Monday 21 December 2015 | By: Menaga Sathia

மங்களூர் பன்/ வாழைப்பழ பூரி | Mangalore Buns / Banana Poori

print this page PRINT IT
வாழைப்பழம் நன்கு கனிந்துவிட்டால் மில்க் ஷேக்,கேக் ,மஃபின்ஸ் என செய்வோம்.அதே போல் இதில் பூரியும் செய்யலாம்.மங்களூரில் மிக பிரசித்தி பெற்ற டிபன் இது.

பொதுவாக இதனை மைதா மாவில் செய்வார்கள்,அதற்கு பதில் கோதுமைமாவில் செய்துருக்கேன்

இதற்கு நன்கு கனிந்த வாழைப்பழமே தேவைப்படும்.

தே.பொருட்கள்
கோதுமைமாவு -2 கப்
கனிந்த வாழைப்பழம்- 2
சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன்
தயிர் -1/4 கப்
பேக்கிங் சோடா- 1 சிட்டிகை
சீரகம்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்+பொரிக்க‌

செய்முறை

*மிக்ஸியில் வாழைப்பழம்+சர்க்கரை+தயிர் சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பாத்திரத்தில் கோதுமைமாவு+உப்பு+பேக்கிங் சோடா+சீரகம்+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து,மசித்த வாழைப்பழ கலவையும் சேர்த்து பிசையவும்.


*நீர் சேர்த்து பிசைய தேவையில்லை.வாழைப்பழம்+தயிரில் உள்ள
 நீரே போதுமானது.

*பிசைந்த மாவினை குறைந்தது  4- 5 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.

*பின் சிறு உருண்டைகளாக எடுத்து பூரியாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*இதனை தேங்காய் சட்னி/சாம்பாருடன் பரிமாறலாம் அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

பி.கு

*மாவினை எவ்வளவு நேரம் ஊறவைக்கிறோமோ அந்த அளவுக்கு பூரி உப்பி,மிருதுவாக இருக்கும்.

*முதல்நாளே மாவினை பிசைந்து ப்ரிட்ஜில் வைத்து,மறுநாள் காலையில் கூட பூரியாக சுடலாம்.

*கோதுமைக்கு பதில் மைதாவிலும் செய்யலாம்.

*மாவு பிசையும் போது தண்ணீர் அவசியமில்லை.
Monday 14 December 2015 | By: Menaga Sathia

திருவாதிரை களி குழம்பு/தாளகம் | THIRUVADHIRAI KALI KUZHAMBU | THALAGAM


print this page PRINT IT
 திருவாதிரை குழம்பு தாளகம்,ஏழுகறி குழம்பு  எனவும் சொல்வார்கள். இந்த குழம்பினை திருவாதிரை களியுடன் சமைத்து ஆருத்ரா தரிசனம் அன்று  இறைவனுக்கு படையல் செய்வார்கள்.

இந்த குழம்பிற்கு நாட்டுகாய்கள் மட்டுமே சேர்த்து சமைப்பாங்க.

இதில் சேனைக்கிழங்கு ,மஞ்சள் பூசணிக்காய், ப்ரெஷ் அல்லது டிரை மொச்சை, அவரைக்காய்,சேப்பங்கிழங்கு,வாழைக்காய்,சக்கரைவள்ளிக்கிழங்கு,கொடிவகை காய்கள் என 7 காய்கள் சேர்க்கலாம்.

நான் சேர்த்திருப்பது காய்ந்த 1/4 கப் மொச்சை,1 சிறிய உருளை,1 சிறிய சக்கரைவள்ளிகிழங்கு,1/4 கப்  மஞ்சள் பூசணி,1/4 அவரை துண்டுகள்,சிறிய வாழைக்காயில் பாதி, 1/4 கப் சேனைக்கிழங்கு துண்டுகள்

தே.பொருட்கள்

7 வகை காய்கள் ‍- மேலே சொன்ன அளவில்
புளிகரைசல்- 1/2 கப்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

வறுத்து அரைக்க‌

காய்ந்த மிளகாய் -7
கடலைபருப்பு- 2டீஸ்பூன்
வெ.உ.பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்


தாளிக்க‌

எண்ணெய்- 3/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*மொச்சையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

*குக்கரில் காய்களை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி,தேவையான நீர்+மஞ்சள்தூள் சேர்த்து 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வருத்து நைசாக அரைக்கவும்.

