Sunday 22 March 2009 | By: Menaga Sathia

டிப்ஸ் டிப்ஸ்

* ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.

* பனீர் எடுக்கும் போது அத்தண்ணீர்(whey water) வே வாட்டர் என்று சொல்வார்கள்.வீணாக்கமால் அத்தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசையலாம்,பால் உறை ஊற்ற பயன்படுத்தலாம்,மீண்டும் அந்த நீரையே பனீர் எடுக்க பயன்படுத்தலாம்.

*முளைக்கீரையை பின்புறமாகத் திருப்பிப் பார்த்தால் ரோஸ் நிறமாக இருக்க வேண்டும்.அந்த ரோஸ் நிறம் தான் தங்கசத்து,நல்ல கீரையுமாகும்.

*மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.

*தினமும் 8,9 கறிவேப்பிலை துணுக்குகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும்.

*இட்லிப்பொடி அரைக்கும்போது,கடைசியில் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தால் பொடி சூப்பரா இருக்கும்.

*பிரிட்ஜில் முட்டைகளுக்கு பக்கத்தில் எலுமிச்சைப் பழம் வைக்ககூடாது,முட்டை சீக்கிரம் கெட்டுவிடும்.

*பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

எல்லா டிப்ஸும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

நன்றி பாயிசா!!

01 09 10