Showing posts with label Kerala Recipes. Show all posts
Showing posts with label Kerala Recipes. Show all posts
Wednesday, 13 September 2017 | By: Menaga Sathia

காராமணி வாழைக்காய் தோல் தோரன்/ Cowpeas & Plaintain Peel Thoran

நேந்திரங்காய் சிப்ஸ் பதிவில் ,வாழைக்காய் தோலில் பொரியல் செய்யலாம் என சொல்லியிருந்தேன் .இதனுடன் வேகவைத்த காராமணி சேர்த்துள்ளேன்.

தே.பொருட்கள்
2 வாழைக்காய் தோல்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4 டீஸ்பூன்
வேகவைத்த காராமணி -1/3 கப்
உப்பு-தேவைக்கு

நசுக்கி கொள்ள

வெங்காயம் - 1சிறியது
பூண்டுப்பல் -3
இஞ்சி -1/2 டீஸ்பூன்

தாளிக்க
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2

அரைக்க
தேங்காய்துறுவல் -1/2 கப்
சீரகம் -3/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -2

செய்முறை
*வாழைக்காய் தோலினை மிக பொடியாக நறுக்கி மஞ்சள்தூள்+சிறிது தயிர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.

*அரைக்க கொடுத்து பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நசுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் நறுக்கிய தோலினை சேர்க்கவும்.

*பின் மஞ்சள்தூள்,உப்பு,சாம்பார் பொடி சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவைக்கவும்.


*5 நிமிடங்களில் வெந்ததும் வேகவைத்த காராமணி மற்றும்  அரைத்த தேங்காயினை சேர்த்து கிளறி 1-2 நிமிடங்களில் இறக்கவும்.






Saturday, 9 September 2017 | By: Menaga Sathia

நேந்திரங்காய் சிப்ஸ் /Plaintain Chips | Nendran Chips | Kerala Banana Chips |Onam Sadya Recipe

 இந்த சிப்ஸ் செய்ய நன்கு காயாக இருப்பதையே பயன்படுத்தவும்.தோலினை தூக்கி எறியாமல் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.அடுத்த ரெசிபியில் எப்படி பொரியல் செய்வது என் பார்ப்போம்.

இப்போழுது சிப்ஸ் செய்வதை பார்க்கலாம்..

தே.பொருட்கள்
நேந்திரங்காய் -3
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் + 3/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*சிறிது நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்+1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

*நேந்திரங்காயில் கத்தியால் ஆங்காங்கே கீறி தோலினை எடுக்கவும்.
 *3/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்+ நீர் கலந்து தோல் சீவிய காயினை நீரில் 15 நிமிடம் வைக்கவும்.காய் மூழ்குமளவு நீர் இருக்க வேண்டும்.

*பின் காயினை ஈரம் போக நன்கு துடைத்து வைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.

*தீயினை குறைந்த அளவு வைத்து,சிப்ஸ் கட்டையால் நேரடியாக காயும் எண்ணெயில் சீவவும்.பின் தீயினை அதிகபடுத்தி வேகவைக்கவும்.
*கரண்டியால் ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு கிளறி விடவும்.
 *சிப்ஸ் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கும் போது 1 டீஸ்பூன் உப்பு கலந்து நீரினை ஊற்றவும்.
 *மீண்டும் எண்ணெயின் சத்தம் அடங்கியதும் சிப்ஸினை எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.


பி.கு

*சிப்ஸ்க்கு எண்ணெய் நன்றாகவே காய்ந்திருக்க வேண்டும்.

*உப்பு கலந்த நீரினை சூடான எண்ணெயில் ஊற்றும் எண்ணெய் பொங்கும்,கவனமாக செய்யவேண்டும்.

நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
Monday, 4 September 2017 | By: Menaga Sathia

ஓணம் ஸ்பெஷல் -3 /Kerala Onam Sadya -3 | Thali Recipes


ஓணம் சத்யா- 1
ஓணம் சத்யா -2

இந்த முறை ஒணம் சத்யா 24 குறிப்புகளை செய்துருக்கேன்...காரணம் என் நீண்ட நாள் தோழி வீட்டிற்கு வந்ததில் அவர்களுடன் சத்யா சாப்பாடு செய்து சாப்பிட்டதில் மிக சந்தோஷம்.

  முதலில் என்ன மெனு செய்ய போகிறோம் என முடிவெடுத்து அதற்கு தகுந்தாற் போல் முதல்  நாள் இரவே காய்களை நறுக்கி ப்ரிட்ஜில் வைத்தேன்.

ஊறுகாய் மற்றும் இஞ்சி புளியும் முதல் நாளே செய்தாயிற்று.இஞ்சி கிச்சடி செய்வதற்கு மட்டும் இஞ்சி புளி செய்யும் போது இஞ்சி வறுத்ததில் கொஞ்சம் தனியாக எடுத்து வைத்தேன்.

சாம்பாருக்கு காய்களை கொஞ்சமாகவும்,பெரிய துண்டுகளாகவும் நறுக்கவும்.நான் முருங்கைகாய்,கேரட்,பீன்ஸ்,பூசணி சேர்த்து செய்தேன்.

அவியலுக்கு வத்திகுச்சி போல மெலிதாக நீளவாக்கில் காய்களை நறுக்கவும்.

காளன் மற்றும் கூட்டுகறி செய்ய   கருணை கிழங்கு மற்றும் வாழைக்காயினை நறுக்கவும்.எரிசேரிக்கு இந்த முறை  மஞ்சள் பூசணிக்காயை பயன்படுத்தி செய்தேன்.

முதல்நாள் இரவே தட்டைபயிறு,கறுப்புகடலை ஊறவைக்கவும்.இந்த முறை தேங்காய் பாலினை கடையில் வாங்கினேன்.

பாசிபருப்பினை பிரதமன் மற்றும் பருப்புக்கறி வறுத்து வைக்கவும்.கோஸினை துருவி ப்ரிட்ஜில் வைக்கவும்.

மெழுக்குபுரத்தி செய்ய கேரட் மற்றும் பீன்ஸ் அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கவும்.

பாலடையும் கடையில் வாங்கிவிட்டேன்

மறுநாள் ஈசியாக அனைத்தும் செய்து விடலாம்.தேங்காய்+சீரகம்+பச்சைமிளகாயினை நிறைய அரைத்துகொண்டால் அவியல்,காலன்,பச்சடி,கூட்டுகறிக்கு பயன்படுத்திக்கலாம்.

இன்றைய சத்யா மெனு
1.வாழைப்பழம்
2.உப்பு
3.எலுமிச்சை ஊறுகாய்
4.அப்பளம்
5.இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்
6.நேந்திரன் சிப்ஸ் - கடையில் வாங்கியது
7.இஞ்சி புளி
8.இஞ்சி கிச்சடி
9.கோஸ் தோரன்
10.கூட்டுக் கறி
11.கேரட் பீன்ஸ் மெழுக்குபுரத்தி
12.அவியல்
13.ஒலன்
14.எரிசேரி
15.சாதம்
16.பருப்பு கறி +நெய்
17.சாம்பார்
18.ரசம்
19.மோர் காய்ச்சியது
20.தக்காளி பச்சடி
21.காளன்
22.பருப்பு பிரதமன்
23.பாலடை  பாயாசம்
24.சம்பரம்

சம்பரம் என்பது மோரினை நன்கு கலக்கி உப்பு,நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

இஞ்சி கிச்சடி --வறுத்த இஞ்சியில் தயிர்+உப்பு சேர்த்து கலக்கி கடுகு+காய்ந்தமிளகாய்+கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.


