Wednesday 22 December 2010 | By: Menaga Sathia

மட்டன் பிரியாணி - 2/Mutton Biryani - 2

தே.பொருட்கள்:
பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
புதினா,கொத்தமல்லி - தலா 1 கட்டு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பிரியாணி மசாலாபொடி - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
எலுமிச்சை பழம் - 1
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
செய்முறை:*மட்டனில் சிறிது உப்பு+125 கிராம் தயிர்+கரம் மசாலா+1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து முதல் நாள் இரவே பிசைந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*ஊறவைத்த மட்டனை அப்படியே குக்கரில் நீர் சேர்க்காமல் 3 விசில் வரை வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரிசியை லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனை தனியாக வைத்து நீரை அளக்கவும்.
*அதே பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*தேங்காயைத்துருவி இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.
*வதங்கியதும் தக்காளி+பச்சை மிளகாய்+பிரியாணி மசாலா+புதினா கொத்தமல்லி+மீதமுள்ள தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வேகவைத்த மட்டனை போட்டு வதக்கவும்.4 கப் அரிசிக்கு 6 கப் அளவு நீர் ஊற்றவும்
*மட்டன் வேகவைத்த நீர் அளந்து ஊற்றவும்+தேங்காய்ப்பால்+தேவைப்பட்டால் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் போது வறுத்த அரிசியைப் போட்டு உப்பு+எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றவும்.
*தண்ணீர் சுண்டி வரும் போது 190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்தெடுக்கவும்.
*ஏலக்காயை பொடிசெய்து பிரியாணியில் தூவி கிளறி பரிமாறவும்.
Saturday 11 December 2010 | By: Menaga Sathia

சோயா கட்லட்/ Soya Cutlet

தே.பொருட்கள்

சோயா உருண்டைகள் - 20
வாழைக்காய் - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*வாழைக்காயை தோலோடு நீரில் போட்டு வேகவைக்கவும்.பின் தோலெடுத்து மசிக்கவும்.

*சோயா உருண்டைகளை கொதிநீரில் 5 நிமிடம் போட்டு,பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை பிழியவும்.

*அதனை சோம்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றவும்.

*வாழைக்காய்+அரைத்த சோயா+வெங்காயம்+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி,உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*மைதாவை நீர் விட்டு கரைக்கவும்.பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து மைதாவில் நனைத்து,ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.கெட்சப்புடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

Monday 6 December 2010 | By: Menaga Sathia

தோல்(கறுப்பு)உளுந்து வடை/Black Urad Dhal Vadai

தே.பொருட்கள்
தோல்(கருப்பு)உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - 1 சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.
*உளுந்தை தோலுடனே அதனுடன் உப்பு+இஞ்சி+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*வெங்காயம்+கறிவேப்பிலை,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் கலந்து வடைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*தோலுடனே அரைப்பதால் வடை நல்ல வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.
Sunday 5 December 2010 | By: Menaga Sathia

வெஜிடபிள் சட்னி/Vegetable Chutney

தே.பொருட்கள்:வெங்காயம் - 1
தக்காளி - 1
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
கத்திரிக்காய் - 2 சிறியது
துருவிய கோஸ் -1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - நெல்லிக்காயளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:*வெங்காயம்+கேரட்+தக்காளி+கத்திரிக்காய் இவைகளை அரிந்துக் கொள்ளவும்.உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு புளி+உப்பு தவிர அனைத்தையும் வதக்கவும்.

*ஆறியதும்இவற்றுடன் உளுத்தம்பருப்பு+புளி+உப்பு சேர்த்து நைசாக அரைத்து தாளித்துக் கொட்டவும்.
Saturday 4 December 2010 | By: Menaga Sathia

பிடித்த பாடல்களும்,விருதும்...

ஆசியா அக்காவும்,ஸாதிகா அக்காவும் பிடித்த பாடல்களை எழுத அழைத்த அவர்களுக்கு நன்றி.பெண் பாடகிகள் மட்டும் பாடிய பாடல் போட வேண்டும் என்பது விதிமுறை.

1. படம்:  உதிரிப்பூக்கள்

பாடகி:  ஜானகி  பாடல்:  அழகிய கண்ணே

ஒரு தாய் குழந்தையுடன் சந்தோஷமாக பாடும் பாடல்..கேட்பதற்க்கு ரொம்ப நல்லாயிருக்கும்.

