Saturday 28 February 2009 | By: Menaga Sathia

ரசகுல்லா


தே.பொருட்கள் :
1.பால் - 3 லிட்டர்
2.சக்கரை - 300 கிராம்
3.மைதா - 1 டேபிள்ஸ்பூன்
4.
எலுமிச்சைசாறு அல்லது வினிகர் - 6 தேக்கரண்டி

செய்முறை:

* முதலில் பாலை நன்கு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும்.பால் திரிந்து போகும்.

* 5 நிமிடம் கழித்து மெல்லிய துணியில் திரிந்த பாலை வடிகட்டவும்.இது தான் பனீர்.துணியுடன் பனீரை குழாய் தண்ணீரில் அலசவும்.அப்போ தான் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு வாசனை இருக்காது.


*பின் அந்த பனீரை துணியுடன் தொங்கவிடவும் அல்லது சமமான பாத்திரத்தின் மேல் பனீர் மூட்டையை வைத்து அதன் மேல் வெயிட்டான பாத்திரைத்தை தூக்கி வைக்கவும்.தண்ணீர் முழுவதும் வடிந்திருக்கவேண்டும்.அப்போழுது தான் மென்மையா இருக்கும்.


*பனீரை மிருதுவாக பிசையவும்.அத்துடன் மைதா சேர்த்து மேலும் மென்மையா பிசைந்து உருண்டைப் பிடிக்கவும்.


*சக்கரையை தண்ணீர் விட்டு காய்ச்சவும்.அது கரைந்து கொதிக்கும் போது உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான் ரசகுல்லா ரெடி.

டிப்ஸ் டிப்ஸ்

1.பட்டுப் புடவையை துவைத்து விட்டு கடைசியாக அலசும் நீரில் எலுமிச்சை சாரு கலந்து அலசினால் நிறம் மங்காமல் இருக்கும்.

2.பீட்ரூட்,கேரட் போன்ற காய்கறிகளை நீண்ட நாள் ப்ரிட்ஜில் வைக்க வேண்டுமானால் அதன் இலை மற்றும் வேர் பகுதிகளை நீக்கிவிட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.அதன் இலைகளை நாம் கீரைப் பொரியல் போல் செய்யலாம்.

3.கொத்தமல்லி தழை,புதினா இலைகளை வாங்கி வந்ததும் நியூஸ் பேப்பரில் சுருட்டி ப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் புதுசுபோல இருக்கும்.

4.டீத்தூள் சக்கையை ப்ரிஜின் ஓரத்தில் வைத்தால் வாடை வராது.

5.மீன் வாடை அடிக்காமல் இருக்க ஈரமான டவலை கட்டி வைத்தால் மீன் வாடை வராது.

6.ஒல்லியான பெண்கள் காட்டன்,டிஸ்யூ,ஆர்கன்ஸா புடவைகள் மற்றும் புரிய பிரிண்ட் போட்ட புடவைகள் கட்டினால் அவர்களை குண்டாக காண்பிக்கும்.

7.மாநிறமாக உள்ள பெண்கள் மெரூன்,பச்சை,பிங்க் போன்ற கலர் புடவைகள் கட்டினால் அவர்களை அழகாக காண்பிக்கும்.

8.மீதமான சப்பாத்தியை மறுமுறை உபயோகிக்கும் போது ஆவியில் சூடு செய்தால் சாப்டாக இருக்கும்.ரொம்ப நேரம் ஆவியேற்ற வேண்டாம்.

Sunday 22 February 2009 | By: Menaga Sathia

உதட்டழகு டிப்ஸ்

1.உதடுகள் உலர்ந்து போனால் திரும்பத்திரும்ப நாவால் தடவக்கூடாது.அப்படிச் செய்தால் உதட்டு வெடிப்பு இன்னும் அதிகமாகும்.

2.சாப்பிட்ட பிறகு உதடுகளை கனத்த டவல்,கனமான கர்ச்சீப் போன்றவை கொண்டு அழுந்தத் துடைக்ககூடாது.இதனால் இயற்கையான உதட்டழுகு குறைந்துவிடும்.

3.உதடுகள் காய்ந்திருந்தால் பற்களாலோ,நகத்தாலோ இழுத்து தோலை உரிக்ககூடாது.

4.குளிர்காலத்தில் உதடுகளின் மீது பாலாடையைத் தடவினால் உதடுகள் உலராமல் மிருதுவாக இருக்கும்.