Tuesday, 17 May 2016 | By: Menaga Sathia

கேரளா ஸ்டைல் காளன் / Kerala Style Kalan | Onam sadya Recipe


காளன்‍‍‍**சேனை மற்றும் வாழைக்காய் சேர்த்து செய்வது.ஒணம் சத்யாவின் மிக முக்கியமாக இடம்பெறும் மெனு இது.

தே.பொருட்கள்

சேனைகிழங்கு 1/4 கப் நறுக்கியது
வாழைக்காய் 1/2 கப் நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகுதூள் 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
நெய் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
புளித்த தயிர் 2 கப்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி 1/4டீஸ்பூன்

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து ,புளித்த தயிரில் கலந்து ,உப்பு+1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும்.

*சேனையை முதலில் 1/4 மஞ்சள்தூள் சேர்த்து 1/4 பாகம் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.இது சேனையின் காரல் தன்மையை போக்கும்.

*மீண்டும் சேனையை சிறிது நீர் ஊற்றி மிளகுதூள்+மிளகாய்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*பாதியளவு வெந்ததும் கறிவேப்பிலை+வாழைக்காயை சேர்த்து வேகவைக்கவும்.

*காய்கள் நீர் சுண்டும் அளவு வேகவைத்த பின் லேசாக மசிக்கவும்.

*பின் தயிர் கலவையை சேர்த்து,இடைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.

*லேசாக கொதித்து வரும் போது இறக்கி நெய் மற்றும் வெந்தயப்பொடி சேர்க்கவும்.

*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*தயிர் கலவையை ஊற்றியபின் சிறுதீயில் கலக்கிகொண்டே இருக்கவும்,இல்லையெனில் தயிர் திரிந்துவிடும்.
Wednesday, 13 April 2016 | By: Menaga Sathia

கேரளா பருப்பு கறி / Kerala Parippu Curry | Onam Recipes

print this page PRINT IT
சாதாரணமாக பருப்பு கறியினை,பாசிப்பருப்பு மட்டும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து (அதிகமான நீரை மேலோடு எடுத்து ரசம் செய்வது வழக்கம்) உப்பு கலந்து சாதத்தில் நெய் சேர்த்து பரிமாறுவார்கள்.

ஆனால் கேரளா பருப்பு கறியில் தேங்காய் மசாலா அரைத்து சேர்ப்பார்கள்,அதன்படி ஒருநாள் செய்தபின் இப்பொழுதெல்லாம் பருப்பு கறியினை தேங்காய் இல்லாமல் செய்வதில்லை.

தே.பொருட்கள்

பாசிபருப்பு- 1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
நீர்- 2 கப்
உப்பு -தேவைக்கு
நெய் -1 டீஸ்பூன்

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்- 1/3 கப்
பூண்டுப்பல்- 2
இஞ்சி துறுவல்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 1

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -2
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*வெறும் கடாயில் பாசிபருப்பினை வாசனை வரும் வரை வறுத்து மஞ்சள்தூள்+2 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவிடவும்.



*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைக்கவும்.

*பருப்பு வெந்ததும் உப்பு+அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து சிறுதீயில் 5 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.

*பின் தேங்காய் எண்ணெயில் கடுகு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பருப்பில் சேர்க்கவும்.

*பரிமாறும் போது நெய் சேர்த்து,உருளை வருவல் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

பி.கு
*பருப்பு ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதற்குதகுந்தாற் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*ஒணம் சத்யாவின் செய்யும் போது இஞ்சி,பூண்டு,சின்ன வெங்காயம் சேர்க்காமல் செய்யவும்.

*பருப்பினை எப்போழுதும் வறுத்து வேகவைக்கவும்,நல்ல மணமாக இருக்கும்.

Saturday, 23 January 2016 | By: Menaga Sathia

மத்தி மீன் குழம்பு(கேரளா ஸ்டைல் ) / Sardine(Mathi) Fish Kuzhambu (Kerala Style)


print this page PRINT IT
  கேரளாவில் குழம்பிற்கு கொடாம்புளி சேர்ப்பார்கள்,இல்லையெனில் சாதரண புளியே சேர்க்கலாம்.

