Tuesday 29 September 2009 | By: Menaga Sathia

வெஜ் புலாவ்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த பீன்ஸ்,கேரட்,பட்டாணி கலவை - 1 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
செய்முறை :

*வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய்விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.

*பின் பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் 3 கப் அரிசிக்கு 4 1/2 கப் தண்ணிர் வைத்து உப்பு+அரிசி சேர்க்கவும்.

*3 விசில் வைத்து இறக்கி பச்சடி அல்லது க்ரேவியுடன் பறிமாறவும்.
Sunday 27 September 2009 | By: Menaga Sathia

சுறாமீன் குழம்பு

தே.பொருட்கள்:

சுறாமீன் - 8 துண்டுகள்
புளி - 1 எலுமிச்சை பழளவு
முழுபூண்டு - 2
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

* புளியை ஒரு கோப்பையளவு கரைத்து அதில் உப்பு+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*பூண்டை தோலுரித்து நசுக்கவும்.மிளகு சீரகத்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் சுத்தம் செய்த மீன் +பூண்டு+ வறுத்த மிளகு சீரகப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
Friday 25 September 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் காந்த்வி(Oats Khandvi - Gujarat Spl)

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
ரவை - 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் - 2
வெள்ளை எள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை :

*ஒட்ஸை மிக்ஸியில் பொடிக்கவும்.

*ஒட்ஸ்+ரவை+உப்பு+பெருங்காயம்+மஞ்சள்தூள்+தயிர் சேர்த்துக் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ரவை நன்கு ஊறியிருக்கும்,2 கப் நீர்விட்டு கரைத்து அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் விடாது கிளறவும்.
*கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி கட்டிவிழுந்திருந்தால் எடுத்துவிடவும்.

*மேலும் 1/2 கப் நீர்விட்டு கரைத்து அடுப்பில் மறுபடியும் கட்டியில்லாமல் கிளறி இறக்கவும்.

*டேபிளில் அலுமினியம் பேப்பர் போட்டு அதில் கலவையை கொட்டி ஒரு தட்டையான கரண்டியால் சமச்சீர்ப்படுத்தி ஆறவிடவும்.
*ஆறியதும் அதை கத்தியால் துண்டுப்போட்டு மெதுவாக பாய் சுருட்டுவதுபோல் சுருட்டி தட்டில் வைக்கவும்.
*அதன்மேல் தேங்காய்த்துருவல்+கொத்தமல்லித்தழை+தாளிப்புக் கலவை போட்டு பரிமாறவும்.
கவனிக்க:

1.ஒரிஜினல் காண்டவி கடலைமாவில் செய்வது.ஒட்ஸ்+ரவைக்கு பதில் கடலைமாவு போட்டு செய்வது.நான் ஒரு மாறுதலுக்கு ஒட்ஸில் செய்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது.

2.ஒட்ஸ்+ரவை கலவையை 1/2 மணிநேரம் கண்டிப்பாக ஊறவைக்கனும்.ரவை ஊறினால் தான் நன்றாகயிருக்கும்.

3.அலுமினியம் பேப்பரில் தடவியதும் ஆறவிட்டால்தான் துண்டுப்போட வரும்.
Wednesday 23 September 2009 | By: Menaga Sathia

பார்லி - முளைப்பயறு புட்டு

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
முளைபயறு கொண்டைக்கடலை,பச்சைப்பயறு - 1/2 கப்
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1சிரு துண்டு
பூண்டுப்பல் -4
கொத்தமல்லித்தழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பார்லியை 1 மணிநேரம் ஊறவைத்து தண்ணியை வடித்துக்கொள்ளவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும்.

*முளைப்பயறுடன் உப்பு+பூண்டுப்பல்+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+அரைத்த பயறு சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறவும்.

*அப்போழுது ஊறவைத்த பார்லி+எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பொலபொலவென வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


பி.கு:

இந்த புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.
Monday 21 September 2009 | By: Menaga Sathia

சிக்கன் மஞ்சூரியன்(டிரை)/ Chicken Manchurian (Dry)

தே.பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
ரெட் கலர் - 1 சிட்டிகை
மைதாமாவு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
சோளமாவு - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 சிறியது
குடமிளகாய் - 1 சிறியது
வெங்காயத்தாள் -4
சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

* சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில் க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.
*வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

*பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும்,கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

*பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.


பி.கு:

விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்.இதில் சிக்கனை நான் க்ரில் செய்து செய்துள்ளேன்.

இன்று(21.09.09) என்மகளுக்கு பிறந்தநாள்!!

