![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixgHkWM4BMfR2DOXgPc8zcF4MiPkGYRjOX_1Yze3qZOhWv4eQFyFh-LQk8azBnEf89LE73fdq1RMpK7hk8M1lUXS9-HPukvowo_tvF8bIv0HdSCd47FNp1rJiVV3aAt991rahvoaCg2rcG/s320/Photo+Shivani+908.jpg)
மீன் துண்டுகள் - 12
வெங்காயம் - 1 1/2
தக்காளி - 1 பெரியது
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்ப்பால் - 400 மி.லி டின்
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
பூண்டுப்பல் - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
எலுமிச்சைசாறு - 1டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 3
*மீனை சுத்தம் செய்து அதில் 1 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
*வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.
*நறுக்கிய வெங்காயத்திலிருந்து சிறிது வெங்காயம்+பூண்டு+சீரகம்+கடுகு+கறிவேப்பில்லை நசுக்கிக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மீனை பொரிக்கவும்,ரொம்ப முறுகலாக பொரிக்ககூடாது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQgpd-gzMgM6R2-mlBFYISfeCmBsdCEsrFQAL5NXfYxF-GPLXqnWr4BnD_I8tLO6tn1VHpdBF0i45HwRocPytiHDx_Fx2vs7nBChleM8AQpZ_ezuwIWM-deV8LbvUEcaTc6SefpQ5h7DcD/s320/Photo+Shivani+905.jpg)
*அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம்+நசுக்கிய வெங்காய,சீரகம்+தக்காளி இவைகளைப் போட்டு நன்கு வதக்கவும்.
*பின் எல்லா தூள் வைகளையும் சேர்த்து நன்கு வதங்கியப்பின் உப்பு+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதித்ததும் பொரித்த மீன்களைப் போட்டு 10 நிமிடம் கொதித்த பின் எலுமிச்சைசாறு சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பல வருடங்கள்.ம் படத்திலயாவது பார்ப்பம்
நன்றி ராவணா!!
Post a Comment