சிறிய மத்தி மீனில் செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
சிறிய மத்தி மீன்- 10
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 10
பொடியாக நறுக்கிய தக்காளி- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டு- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -3/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 1/2 டீஸ்பூன்
புளிகரைசல்- 3/4 கப்
நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகள்- 6
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.


*பின் இஞ்சி+பூண்டு+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி என வரிசையில் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*நன்கு கொதித்த பின் மீன்+மாங்காய்துண்டுகள் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


*கடைசியாக தேங்காய்ப்பாலை ஊற்றி 2 நிமிடங்கள் கொதித்த பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*மீன் போட்ட பிறகு கரண்டியால் கிளற வேண்டாம்.
Monday, 11 January 2016 | By: Menaga Sathia

மீன் பொளிச்சது / Meen Pollichathu ( Fish Roasted in Banana Leaf ) | Kerala Recipe


print this page PRINT IT
கேரளாவின் மிக பிரபலமான சுவையான மீன் சமையல் இது.மீனை லேசாக தேங்காய் எண்ணெயில் பொரித்த பின் வாழையிலையில் மசாலா வைத்து அதன் மேல் பொரித்த மீனை வைத்து தவாவில் சூடு செய்து பரிமாறுவது தான் மீன் பொளிச்சது.

இதற்கு கறிமீன் மட்டுமே பயன்படுத்துவாங்க,அதற்கு பதில் நான் சாதராண மீனிலேயே செய்துள்ளேன்,சுவை அபாரம்...

பரிமாறும் அளவு - 2
தயாரிக்கும் நேரம் -20 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மீன் துண்டுகள்- 4
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 2 1/2 டேபிள்ஸ்பூன்
வாழையிலை துண்டுகள்- 4

மீனில் ஊறவைக்க‌

மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

மசாலா செய்ய‌

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/3 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி- 1/4 கப்
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல்- 3
பொடியாக நறுக்கிய இஞ்சி ‍- 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்+கரம் மசாலா -தலா 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

தாளிக்க‌

கடுகு- 1/2 டீஸ்பூன்
சீரகம்+வெந்தயம்  -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

*மீனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*மீன் பொரித்த அதே எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

*பின் இஞ்சி+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+சின்ன வெங்காயம் என இந்த வரிசையில் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியம் தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.பின் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை சேர்த்து வதக்கவும்.

*கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி ,மசாலா கெட்டியாக வற்றும்வரை கொதிக்கவிடவும்.

*கெட்டியானதும் எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

*வாழையிலையில் சிறிதளவு மசாலா வைத்து அதன் மேல் பொரித்த 1 மீன் துண்டினை வைக்கவும்.


*விரும்பினால் மீன் மேலேயும் மசாலா வைக்கவும்.

*அப்படியே 4 பக்கமும் சுருட்டி வைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாழையிலை வைக்கவும்.இலையில் நிறம் மாறி வாசனை வரும் போது இருபக்கமும் பிரட்டி எடுக்கவும்.

*இதனை அப்படியே இலையோடு பரிமாறவும்.சாம்பார் சாத‌த்திற்கு
நன்றாக இருக்கும்.

பி.கு

*இதனை தேங்காய் எண்ணெயிலேயே சமைக்கவும்.பாராம்பரிய சுவையோடு இருக்கும்.

*மீனை மொறுமொறுப்பாக பொரிக்க வேண்டாம்,லேசாக வறுத்து எடுத்தாலே போதும்.

*வாழையிலைக்கு பதில் அலுமினியம் பாயிலில் கூட செய்யலாம்,ஆனால் சுவை நிச்சயம் மாறுபடும்.

*மசாலாவில் சேர்க்கபடும் தக்காளி புளிப்பாக இருந்தால் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டாம்.
01 09 10