*காய்கள் வெந்ததும் புளி கரைசல்+உப்பு+வேகவைத்த மொச்சை+அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்கவிடவும்.


*குழம்பு கொதித்து கெட்டியாக வரும் போது தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கவும்.
Monday 7 December 2015 | By: Menaga Sathia

திருவாதிரை களி / THIRUVADHIRAI KALI | THIRUVADHIRAI SPL


print this page PRINT IT
தே.பொருட்கள்

பச்சரிசி- 1/2 கப்
பாசிபருப்பு -2 டேபிள்ஸ்பூன்
வெல்லம்- 1/2 கப்
நெய்- 1/8 கப்
முந்திரி -தேவைக்கு
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*அரிசி+பருப்பு இவற்றை கழுவி தனிதனியாக வெறும் கடாயில் வறுக்கவும்.


*ஆறியதும் ரவை பதத்தில் உடைக்கவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

*குக்கரில் உடைத்த அரிசி+பருப்பு சேர்த்து வடிகட்டிய வெல்ல நீருடன் மேலும் நீர் சேர்த்து 1 1/2 கப் அளவு வருமாறு சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அல்லது இதனை நேரடியாக பாத்திரத்தில் வைத்தும் கிளறி செய்யலாம்.

*வெந்ததும் ஏலக்காய்த்தூள்+தேங்காய் துறுவல் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.


பி.கு
* 1 பங்கு அரிசிக்கு 3 பங்கு நீர் என்ற அளவில் சேர்க்கவும்.

Tuesday 1 December 2015 | By: Menaga Sathia

கிறிஸ்துமஸ் ப்ளம் கேக் / TRADITIONAL CHRISTMAS FRUIT CAKE | RUM SOAKED DRY FRUITS CAKE



print this page PRINT IT
ஒரிஜினல் ரெசிபியில் கொடுத்துள்ள அளவில் நான் பாதி அளவு போட்டு செய்துள்ளேன்.

ஏற்கனவே ஆல்கோல் சேர்க்காமல் கிறிஸ்துமஸ் கேக் செய்துள்ளேன்,அதை விட இந்த கேக் மிக சுவையாக இருக்கும்.

Recipe Source : Manjuseatingdelights

பழங்களை ஊறவைக்க‌
டிரை ப்ருட்ஸ்- 1 1/2 கப் ( டுட்டி ப்ருட்டி,முந்திரி,கோல்டன் மற்றும் கறுப்பு திராட்சை)
ரம்- 15 Cl (டிரை ப்ரூட்ஸ் முழ்குமளவு)
கேரமல் சிரப்- 2 டேபிள்ஸ்பூன் (2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் நீர்)

கேரமல் செய்ய‌
சர்க்கரை -3/4 கப்
நீர்- 1/2 டேபிள்ஸ்பூன்
சுடு நீர் -1/4 கப்+1/8 கப்

ஸ்பைஸ் மிக்ஸ்
பட்டை தூள்- 1/4 டீஸ்பூன்
கிராம்புதூள் -1/4  டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
கேக் விதை அல்லது கேரவே சீட்ஸ்(Caraway Seeds) -1/4 டீஸ்பூன்
சுக்குதூள்- 1/4 டீஸ்பூன்

கேக் செய்ய‌
வெண்ணெய் -1/2 கப்
பொடித்த சர்க்கரை- 1 1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன்
முட்டை- 2
மைதா- 1 1/4 கப்
பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ்- 1டீஸ்பூன்
கேரமல் சிரப் -மேலே சொன்ன அளவில்
ஸ்பைஸ் மிக்ஸ் -மேலே சொன்ன அளவில்
ரம்மில் ஊறவைத்த டிரைப்ருட்ஸ்  -மேலே சொன்ன அளவில்

செய்முறை

*டிரை ப்ருட்ஸினை ரம்மில் கேக் செய்வதர்க்கு 3 வாரங்களுக்கு முன்பாக ஊறவைக்கவும்.

*எவ்வளவு நாள் டிரைப்ருட்ஸ் ரம்மில் ஊறுகிறதோ அவ்வளவுக்கும் கேக் நன்றாக இருக்கும்.

*முதலில் டிரை ப்ருட்ஸில் ஊறவைக்க கேரமல் சிரப் செய்யவேண்டும்.

