது தூத்துக்குடியில் இருக்கும் ஒரு கிராமம்.இங்கு இந்த மஸ்கோத் அல்வா மிக பிரபலம்.



தேங்காய்பாலில் செய்வதால் இதனை அதிகநாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தமுடியாது.

இந்த அல்வாவின் பெயர் காரணம் வளைகுடா நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் தேங்காய்பாலில் இந்த அல்வா செய்வதால் காலபோக்கில் இது மஸ்கோத் அல்வா என அழைக்கபடுகிறது.

இந்த அல்வா செய்ய மிக பொறுமை தேவை.1/2 கப் மைதா போட்டு செய்ததில் எனக்கு கிட்டதக்க 55 நிமிடங்கள் ஆனது.

தயாரிக்கும் நேரம் - 55 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மைதா -1/2  கப்
தேங்காய் -1
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரிதுண்டுகள் -10

செய்முறை

*முதல்நாளே மைதாவை நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.


*பின் அதில் 3 கப் வரை நீர் சேர்த்து பிசையவும்.மைதாவிலிருந்து பால் வரும்.

*இதனை  வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி அப்படியே வைக்கவும்.

*மறுநாள் மேலோடு இருக்கும் நீரை வடிகட்டி பாலை மட்டும் பயன்படுத்தவும்.

*தேங்காயை துருவி 3 கப் வரை கெட்டிப்பால் எடுக்கவும்.

*அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால்+சர்க்கரை+முந்திரிதுண்டுகள்+மைதாபால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.


*இப்படியே தொடர்ந்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.

* தேங்காய்ப்பால் சுண்டி அதிலிருந்து எண்ணெய் வந்து அல்வா  வேக சரியாக இருக்கும்.

*அல்வா வெந்து கலவை பந்து போல சுருண்டு வரும் போது தட்டில் கொட்டி துண்டுகள் போட்டோ அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.


Monday 10 November 2014 | By: Menaga Sathia

சம்பா சாதம் & சிதம்பரம் கொத்சு / SAMBA SADHAM & CHIDAMBARAM KOTSU | CHIDAMBARAM NADARAJAR KOIL SPL

சம்பா சாதம் + கத்திரிக்காய் கொத்சு இவையிரண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில்  இறைவனுக்கு படைக்கபடும் முக்கிய பிரசாதம்.

சம்பா சாதம் என்பது உதிரியாக வடித்த சாதத்தில் நெய்யில் தாளித்த மிளகுத்தூள்+கறிவேப்பிலை இவைகளை சாதத்தில் போட்டி கிளறி செய்வது.

கத்திரிக்காய் கொத்சு என்பது சிறிய கத்திரிக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் புளிகரைசல்+கொத்சு பொடி சேர்த்து செய்வது.கோவில் தீட்ஷீதர்கள் இதில் வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.இது கோவிலில் செய்யும் முறை.

சிதம்பரம் சென்றால் உடுப்பி விலாஸ் ஹோட்டல் கொத்சு சாப்பிட யாரும் மறக்காதீங்க,பொங்கல் + இட்லியுடன் சாப்பிட சூப்பர்.

சம்பா சாதத்தில் கொத்சு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் என கேள்விபட்டதோடு சரி.முகநூலில் பானுமதி மாமியிடம் குறிப்பினை கேட்டு செய்தேன்.அதோடு அவர்கள் தொட்டு கொள்ள மசால் வடை சூப்பர்னு சொல்ல நானும் அதே காம்பினேஷனில் செய்தேன் நன்றாக இருந்தது.நன்றி மாமி !!

மாமி சொல்லிய குறிப்பில் வெங்காயம் சேர்க்க சொல்லியிருந்தாங்க.ஆனால் நான் சேர்க்கவில்லை.

நான் செய்திருக்கும் கொத்சு,கத்திரிக்காயை சுட்டு செய்திருக்கேன்,ஆனால் கோவிலில் செய்யும் கொத்சுவில் சிறிய கத்திரிக்காயை எண்ணெயில் வதக்கி செய்வாங்க.

சம்பா சாதம் செய்ய தே.பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
ப்ரெஷ் மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடாயில் நெய் விட்டு மிளகுத்தூள்+கறிவேப்பிலை  சேர்த்து தாலித்து சாதம்+உப்பு சேர்த்து கிளறவும்.