2. படம்: கேளடி கண்மணி

பாடகி: சுசிலா  பாடல்: கற்பூர பொம்மை ஒன்று...

இறந்து போன தாயை நினைத்து ஏங்கும் ஒரு குழந்தையின் தவிப்பை கூறும் பாடல்...எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்கலங்கும் எனக்கு...

3.படம்: கன்னத்தில் முத்தமிட்டால்

பாடகி: சின்மயி  பாடல்: ஒரு தெய்வம் தந்த பூவே..

கேட்பதற்க்கு மெலடியா ரொமப் நல்லாயிருக்கும்.சின்மயி குரலும் ரொமப் பிடிக்கும்.

4.படம்: ஜோடி 

பாடகி: சுஜாதா 

பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
என் காதல் நீதான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்கின்றேன்

காதலுக்காக ஏங்கும் காதலனின் கவிதையை காதலி பாடும் பாடல்...

5.படம்: வள்ளி

பாடகி: ஸ்வர்ணலதா  பாடல்: என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..

ஸ்வர்ணலதாவின் குரலில் இந்த பாடல் கேட்க மிக அருமையாக இருக்கும்..

6.படம்: சிப்பிக்குள் முத்து

பாடகி: சைலஜா  பாடல்: வரம் தந்த சாமிக்கு

ஒரு தாய் தன் குழந்தையை தாலாட்டி சீராட்டி பாடும் பாடல்...

7.படம்: நினைத்தேன் வந்தாய்

பாடகி: அனுராதா ஸ்ரீராம்,சித்ரா

பாடல்: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார்,சொல்லு நீ
                தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு நீ...

அக்கா,தங்கை இருவரும் வருங்கால கணவரை நினைத்து பாடும் பாடல்...

8.படம்: சிந்து பைரவி

பாடகி: சித்ரா  பாடல்: நானொரு சிந்து ...

இவர்தான் தன் தாய் என்று தெரிந்தும் அம்மா என்று கூப்பிட குடியாத ஏக்கத்தில் நாயகி பாடும் பாடல்..

9.படம்: பாகபிரிவினை

பாடகி: சுசிலா  பாடல்: தங்கத்திலே ஒரு குறை இருந்தால் தரத்திலே குறை வருமோ...

அருமையான கருத்துள்ள பாடல்..

10.படம்: உள்ளம் கொள்ளை போகுதே

பாடகி: சுஜாதா பாடல்: கவிதைகள் சொல்லவா....

சுஜாதாவின் குரலில் கேட்க நன்றாகயிருக்கும்...

விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்...
நன்றி மகி!!
நன்றி சௌந்தர்!!
நன்றி காயத்ரி!!
Thursday 2 December 2010 | By: Menaga Sathia

சிக்கன் புலாவ் / Chicken Pulao


தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
புதினா - சிறிதளவு
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்+ஜாதிக்காய்த்தூள்  - தலா1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பிரியாணி இலை -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து தயிர்+கரம் மசாலா +இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.

*நறுக்கிய பாதி வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+புதினா+மஞ்சள்தூள்+ஊறவைத்த சிக்கன்  அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் அரிசி+உப்பு+தேங்காய்ப்பால்+1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*வெந்ததும் பொரித்த வெங்காயம்+ஏலக்காய்த்தூள்+ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Wednesday 1 December 2010 | By: Menaga Sathia

Crepes (Pâte à Crèpes)

                              

தே.பொருட்கள்

மைதா - 1 கப்
பால் - 2 கப்
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்+சுடுவதற்கு
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை
*மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.அதனுடன் பால்+வெனிலா எசன்ஸ்+மைதா+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு அடிக்கவும்.

*பின் பாத்திரத்தில் ஊற்றி 1 டேபிள்ஸ்பூன் உருக்கிய பட்டருடன் அடித்த மாவை கலக்கவும்.

*தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி 1 கரண்டி மாவை மெலிதாக தோசை போல் ஊற்றி 2பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

*இதனை இரண்டாக மடித்து அதன்மேல் உருக்கிய வெண்ணெய் ஊற்றி அதன்மேல் சர்க்கரை தூவி சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.அல்லது Whipped cream with Banana & Strawberry Fruits,ஜாம்,Nutella தடவியும் சாப்பிடலாம்.

பி.கு
முட்டைக்கு பதில் பேக்கிங் சோடா சேர்த்தும் செய்யலாம்.

Sending this recipe to AWED French Event by Priya & DK !!

01 09 10