இன்று என் செல்லப்பொண்ணு ஷிவானி க்கு பிறந்தநாள்.இப்போழுதுதான் என்மகள் பிறந்ததுப்போல் இருக்கு.அதற்க்குள் ஒரு வயது ஆகிவிட்டது.27 ந்தேதி ஞாயிறன்று விமரிசையாக கொண்டாட உள்ளோம்.அனைவரையும் அன்புடன் பார்ட்டிக்கு அழைக்கிறேன்.

Happy Birthday My Dear

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Bonne Anniversaire



Birthday Graphics
Friday 18 September 2009 | By: Menaga Sathia

பார்லி டோக்ளா

தோழி கீதா ஆச்சல் ஒட்ஸில் டோக்ளா செய்திருந்தாங்க.எனக்கும் டோக்ளா சாப்பிட ஆசை வந்துடுச்சு,விடுவோமா நாமெல்லாம் என்ன சாப்பிட ஆசைப்படுறொமோ அதை செய்து சாப்பிட்டு தான் மறுவேலை.அதனால நான் பார்லியில் இந்த டோக்ளாவை செய்துப் பார்த்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.நீங்களும் செய்துப் பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க.

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
தயிர் - 1 கப்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை -சிறிது


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*முதலில் பார்லி குருணை+தயிர்+உப்பு+மஞ்சள்தூள் கலந்து குறைந்தது 3 அல்லது 4 மணிநேரமாவது ஊறவைக்கவும்.

*பின் அதனுடன் ஒட்ஸ்+பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

*கலவை கெட்டியாக இருக்கும் கொஞ்சம் நீர் சேர்த்து மேலும் 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*ஊறியதும் கலவை கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்க்கவும்.

*அதனை இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டில் அல்லது அலுமினியம் பார்சல் டிரேயில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும்.

*வெந்து ஆறியதும் விருப்பமான வடிவத்தில் கட் செய்து தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து அதன்மேல் கொட்டவும்.

கவனிக்க:

பார்லி கண்டிப்பாக 4 மணிநேரமாவது ஊறினால்தான் வேகும்.கடைகளில் உடைத்த பார்லி கிடைக்கிறது.அதனை வைத்துதான் இந்த டோக்ளா செய்தேன்.
Wednesday 16 September 2009 | By: Menaga Sathia

உருண்டை மோர் குழம்பு

தே.பொருட்கள்:

மோர் குழம்புக்கு

தயிர் - 125 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி +துவரம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தனியா - 1 டீஸ்பூன்

உருண்டைக்கு:

துவரம்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் -3
பூண்டுப்பல் -4
இஞ்சி - 1 சிறுதுண்டு
மிளகு -4


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பச்சரிசி+து.பருப்பு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.தனியாவை வெறும் கடாயில் வறுக்கவும்.

*ஊறியதும் இவற்றுடன் தேங்காய்+சீரகம்+ப.மிளகாய்+இஞ்சி+தனியா சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

*தயிரைக்கடைந்து உப்பு+மஞ்சள்தூள்+எலுமிச்சைசாறு+அரைத்து விழுது சேர்த்து நீர்க்க கரைக்கவும்.

*உருண்டைக்கு குடுத்துள்ள துவரம் பருப்புடன்+மிளகாய் சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*அதனுடன் உப்பு+மிளகு+பூண்டுப்பல்+இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய்விட்டு அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாக கிளறவும்.

*அதனை உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மோர் கலவையில் வெந்த உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.


பி.கு:
அசத்தலான சுவையில் இருக்கும் இந்த குழம்பு.
Monday 14 September 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் பாகாளாபாத்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
பால் -1 கப்
தயிர் -125 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிது
இஞ்சி -1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் -2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும்.

*பாலில் ஒட்ஸை நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து,அதனுடன் இஞ்சி,பச்சைமிளகாய் போட்டு வதக்கி வெந்த ஒட்ஸில் சேர்க்கவும்.

*ஒட்ஸ் ஆறியதும் தயிர்+உப்பு+கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கி பறிமாறவும்.

பி.கு:

விருப்பப்பட்டால் இதனுடன் துருவிய வெள்ளரி,காரட் சேர்க்கலாம்.மாதுளை,உலர்ந்த திராட்சையும் சேர்க்கலாம்.சுவை தூக்கலாக இருக்கும்.
Saturday 12 September 2009 | By: Menaga Sathia

தேவதையின் வரங்கள்

இந்த பதிவை எழுத அழைத்த சகோதரர் வசந்த்க்கு நன்றி!!

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

நான் தேவதையிடம் கேட்ட வரங்கள்

முதல் வரம் : மோட்சமடைந்த தந்தை மீண்டும் உயிருடன் வர கேட்பேன்.