*விரும்பினால் தாளிக்கும் போது முந்திரிப்பருப்பு சேர்க்கலாம்.

சிதம்பரம் கொத்சு

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் -1
புளிகரைசல் - 1 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்சு பொடி செய்ய

காய்ந்த மிளகாய் -2
தனியா - 2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நல்லென்ணெயில் வறுத்து பொடிக்கவும்.

*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அவன் அல்லது அடுப்பில் சுட்டு ஆறியதும் தோலுரித்து நன்கு மசிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு புளிவாசனை போனதும் மசித்த கத்திரிக்காய்+பொடித்த பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.

பி.கு
 *வெங்காயம் சேர்க்க விரும்புபவர்கள் சின்ன வெங்காயத்தினை தாளித்த பிறகு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*இந்த கொத்சு பொங்கல்,இட்லி+அரிசி உப்புமாவுக்கு பெஸ்ட் காம்பினேஷன்.




Wednesday 5 November 2014 | By: Menaga Sathia

சிக்கன் கொத்து பரோட்டா / CHICKEN KOTTU PAROTTA

கொத்து பரோட்டாவை சுவைத்தவர்கள் அதன் சுவையை மறக்கமாட்டார்கள்.இதில் சிக்கன் பதிலாக முட்டை அல்லது காய்கள் சேர்த்து செய்யலாம்.

நான் எம் டி சால்னா குறிப்பில் செய்ததைப் போல் செய்து அதனுடன் சிக்கன் சேர்த்து செய்துள்ளேன்.இதில் விரும்பினால் காரம் அதிகம் தேவைப்படுவோர் வெங்காயம் வதக்கும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கலாம்.அல்லது பச்சை மிளகாயை கூடுதலாக சேர்க்கலாம்.

இதில் முக்கியமானது பரோட்டாவை நன்கு 10 நிமிடம் வரை கொத்தினால் தான் நன்றாகவும் உதிரியாகவும் வரும்.

தே.பொருட்கள்

பரோட்டா - 4
சிக்கன் சால்னா - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
முட்டை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய்+உப்பு = தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் நறுக்கிய தக்காளியில் பாதியளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

*இதனுடன் பரோட்டாவை கைகளால் பிய்த்து போட்டு லேசாக வதக்கவும்.

*பாத்திரத்தின் ஓரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

*முட்டை பாதியளவு வெந்ததும் பரோட்டவுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

*இப்போழுது சிக்கன் சால்னாவை ஊற்றவும் சிக்கன் எலும்பில்லாமல் சேர்க்கவும்,எலும்புட,ன் இருந்தால் சதைப்பகுதியை தனியாக எடுத்து சேர்க்கவும்.

*இதனை அனைத்தையும் நன்றாக கிளறி டம்ளரில் நன்கு 10 நிமிடங்கள் கொத்திவிடவும்.

*பரோட்டா நன்கு உதிரியாக வந்தவுடன் மீதமுள்ள தக்காளி+கறிவேப்பிலை சேர்த்து 1 முறை கிளறி இறக்கவும்.

*சூடாக பரிமாறவும்.

Monday 3 November 2014 | By: Menaga Sathia

கடம்பூர் போளி / KADAMBUR POLI | PURAN POLI

கடம்பூர் போளி மிக பிரபலமானது.கடம்பூர்  கோவில்பட்டிக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில் அமைந்துள்ள சிறுகிராமம்.

இந்த போளியின் ஸ்பெஷல் மேல் மாவினை குறைந்தது 1 மணிநேரமாவது ஊறவைக்க வேண்டும்.மாவு எந்த அளவுக்கு ஊறுகிறதோ அந்த அளவு போளி மிகவும் மிருதுவாக இருக்கும்.

போளி எப்போழுதும் செய்த உடனே சாப்பிடுவதைவிட மறுநாள் சாப்பிட நன்றாக இருக்கும்.மேலும் சுவையான மிருதுவான போளி செய்ய இங்கே பார்த்து சிறு மாறுதலுடன் செய்தேன்.சுவையோ சுவை.

மிருதுவான போளி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனத்தில் கொண்டுசெய்தால் சுவையாக இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவில் 10 போளிகள் வரும்.

