Monday 29 June 2009 | By: Menaga Sathia

பருப்பு சாதம்


தே.பொருட்கள்:

பொன்னி அரிசி - 11/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிது

தாளிக்க:

பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்



செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பூண்டு+தக்காளி+பச்சை மிளகாயை அரியவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+தக்காளி+பூண்டு+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை,கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

*பொன்னி அரிசிக்கு 1 கப்=2 கப் தண்ணீர் அளவு,ஆக 11/2 கப் அரிசிக்கு=3 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் துவரம்பருப்புக்கு 1 கப் தண்ணீர் அளவு.

*வதங்கியதும் அரிசி+துவரம்பருப்பு+உப்பு+மஞ்சள்தூள்+4 கப் தண்ணீர் வைத்து குக்கரை மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறவும்.

பி.கு:

இதற்க்கு தொட்டுக் கொள்ள அப்பளம்,ஊறுகாய் இருந்தாலே போதும்,ரொம்ப நல்லாயிருக்கும்.
Friday 26 June 2009 | By: Menaga Sathia

ஒமப்பொடி /Oma Podi

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து தண்ணீரில் 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
Wednesday 24 June 2009 | By: Menaga Sathia

நெய் சாதம்

தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப்
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 3
பட்டர் அ நெய் - 5 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125கிராம்

தாளிக்க:

ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -3
பட்டை - 1 சிறு துண்டு

செய்முறை:

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் பட்டர் போட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+புதினா+தயிர் சேர்த்து வதக்கவும்.

*1 கப் அரிசிக்கு = 11/2 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 41/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு+அரிசி போட்டு மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை உடையாமல் கிளறவும்.

*சிக்கன் குருமா குறிப்பினை பார்க்க இங்கே சொடுக்கவும்.

பி.கு:
விருப்பப்பட்டால் பாதி தண்ணீர்+பாதி தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.நெய் சாதத்துடன் மட்டன்,சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.



Monday 22 June 2009 | By: Menaga Sathia

செட்டிநாட்டு சிக்கன் குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்ப் பால் - 1 கப்
கறிவேப்பில்லை - சிறிது

எண்ணெயில் வதக்கி அரைக்க:
சின்ன வெங்காயம் - 20
வறுத்து பொடிக்க:

தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிரிது
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 5

செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.சின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.

*வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.

*குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+கரிவேப்பில்லை+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் சின்ன வெங்காய விழுது+வறுத்தரைத்த பொடி +உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

*கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:
இந்த சுவையான செட்டிநாட்டு சிக்கன் குறிப்பை டி.வியில் பார்த்து செய்தேன்.நன்றாக இருந்தது.



Friday 19 June 2009 | By: Menaga Sathia

முட்டைத் தொக்கு

தே.பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலாபொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.

*முட்டையை 2 ஆக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளியைப் போட்டு நன்கு மசிய வதக்கவும்.

*வதங்கியதும் மிள்காய்த்தூள்+பிரியாணி மசாலா போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*தண்ணீர் சுண்டி வரும் போது முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி இறக்கவும்.
Wednesday 17 June 2009 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 3 கப்
கத்திரிக்காய் - 1 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
ஊறவைத்த கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:

ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*கத்திரிக்காயை பொடிப் பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது +தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்க்கவும்.

*பின் கத்திரிக்காயை போட்டு சிறு தீயில் தண்ணீர் விடாமல் வதக்கவும்.

*தேவைக்கேற்ப அப்பப்போ எண்ணெய் ஊற்றவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்ததும் உப்பு+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*கிரேவி ஆறியதும் சாதத்தை போட்டு உடையாமல் கிளறி பரிமாறவும்.

பி.கு:
பெரிய கத்திரிக்காயில் விதைகள் இருக்காது,அதில் செய்தால் நன்றாக இருக்கும்.


Monday 15 June 2009 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு மோர்குழம்பு

தே.பொருட்கள்:

புளிக்காத தயிர் - 125 கிராம்(அ) 1 கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1 சிறியது
பச்சை நெல்லிக்காய் - 2
வறுத்த வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
வறுத்த உளுந்து பொடி - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்=தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தாளிக்க:
கடுகு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை -சிறிது
மோர் மிளகாய் - 4
சுண்டைக்காய் வற்றல் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.நெல்லிக்காயை கொட்டை எடுத்து நறுக்கவும்.

*தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய்+சீரகம்+பாசிப்பருப்பு+தக்காளி+நறுக்கிய நெல்லிக்காய் உவை அனைத்தும் விழுதாக அரைக்கவும்.

*கடைந்த தயிரில் உப்பு+மஞ்சள்தூள்+அரைத்த விழுது+வெந்தயப் பொடி+உளுந்துப் பொடி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

*நுரை வரும் போது இறக்கி,தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொட்டவும்.