இரண்டாவது வரம் : பார்வையில்லாதவர்களுக்கு பார்வை அளித்து அவர்கள் இந்த உலகத்தை ரசிக்கவேண்டி கேட்பேன்.

மூன்றாவது வரம் : ஒரு நாள் ஜனாதிபதியாக கேட்பேன்.

நான்காவது வரம்: மணிமேகலை வைத்திருந்த அட்சயபாத்திரம் வேணும்னு கேட்பேன்,அனைவரும் பசியில்லாமல் வாழணும்

ஐந்தாவது வரம் : ஔவையார் மாதிரி நல்ல படைப்புகள் எழுத வேணும்னு கேட்பேன்

ஆறாவது வரம் : எம்.எஸ்.சுப்புலட்சுமி குரல் வேணும்னு கேட்பேன் அவங்க குரலுக்கு நான் அடிமை

ஏழாவது வரம் : என்னுடைய கல்லூரி வாழ்க்கை வேனும்னு கேட்பேன்

எட்டாவது வரம் : என் வகுப்புத்தோழி (1 முதல் 10 வது வரை ஒன்றாக படித்தோம்) செல்வி யை பார்க்கனும்னு கேட்பேன். (10 வது
முடித்தபின் தொடர்பே விட்டு போய்விட்டது).

ஒன்பதாவது வரம்: திரும்பவும் குழந்தை பருவத்துக்கே மாறி அம்மா அப்பாவுடன் வாழனும்னு கேட்பேன்

பத்தாவது வரம் : எனக்காக திருமால் திரும்பவும் கண்ணன் அவதாரமெடுத்து அவரது குறும்புகளை பார்க்க ஆசைன்னு கேட்பேன்.


இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....


1.ஷஃபிக்ஸ்

2.நிலாமதி

3.இயற்கை

4.சிங்கக்குட்டி
Friday 11 September 2009 | By: Menaga Sathia

தூனாமீன்(Thon) பொடிமாஸ்

தே.பொருட்கள்:

தூனாமீன் - 1 டின்
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்

செய்முறை :

*வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூண்டு+வெங்காயம்+பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.

*டின்னை உடைத்து மீனை தண்ணிலிருந்து நன்கு பிழிந்து வைக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள்+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+மீன்+உப்பு அனைத்தையும் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

கவனிக்க:

டின் மீனில் உப்பு இருப்பதால் உப்பு பார்த்துப் போடவும்.
Thursday 10 September 2009 | By: Menaga Sathia

முள்ளங்கி பகோடா

தே.பொருட்கள்:

முள்ளங்கி - 1 நடுத்தர சைஸ்
கடலைப்பருப்பு - 1/2 கப்
வரமிளகாய் - 4
பூண்டுப்பல் - 3
சின்ன வெங்காயம் - 7
சோம்பு - 1டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கொத்தமல்லித்தழை -சிறிது


செய்முறை :

*முள்ளங்கியை துருவி பிழிந்துக் கொள்ளவும்.

*கடலைப்பருப்பு 3/4 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் மிளகாய்+சோம்பு+இஞ்சி+பூண்டு+வெங்காயம்+உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
*கொத்தமல்லித்தழை+முள்ளங்கியை அரைத்த பருப்புடன் சேர்த்து எண்ணெயில் பகோடாகளாக பொரிக்கவும்.


பி.கு:
இந்த பகோடா மிகவும் க்ரிஸ்பியாக இருக்கும்.
Wednesday 9 September 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் வெண்பொங்கல்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் -1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை


தாளிக்க:

மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி -1 சிறுதுண்டு
முந்திரி - தேவைக்கு
நெய் -1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*பாசிப்பருப்பை 1 1/2 கப் நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.

*வெந்ததும் அதில் உப்பு+ஒட்ஸை போட்டு வேகவைத்து இறக்கவும்.

*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

பி.கு:

பாசிப்பருப்பு வேகவைக்கும் நேரம் தவிர மற்றபடி இந்த ஒட்ஸ் பொங்கல் செய்வதற்க்கு ரொம்ப ஈஸி.சுவையும் நல்லாயிருக்கும்.
Tuesday 8 September 2009 | By: Menaga Sathia

சிக்கன் மிளகு குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 சிறியது
பூண்டுப்பல் - 10
மிளகுத்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
ப்ரோசன் பட்டாணி - 1 கப் (விருப்பப்பட்டால்)
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு -2
பிரிஞ்சி இலை -2


செய்முறை :

*சிக்கனை சுத்தம் செய்யவும்.