போளி செய்ய தே.பொருட்கள்

மேல் மாவுக்கு

மைதா - 1/2 கப்
மஞ்சள்தூள் - 3/4 டீஸ்பூன்
நீர் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

ஸ்டப்பிங் செய்ய

கடலைப்பருப்பு - 1/2 கப்
துருவிய வெல்லம் - 1/3 கப்
ஏலக்காய்த்தூள் -3/4 டீஸ்பூன்

போளி செய்ய
அரிசி மாவு -1/2 கப்
நெய் - சுடுவதற்கு

செய்முறை

*ஒரு பவுலில் தண்ணீர்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.பின் அதில் மைதா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும்.

*மாவின் பதம் கண்டிப்பாக தளர்த்தியாக இருக்க வேண்டும்.பின் அதன் மேல் எண்ணெய் ஊற்றி அதிகப்பட்சம் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கடலைப்பருப்பினை நீர் ஊர்றி 3/4 பதம் வேகவைத்து நீரை நன்கு வடிக்கவும்.

*ஆறியதும் மிகஸியில் பவுடராக பொடிக்கவும்.

*வெல்லத்தில் சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வெல்ல நீரை வைத்து உருட்டும் பதத்தில் பாகு எடுக்கவும்.

*சிறிதளவு வெல்ல நீரை தண்ணீரில் ஊற்றினால் உருட்டம் பதத்தில் வந்தால் அதுவே சரியான பதம்.

*பாகு வந்ததும் ஏலக்காய்த்தூள் +பொடித்த கடலைப்பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கி ஆறவைக்கவும்.

*மைதா மாவு ஊறியதும் எண்ணெயை தனியாக கிண்ணத்தில் வடிக்கவும்.அதில் நெல்லிக்காயளவு உருண்டை எடுக்கவும்.

*அதனை அரிசிமாவில் வைக்கவும்.அதன் மேல் ஸ்டப்பின் உருண்டையை வைக்கவும்.

*ஸ்டப்பிங் உருண்டை மேல் மாவினை விட 3 மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்.அப்போழுது தான் போளி மிருதுவாக இருக்கும்.

*ஸ்டப்பிங் உருண்டையை பொறுமையாக மேல் மாவில் வைத்து எண்ணெய் தொட்டு உருட்டி மீண்டும் அரிசி மாவில் புரட்டவும்.

*இப்போழுது அதனை மிக மெலிதாக நிதனமாக உருட்டவும்.

*சூடான தவாவில் போடவும்.மேலே லேசாக உருண்டைகள் வரும் போது உடனே திருப்பி நெய் தடவவும்.

*பின் 2  நிமிடங்களில் மறுபுறம் திருப்பி நெய் தடவி எடுக்கவும்.

*சூடாக பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை

1. மேல் மாவு தளர்த்தியாக இருக்க வேண்டும்,அப்போழுதுதான்  போளி மிக மிருதுவாக இருக்கும்.
2.அதனை கண்டிப்பாக அதிகப்பட்சம் 1 மணிநேரம் ஊறவைக்கவும்
3. கடலைப்பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து பின் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சரியாக இருக்கும் அல்லது 3/4 பதத்தில் வேகவைத்து எடுக்கவும்.
4.வேகவைத்த பருப்பினை நன்கு நைசாக பொடிக்கவும்.
5.எப்போழுதும் ஸ்டப்பிங் மேல் மாவினை விட முன்று மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்.
6.அரிசி மாவில் அதிகமாக புரட்டி எடுத்து உருட்டினாலும் போளி ஹார்ட்டாக இருக்கும்.
7.போளி உருண்டை செய்யும் போது கின்ணத்தில் வைத்திருக்கும் எண்ணெயை தொட்டு உருண்டை செய்யவும்.
8.எப்போழுதும் போளி உருட்டும் போது அரிசிமாவில் புரட்டி உருட்டவும்.
9.போளி சுடும் போது நெய் தடவி சுடுவது சுவையாக இருக்கும்.
10. மேலும் போளி செய்து தவாவில் போட்டதும் மேலே சிறு உருண்டைகள் போல எழும்பி வரும் போது உடனே திருப்பி மறுபுறம் 2 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து எடுப்பது போளி மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.
11.அதிகநேரம் வேகவைத்து எடுத்தால் போளி கடினமாக இருக்கும்.

இந்த டிப்ஸ்களை பின்பற்றி போளி செய்தால் மிக மென்மையாகவும்,சுவையாகவும் இருக்கும்.
01 09 10