*2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு உருகி நிறும் மாறும் போது 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கலக்கி ஆறவைக்கவும்.

*ஒரு பவுலில் டிரைப்ருட்ஸ்+கேரமல் சிரப்+ரம் சேர்த்து கலக்கி குறைந்தது 3 வாரங்கள் வரை ஊறவைக்கவும்.

இப்போழுது கேக் செய்வதற்கு கேரமல் செய்ய வேண்டும்.


*பாத்திரத்தில் சர்க்கரை+நீர் சேர்த்து மிதமான தீயில் சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

*இப்போழுது சர்க்கரை கரைந்து கலர் மாறும்,பின் திக்கான கலராக மாரும் வெந்நீர் ஊற்றி (கவனமாக ஊற்றவும்)கலக்கி இறக்கி ஆறவிடவும்.

*ஆறியதும் திக்கான சிரப் போல இருக்கும்.

இப்போழுது கேக் செய்ய 
*ஊறவைத்த டிரை ப்ருட்ஸினை ரம்மிலிருந்து வடிகட்டி சிறிது மைதா கலந்து வைக்கவும்.

*மைதா+உப்பு+ஸ்பைஸ் மிக்ஸ்+பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு 3 முறை சலித்து வைக்கவும்.

*கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது வெண்ணெய் தடவி வைக்கவும்.

*அவனை 180°C 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.

*முட்டையின் மஞ்சள்+வெள்ளை கருவினை தனியாக பிரிக்கவும்.

*வெள்ளை கருவுடன் 1 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு நுரை பொங்கும் வரை பீட்டரால் அடிக்கவும்.

*வேறொரு பவுலில் வெண்ணெய்+சர்க்கரை சேர்த்து பீட்டரால் நன்கு கரையும் வரை கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் மஞ்சள் கரு சேர்த்து அடிக்கவும்.

*பின் மைதா கலவை+ஆறவைத்த கேரமல் + வெனிலா எசன்ஸ்   சேர்த்து கலக்கவும்.

*கடைசியாக முட்டையின் வெள்ளைகருவினை சேர்த்து மிருதுவாக கலக்கவும்.

*பின் டிரை ப்ருட்ஸினை சேர்த்து கலக்கி கேக் பானில் ஊற்றி 50 -55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

*இடையே கேக் வேகும் போது மேல் பாகம் தீய்ந்து போகிறமாதிரி இருந்தால் அலுமினியம் பேப்பரால் மூடி பேக் செய்யவும்.

*கேக் வெந்த பிறகு டிரை ப்ருட்ஸில் ஊறிய ரம்மினை சிறிது பரவலாக ஊற்றவும்.

*கேக் நன்றாக ஆறிய பிறகு கேக்கினை எடுத்து அலுமினியம் பாயில் வைத்து மூடவும்.

கவனிக்க வேண்டியவை

*கேக் பாத்திரத்தில் கண்டிப்பாக பட்டர் பேப்பர் அடியிலும்,சுற்றிலும் வைத்து வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்.நான் பட்டர் பேப்பர் போட மறந்துவிட்டேன்,அதனால் கேக் ஆரிய பிறகும் சரியாக எடுக்கவரவில்லை.

*இந்த கேக்கினை நமக்கு தேவையான நாளுக்கு முன்பாக செய்வது நல்லது,எவ்வளவுக்கெவ்வளவு ரம்மில் ஊறுகிறதோ கேக் அவ்வளவு சுவையாக இருக்கும்.

*தினமும் கேக்கினை டிரை ப்ருட்ஸில் ஊறிய ரம்மில் ப்ரெஷ்ஷ்ஹால் தடவி விடவும்.

*டிரை ப்ருட்ஸினை ரம்மில் ஊறவைக்க மறந்துவிட்டால் பரவாயில்லை,2 அல்லது 3 நாட்கள் ஊறினாலும் போதும்.


*இதில் வேண்டுமானால் பொடித்த நட்ஸ்கலும் சேர்க்கலாம்.



* ரம்மிற்கு பதில் ப்ராந்தியும் பயன்படுத்தலாம்



*டிரை ப்ருட்ஸிலும் கேரமல் சேர்த்து ஊறவைப்பது நன்றாக இருக்கும்.
01 09 10