*வெங்காயம்+தக்காளி+பூண்டு இவற்றை வெட்டிக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் தனியாத்தூள்+மிளகுத்தூள்+வினிகர்+சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.

*தேவையானளவு நீர்+உப்பு போட்டு வேகவிடவும்.

*கறி வெந்ததும் பட்டாணியை போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:

குளிர்காலத்தில் தொண்டை கரகரப்பாக இருக்கும் போது இந்த குழம்பு செய்து சாப்பிடலாம்.உடம்புக்கு நல்லது.
Monday 7 September 2009 | By: Menaga Sathia

360° Foodie Award


விருது என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான்.இந்த விருதினை திருமதி.ப்ரியா அவர்கள் எனக்கு குடுத்திருக்காங்க.அவங்களுக்கு என மனமார்ந்த நன்றி!!.இந்த விருதினை நான் குடுக்க விரும்பும் நபர்கள் கீதா ஆச்சல்,ஹர்ஷினி அம்மா,அம்மு மது,பாயிஷா,நித்யா,ஸ்ரீப்ரியா,ஷாமா நாகராஜன் இவர்களுக்கு வழங்குகிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

பேரிச்சம்பழம் மஃபின்

தே.பொருட்கள்:

பால் -1 கப்
முட்டை - 1
மைதா மாவு -2 கப்
உப்பு - 1சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
உருக்கிய பட்டர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 1/2 கப்
பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
பாதாம் பவுடர் - 1 டீஸ்பூன்

செய்முறை :

* ஒரு பவுலில் முட்டை+பால் கலந்து நன்கு கலக்கவும்.பின் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை நன்கு கலக்கவும்.

*மற்றொரு பவுலில் மைதா+உப்பு+பட்டை பவுடர்+பாதாம் பவுடர்+பேக்கிங் பவுடர் கலக்கவும்.

*மைதா கலவையை சிறிது சிறிதாக முட்டை,பால் கலவையில் கட்டியில்லாமல் கலக்கவும்.

*அதனுடன் நறுக்கிய பேரிச்சம்பழம்+பட்டர் சேர்க்கவும்.

*அவனை 400 டிகிரியில் முற்சூடு செய்து கலவையை மஃபின் கப்பில் முக்கால் பாகம் வரை ஊற்றி 20 நிமிடம் பேக் செய்யவும்.

*அவனிலிருந்து வெளியே எடுத்து 10 நிமிடம் கழித்து எடுத்தால் ஒட்டாமல் வரும்.

*குழந்தைகளுக்கு பிடித்த பேரிச்சம்பழம் மஃபின் ரெடி.


கவனிக்க:

அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் செட் செய்யவும்.ஒரு டூத்பிக் கொண்டு கலவையில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வந்திருந்தால் வெந்திருக்கு என்று அர்த்தம்.
Friday 4 September 2009 | By: Menaga Sathia

மேலும் ஒரு விருது!!

திருமதி கீதா ஆச்சல் எனக்கு இன்னொரு இரண்டு விருதினை குடுத்திருக்காங்க.அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!


இந்த விருதினை பாயிஷா,ப்ரியாராஜ்,ப்ரியா,நித்யா,பவித்ரா,ஸ்ரீப்ரியா வித்யாஷங்கர் ,ஷாமா நாகராஜன்,ஜலிலாக்கா இவர்களுக்கு வழங்குகின்றேன்.
இந்த விருதினை என்னுடைய ப்ளாக் Followers அனைவருக்கும் வழங்கின்றேன். அனைவருக்கும் என் நன்றி!!

உயிரெழுத்தில் என்னைப்பற்றி

ம்மா +ப்பா = என்னுடைய அன்புக்குரியவர்கள்

சை = என் மகளுக்கு நல்லத் தாயாக இருக்கனும்,அவங்க ஆசைகளை நிறைவேத்தனும்.

சை = இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் பிடிக்கும்

= இந்த பூச்சிகளின் தொல்லை பிடிக்காது

யிர் = கணவரும்,மகளும்

ஞ்சல் =2 மணிநேரமாவது ஊஞ்சலில் ஆட ஆசை,எப்போ நிறைவேறும்னு தெரியல.

னக்குள் இருக்கும் சாத்தான் = கோபம்

ன் இந்த பதிவு = ஜலிலாக்கா அழைத்ததால்..

யம் = இது மட்டும் இருந்தால் வாழ்வு ஒரு நரகம்.

ன்று = என் செல்ல மகள் ஷிவானி

தும் செயலே நலம் = அ,ஆ வரிசையில் வரும் பாடலில் இந்த வரிகள் ரொம்ப பிடிக்கும்,ஏன்னு தெரியல.