பி.கு:
நெல்லிக்காய் சேர்ப்பதால் ரொம்ப நல்லாயிருக்கும்.மோர்மிளகாய்+சுண்டைக்காய் வற்றல் சேர்த்து தாளிப்பதால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.

Friday 12 June 2009 | By: Menaga Sathia

நெத்திலி கருவாடு வறுவல்

தே.பொருட்கள்:

நெத்திலி கருவாடு -100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி -2
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
இஞ்சிபூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*கருவாட்டை சுத்தம் செய்துக் கொள்ளவும்.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெயில் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்,நன்கு வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கி வரும் போது மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*1/2 கப் தன்ணீர்+கருவாடு போட்டு நன்கு வேகவிட்டு நீர் சுண்டும் வரை நன்கு சுருள கிளறி இறக்கவும்.

*ஈஸி நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.
Thursday 11 June 2009 | By: Menaga Sathia

ஸ்பானீஷ் ஆம்லெட்/Spanish Omlette

தே.பொருட்கள்:

முட்டை - 3
உருளைக்கிழங்கு - 1
கொத்தமல்லித்தழை -சிறிது
நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
நறிக்கிய வெங்காயத்தாள் - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1 சிறியது
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
நறுக்கிய வெங்காயம் - 1டேபிள்ஸ்பூன்
செய்முறை:

*முட்டையை உடைத்து நன்கு அடித்து அதில் மிளகுத்தூள்+சோம்புத்தூள்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

*உருளை+ கேரட் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+உருளை+கேரட் லேசாக வதக்கவும்.இறக்கும் போது கொத்தமல்லித்தழை+வெங்காயத்தாள்+குடமிளகாய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.

*ஆறியபின் அதனை முட்டை கலவையில் கொட்டி ஆம்லெட்டாக சுட்டெடுக்கவும்.

பி.கு:
காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்து குடுக்கலாம்.



Wednesday 10 June 2009 | By: Menaga Sathia

மிளகு சீரக இட்லி

தே.பொருட்கள்:
இட்லி - 5
வெங்காயம் - 1 சிறியது
பூண்டுப்பல் - 3
கெட்டியான புளிச்சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 3

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

செய்முறை:
*இட்லியை நடுத்தரமாக கட் செய்யவும்,வெங்காயம்+பூண்டு பொடியாக நறுக்கவும்.

*மிளகு சீரகத்தை அரைக்கவும்,எடுக்கும் போது உரித்த பூண்டை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி புளிசாறு+தேவையான உப்பு சேர்க்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் இட்லிகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பி.கு:
புளிப்பு+காரம் சேர்த்து சாப்பிட இந்த இட்லி சூப்பரா இருக்கும்.மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.15 நிமிடம் கழித்து சாப்பிட்டால் புளிசாறு நன்கு ஊறி சாப்பிட நன்றாகயிருக்கும்.
Monday 8 June 2009 | By: Menaga Sathia

சிக்கன் லாலிபாப்


நாம் சாதரணமாக சிக்கனை மாசாலா தடவி,ஊறவைத்து பின் எண்ணெயில் பொரிப்போம்.மேலே மட்டும் வெந்து,உள்ளே வேகாமல் இருக்கும்.நானும் அப்படித்தான் செய்வேன்.வேகாமல் இருக்கும் அதனால் பொரிக்காமல் அவனில் செய்து சாப்பிடுவேன்.என் ப்ரெண்ட் திருமதி.ஜலிலா அவர்களின் குறிப்பை பார்த்து வேகவைத்து பொரித்து செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.நன்றி ஜலிலா அக்கா!!.

தே.பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் - 6
ரெட்கலர் -1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
புதினா,கொத்தமல்லி -சிறிது
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழௌது - 3/4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு -1

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து நடுவில் அங்கங்கே கீறிக்கொள்ளவும்.
*பின் அதில் புதினா+கொத்தமல்லி+மிளகாய்த்தூள்+ரெட்கலர்+இஞ்சி பூண்டு விழுது+தயிர்+ சிறிது உப்பு அனைத்தையும் கலந்து வைக்கவும்.

*குக்கரில் சிக்கனை தண்ணீர் ஊற்றாமல் 3 விசில் வரை வேகவிடவும்.சிக்கனில் தண்ணீர் விடும்,அதனால் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*ப்ரெஷ்ர் அடங்கியதும் திறந்துப் பார்த்தால் கறி வெந்து தண்ணீர் விட்டிருக்கும்.

