
தே.பொருட்கள் :
1.பால் - 3 லிட்டர்
2.சக்கரை - 300 கிராம்
3.மைதா - 1 டேபிள்ஸ்பூன்
4.எலுமிச்சைசாறு அல்லது வினிகர் - 6 தேக்கரண்டி
செய்முறை:
* முதலில் பாலை நன்கு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும்.பால் திரிந்து போகும்.
* 5 நிமிடம் கழித்து மெல்லிய துணியில் திரிந்த பாலை வடிகட்டவும்.இது தான் பனீர்.துணியுடன் பனீரை குழாய் தண்ணீரில் அலசவும்.அப்போ தான் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு வாசனை இருக்காது.
*பின் அந்த பனீரை துணியுடன் தொங்கவிடவும் அல்லது சமமான பாத்திரத்தின் மேல் பனீர் மூட்டையை வைத்து அதன் மேல் வெயிட்டான பாத்திரைத்தை தூக்கி வைக்கவும்.தண்ணீர் முழுவதும் வடிந்திருக்கவேண்டும்.அப்போழுது தான் மென்மையா இருக்கும்.
*பனீரை மிருதுவாக பிசையவும்.அத்துடன் மைதா சேர்த்து மேலும் மென்மையா பிசைந்து உருண்டைப் பிடிக்கவும்.
*சக்கரையை தண்ணீர் விட்டு காய்ச்சவும்.அது கரைந்து கொதிக்கும் போது உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான் ரசகுல்லா ரெடி.