ஒளவை = இவங்களை பிடிக்காதவங்க யாருமே இருக்கமுடியாது.அவங்களின் ஆத்திசூடி பிடிக்கும்.

= ?????

அவரவர்க்கு பிடித்த கேள்விகளை போட்டுக்கொள்ளலாம்

நான் அழைக்கும் நபர்கள் நட்புடன் ஜமால்,சாருஸ்ரீராஜ்,கீதா ஆச்சல்.ப்ரியமுடன் வசந்த்,சூர்யா கண்ணன்,பாயிஷா,குறை ஒன்றும் இல்லை ,ஹர்ஷினி அம்மா

ஒட்ஸ் தவா கட்லட்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 +1/2 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
துருவிய கேரட்+பொடியாக அரிந்த குடமிளகாய்,
பச்சைப் பட்டாணி -1/4 கப்
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் -5
பொடியாக அரிந்த கொத்தமல்லி -சிறிது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

*1/2 கப் ஒட்ஸை தனியாக வைக்கவும்.

*1 கப் ஒட்ஸ்சுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை கலக்கவும்.

*அதை சிறிய உருண்டைகளாக எடுத்து பிடித்த வடிவத்தில் செய்யவும்.
*1/2 கப் ஒட்ஸை தட்டில் பரப்பி,அதில் உருண்டைய அதில் புரட்டி எடுக்கவும்.

*அதை தவாவில் இருபுறமும் வறுத்து எடுக்கவும்.


பி.கு:

கெட்சப்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Thursday 3 September 2009 | By: Menaga Sathia

ஸ்ப்ரவுட்ஸ் சாலட்

தே.பொருட்கள்:

முளைகட்டிய கடலை,தோல் பாசிப்பருப்பு,கொள்ளு - 3/4 கப்
வெந்தயக்கீரை - 1 கைப்பிடி
மெலன் பழத்துண்டுகள்,வெள்ளரிக்காய் -1/4 கப்
பச்சை திராட்சை - 10
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை :

*அனைத்தையும் ஒன்றாக கலந்து பறிமாறவும்.
Wednesday 2 September 2009 | By: Menaga Sathia

தாமரைத் தண்டு(Lotus Root)வறுவல்

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

தாமரைத்தண்டு,இதில் அதிகளவு இயற்கை மருத்துவ குணங்கள் இருக்கு.

சமைக்கும் முறை:

இதன் மேல் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும்.தண்டு இளசாகவோ அல்லது முற்றியதாகவோ இருந்தால் சமைத்தாலும் நறுக் நறுக் என்ரு தான் இருக்கும்.இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால் ரொம்ப இனிப்பா நன்றாகயிருக்கும்.உப்பு எப்படிதான் போட்டாலும் தண்டில் ஏறாது,உப்பில்லாமல் சப்புன்னு இருக்கும்.

தாமரைத்தண்டின் புகைப்படம்:

சத்துக்கள்:

இதில் கொழுப்பு,சர்க்கரை எதுவுமில்லை.100 கிராம் தண்டில் கார்போஹைட்ரேட் 16 கிராம்,ப்ரோட்டீன் 2 கிராம் இருக்கு.விட்டமின் C 54% ,விட்டமின் B6 13% இருக்கு.

வறுவல் செய்ய தே.பொருட்கள்:

தாமரைத்தண்டு - 1 பெரியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கார்ன்மாவு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது

செய்முறை:

*தாமரைத்தண்டை தோல்சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களும் சேர்த்து பிசிறி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தவாவில் எண்ணெய்விட்டு வறுக்கவும்.

பி.கு:

இது வாழைக்காய் வருவல் மாதிரி இருக்கும்.நானே இதுநாள்வரை இத்தண்டினை பார்த்ததும்,சாப்பிட்டதும் இல்லை.முதன்முறையாக வாங்கி சமைத்து சாப்பிட்டேன் மிகவும் நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.உங்களுக்கும் கிடைத்தால் சமைத்துப் பாருங்களேன்,அப்புறம் எப்பவும் இதைதான் செய்வீங்க.
Tuesday 1 September 2009 | By: Menaga Sathia

ரிப்பன் பகோடா /Ribbon Pakoda

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1டீஸ்பூன்
பூண்டு -4 பல்

செய்முறை:

* அரைக்க குடுத்துள்ளவைகளை அரைத்து வடிக்கட்டவும் அல்லது அரைத்த விழுதை அப்படியேவும் சேர்க்கலாம்.

*பாத்திரத்தில் கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+அரைத்த விழுது சாறு அல்லது அரைத்த விழுது சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவை ரிப்பன் அச்சில் போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
01 09 10