
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பால் - 1கப்
டைமண்ட் கல்கண்டு - 1 கப்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
*அரிசி+பாசிப்பருப்பை குக்கரில் 1கப் பால்+1 1/4 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.
*கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும்.(நீரில் கரைய நேரமாகும்).
*கல்கண்டு பவுடரை சிறிது நீர் விட்டு பாகுபதம் வரை காய்ச்சி வெந்த அரிசி பருப்பில் சேர்க்கவும்.
*நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை+ஏலக்காய்த்தூள்+மீதமிருக்கும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
*சுவையான கல்கண்டு சாதம் ரெடி.அம்மனுக்கு பிடித்த நைவேத்தியம் இது.