*சிக்கனை மட்டும் தனியா எடுத்து அதில் மைதாமாவு+சோளமாவு+முட்டை வெள்ளைகரு+ தேவைப்பட்டால் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பிசையும் போது தண்ணீர் தேவையெனில் சிக்கன் வெந்த தண்ணீர் ஊற்றி பிசையவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.
Friday 5 June 2009 | By: Menaga Sathia

அவரை - சோள உசிலி

தே.பொருட்கள்:

அவரைக்காய் -100 கிராம்
சோளமுத்துக்கள் - 1 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*அவரைக்காயை பொடியாக நறுக்கி வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.

*சோளகுத்துக்களையும் சிறிது உப்பு போட்டு வைக்கவும்.

*துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+காய்ந்த மிளகாய் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

*ஊறவைத்த பருப்புடன்+பெருங்காயப்பொடி+வேகவைத்த சோளத்துடன் சேர்த்து அரைக்கவும்.

*கடாயில் எண்ணேய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக உதிரியாக வரும் வரை எண்ணெய் விட்டு கிளறவும்.

*பின் இதனுடன் வேக வைத்த அவரைக்காய்+ தேவையான உப்பு சேர்த்து மேலும் நன்கு கிளறி இறக்கவும்.

*இந்த உசிலி சுவையும்,மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.
Thursday 4 June 2009 | By: Menaga Sathia

தர்பூசணி சாம்பார்


தர்பூசணி பழத்தினை நாம் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கிப் போடுவோம் அப்படி தூக்கி போடாமல் தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் நடுவில் உள்ள வெள்ளைப் பகுதியை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.!!

தே.பொருட்கள்:

த்ர்பூசணி வெள்ளைப் பகுதி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
புளி - 1 கோலிகுண்டளவு
பூண்டுப் பல் - 5
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை -சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம் +தக்காளி அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.தர்பூசணி வெள்ளை பகுதியை நார்மல் துண்டுகளாக நறுக்கவும்.

*குக்கரில் ஊறிய பருப்பு+வெங்காயம்+பூண்டு+தக்காளி+மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+தர்பூசணி வெள்ளை பகுதி இவை அனைத்தும் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

*புளியை 1/4 கப் அளவில் கரைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாம்பார் பொடி+உப்பு+புளி கரைசல் அனைத்தும் சேர்க்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து பருப்பை ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பாரின் சுவை தூக்கலாக இருக்கும்.

Wednesday 3 June 2009 | By: Menaga Sathia

உருளை+பட்டாணி வறுவல்

தே.பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
பச்சைப் பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது


நசுக்க வேண்டியவை:

இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 7
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:

*வெங்காயம்,தக்காளியை அரியவும்,உருளையை பெரியதுண்டுகளாக கட் செய்யவும்.

*நசுக்க வேண்டிய பொருட்களை நன்கு நசுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கி மிளகாய்த்தூளைப் போட்டு எண்ணெயிலேயே வதக்கவும்.

*தூள் வாசனை போனதும் உப்பு+உருளைக்கிழங்கு+பட்டாணியைப் போட்டு நன்கு வதக்கவும்.

*எண்ணெய் லேசாக பிரிந்து வரும் போது கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

பி.கு:ப்ரெஷ் பட்டாணி இல்லையெனில் காய்ந்த பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேக வைத்து செய்யலாம்.குக்கரில் வேக வைக்ககூடாது குழைந்து விடும்.

Tuesday 2 June 2009 | By: Menaga Sathia

சிக்கன் பிரியாணி/Chicken Biryani

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 4

செய்முறை:

*சிக்கனை சுத்தம் செய்து பாதி தயிர்,பிரியாணி மசாலா பொடி,கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஊறவிடவும்.

*வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*புதினா,கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும்.

*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்

*தேங்காயை துருவி அதனுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா,கொத்தமல்லி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+தயிர்+சிக்கன் இவைகளைப் போட்டு வதக்கவும்.

*. 1 கப் அரிசிக்கு =1 1/2 கப் தண்ணீர் அளவு,ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் அளவு.

*சிக்கன் பாதி வதங்கியதும் 3 கப் தேங்காய்ப்பால்+3 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு+அரிசி(தண்ணீயை வடிக்கட்டவும்)+ உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.

*குக்கரை மூடி,ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறி பரிமாறவும்.



Monday 1 June 2009 | By: Menaga Sathia

இட்லி மஞ்சூரியன்/ Idly Manchurian

தே.பொருட்கள்:

இட்லி - 5
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
செய்முறை:

*இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.

*எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளை பொரித்தெடுக்கவும்.

*சுவையான் இட்லி மஞ்சூரியன் ரெடி.

பி.கு:குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்பதால் விரும்பி சாப்பிடுவாங்க,மீந்து போன இட்லிகளை இதுபோல செய்து குடுக்கலாம்.


01 09 10