5. 7 அல்லது 8 ரோஜா இதழ்களுடன் சிறுதுளி பாதாம் எண்ணெய் சேர்த்து அரைத்து உதடுகளின் மீது தினமும் பூசி வந்தால் உதடுகளுக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.நிஜமாகவே உதடுகள் ரோஜா இதழ்கள்போல் மின்னும்.

Saturday 14 February 2009 | By: Menaga Sathia

ஈஸி கோதுமை ரவை கேசரி



தே.பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
சக்கரை - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - 1 பின்ச்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தே.அளவு
ஏலக்காய் - 1

செய்முறை
1. நான் ஸ்டிக் கடாயில் நெய்விட்டு மந்திரி,திராட்சை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்
2. வேறொறு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும்.
3.முந்திரி வறுத்த அதே கடாயில் நெய்விட்டு கோதுமை ரவையை வாசம் வரை நன்கு வறுக்கவும்.
4.பின் சிறிது சிறிதாக கொதிக்கும் தண்ணீரை சேர்க்கவும்.ரவை வெந்ததும் உப்பு,சக்கரை
சேர்க்கவும்.
5.நன்கு கிளறி சுருண்டு வரும் போது முந்திரி,திராட்சை,ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும். கோதுமை ரவைகேசரி தயார்.
Thursday 5 February 2009 | By: Menaga Sathia

டிப்ஸ் டிப்ஸ்

சமையலறை டிப்ஸ்

தோசை வார்க்கும் முன் ஒரு கரண்டி தேங்காய்ப்பால் கலந்து வார்த்தால் மிகவும் ஸாப்ட்டாக இருக்கும்.

தேங்காய் மூடியில் உப்பைத் தேய்த்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கெடாது.

சீறுநீரகக்கல் கரைய தினமும் 2 பேரிக்காயை சாப்பிடவும்(அ)காலை மாலை 2 வேளையும் 2 துண்டு அன்னாசிப்பழம் சாப்பிடவும்.

சூடாயிருக்கும் தவாவில் கொஞ்சம் மோர் விட்டு வைத்து பின்,ஆறியதும் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.

சூடாக வடித்த அரிசிக் கஞ்சியில் சிறிதளவு பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால் வறட்டு இருமல் நீங்கும்.

பிரஷர் குக்கர் நீண்ட காலம் நீடித்து உழைக்க நன்றாக ஆவி வந்த பிறகே வெயிட்டைப் போட வேண்டும்.

பசை,கோந்து முதலியவை கட்டிவிட்டால் சிறிது வினிகரை கலந்து இறுக்கம் தளர்ந்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

வடைக்கு அரைத்த பின் மாவைச் சிறிது நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த பின் எண்ணெயில் பொரித்தால் மொறுமொறு என்று சுவையாக இருக்கும்.

பூஜைவிளக்கு,தாம்பளம் போன்றவைகளை புளிவைத்து தேய்த்து பின்னரும் நல்ல நிறம் வரவில்லையெனில் விபூதியைக் கொண்டு தேய்க்கப் பளபளப்பாகும்.

சோம்பை பொடி செய்து தேனில் கலந்து 21 நாள் சாப்பிட்டு வர சிந்தனை சக்திப் பெருகும்.

டிப்ஸ் டிப்ஸ்

ஆப்பிள்+பால்=வயிற்றுக்கோளாறுகளைப் போக்கும்.

சாத்துக்குடி+எலுமிச்சை=வைட்டமின் c நிறைந்தது.நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கூந்தல் அழகாகும்.

அன்னாசி+தேன்=பழமாக சாப்பிடுவது நல்லது.நார்ச்சத்து நிரம்பியது.கொழுப்பைக் குறைக்கும்.உடல் சூடு தணியும்,காலரி நிரம்பியது.

மாம்பழம்+குளிர்ந்த பால்=சருமம் மென்மையாகும்.இரத்தம் பெருகும்.புஷ்டியைத் தரும்.

கேரட்+இஞ்சிச்சாறு=குமட்டலை நிறுத்தி,பசியைத் தூண்டும்,சருமம் மிளிரும்.

மாதுளை+திராட்சை=உடலின் நச்சுத்தன்மையைக் போக்கும்.விதையுடன் சாப்பிட்டால் பற்கள் பலன் பெரும்.
01 09 10