Saturday 4 April 2009 | By: Menaga Sathia

வத்தல் மோர்குழம்பு


தே.பொருட்கள்:

புளித்த மோர் - 1 கப்
பச்சரிசி - 3/4 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 11/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது

தாளிக்க:

மணத்தக்காளி[அ]சுண்டைக்காய் வத்தல் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு
சீரகம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

*பச்சரிசி+து.பருப்பு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*ஊறியதும் இவற்றுடன் தேங்காய்+சீரகம்+ப.மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
*மோரைக்கடைந்து உப்பு+மஞ்சள்தூள்+அரைத்து விழுது சேர்த்து நீர்க்க கரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மோரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழைத் தூவி இறக்கவும்.

பி.கு:
இந்த குழம்பு கொஞ்சம்கூட கசக்காது.காயோ,வெங்காயமோ இல்லாத சமயத்தில் வத்தல் போட்டு செய்யலாம்.ரொம்ப நல்லா இருக்கும்.
வெளிநாட்டில் தயிர் புளிக்காது,அதற்க்கு நம் புளிப்பு தகுந்த மாதிரி எலுமிச்சைசாறு சேர்த்து கொள்ளலாம்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

மோர் குழம்பு ரொம்ப நல்லா இருக்கு.. கோடைக்கு ஏற்ற குழம்பு..

Menaga Sathia said...

நன்றி பாயிசா!!

01 09 10