Saturday 14 March 2009 | By: Menaga Sathia

கண்கள் பராமரிப்பு

கண்ணில் போடும் மேக்கப்பை படுக்கச் செல்லும் முன் கலைத்து விடவேண்டும்.

நம் உடலின் மெல்லிய பாகம் கண்கள் தான்,அதனால் கண்களைக் கழுவும் போது கண்களைச் சுற்றிய பகுதிகளை அழுத்தி தேய்க்காமல் மெதுவாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.அழுத்தித் தேய்த்தால் அதிக சுருக்கங்கள் விழும்.

கண்ணுக்கு தரமான கண்மையைத் தான் பயன்படுத்த வேண்டும்.

கருவளையத்தை போக்க உருளைக்கிழங்கு சாறு - 1/2 டீஸ்பூன்+எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன் இந்த இரண்டையும் நன்கு கலந்து பஞ்சில் ஒற்றி அதை கண் இமைகளின் பேல் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

பாதாம் எண்ணெய் - 1/2டீஸ்பூன்+எலுமிச்சைசாறு - 1/2 டீஸ்பூன் இவர்றை நன்கு கலந்து பின் கண்களைச் சுற்றி மிருதுவாகத் தடவவும்.15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவினால் கருவளையம் போகும்.

கண்கள் உப்பியிருந்தால் குளிரூட்டப்பட்ட பாலில் 2காட்டன் பஞ்சுகளை நனைத்து கண் இமைகளின் மேல் 10நிமிடம் வைக்கலாம்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

நல்ல பயனுள்ள குறிப்புகள்

Menaga Sathia said...

நன்றி பாயிசா.

வடுவூர் குமார் said...

செய்து பார்த்திடுவோம்.தகவலுக்கு நன்றி.

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி குமார்!!

01 09 10