Thursday, 4 September 2014 | By: Menaga Sathia

கேரளா ஒணம் ஸ்பெஷல் / KERALA ONAM SADYA | THALI RECIPES

நீண்ட நாட்களாக ஓண சத்யா சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற ஆசை உண்டு.சின்ன வயசில் அக்காவின் தோழி மினி அக்கா வீட்டில் ஒரு முறை ஒண சத்யா சாப்பாடு சாப்பிட்டுருக்கேன்.

முகநூல் தோழி மைலி ரகுபதி சமீபத்தில்தான் எனக்கு அறிமுகம்.அவங்ககிட்ட  ஓணசத்யா சாப்பாடு சிம்பிள் ரெசிபி கேட்டேன்,அனைத்தையும் என்னிடம் பகிர்ந்துக்கிட்டாங்க.மிக்க நன்றி மைலி!!

ஒண சத்யா உணவை பாரம்பரியமாக தலைவாழையிலையில் தான் பரிமாறுவாங்க.அதில் கிட்டதக்க 13 - 15 வகையான கறி வகைகள்,ஊறுகாய் வகைகள்,3-5 வகை பாயாசம்,பப்படம் என 25 வகையான பதார்த்தங்கள் செய்து பரிமாறுவாங்க.

பருப்பு கறி ,3 வகையான ஊறுகாய் வகைகள்,நேந்திரன் சிப்ஸ்,சாம்பார்,ரசம்,3-5 வகையான தோரன்,ஒலன்,அவியல்,காளன்,மோரு கூட்டன்,எரிசேரி,மோர்குழம்பு,புளிசேரி ,கிச்சடி,பச்சடி,கொத்துக்கறி,புளி இஞ்சி,2-3 வகை பாயாசம்,நேந்திரம் சிப்ஸ்,உப்பேரி,வாழைப்பழம்,பப்படம்,மோர் என  நிறைய வகைகள் செய்வாங்க.

மேலும் இலையில் பரிமாறுவதற்கும் முறை இருக்கு.எனக்கு தெரிந்த வரையில் நான் செய்துருக்கேன்.

இலையின் மேலே இடது பக்கத்தில் ஊறுகாய்,புளி இஞ்சி மற்றும் இதர வகைகளும்,கீழே இடது பக்கத்தில் வாழைப்பழம்,பப்படம்,சிப்ஸ், சாதம் மற்றும் பாயாச வகைகளும் பரிமாறுவர்கள்

ஒண சத்யாவில் வெங்காயம்+பூண்டு சேர்க்க மாட்டாங்க.வாழைக்காய்,சேனை,தயிர்,தேங்காய் தான் முக்கியமாக இடம் பெறும்.

நான் எங்களுக்கு தகுந்த மாதிரி சிறிய அளவிலும்,முக்கியமான குறிப்புகளையுமே செய்துருக்கேன்.

பாரம்பரிய சுவை கிடைக்க தேங்காய் எண்ணெயை தாளிக்க பயன்படுத்தவும்.

இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய்
புளி  இஞ்சி
கேரட் தோரன்
ஒலன்
அவியல்
எரிசேரி
பருப்பு கறி
சாம்பார்
ரசம்
மோரு கூட்டன்
பருப்பு பாயாசம்
நேந்திரன் சிப்ஸ் -- கடையில் வாங்கியது

பருப்பு கறி

தே.பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1

தாளிக்க 

எண்ணெய் -1/2 டீஸ்பூன்
கடுகு+சீரகம் -தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
கா.மிளகாய் -1

செய்முறை
*பாசிப்பருப்பை  வெறும் கடாயில் லேசாக வறுத்து மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*பின் உப்பு+தேவைக்கு நீர்+அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைத்து தாளித்து சேர்க்கவும்.

*பரிமாறும் போது நெய் சேர்த்து பரிமாறவும்.

இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்

*1/2 கப் பொடியாக நறுக்கிய மாங்காயில் 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்+உப்பு சேர்க்கவும்.பின் எண்ணெயில் கடுகு+பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.


கேரளா சாம்பார்
இந்த சாம்பாரின் ஸ்பெஷல் மசாலாவை ப்ரெஷ்ஷாக பொடித்து சேர்ப்பதுதான்.

தே.பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
புளிகரைசல் - 1/3 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
காய்கள் -1/2 கப் முருங்கைகாய்,கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய்
தக்காளி - 1
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயம் -சிறிது
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
காய்ந்த மிளகாய் -1
கறிவேப்பிலை -சிறிது

செய்முறை

*வேகவைத்த துவரம்பருப்புடன் மஞ்சள்தூள்+காய்கள்+ சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் நறுக்கிய தக்காளி+புளிகரைசல்+பொடித்த பொடி+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*வெண்டைக்காய் சேர்க்க விரும்பினால் தனியாக எண்ணெயில் வதக்கி தக்காளி சேர்க்கும் போது சேர்க்கவும்.

*சாம்பார் திக்காக இருந்தால் தேவைக்கு நீர் சேர்க்கவும்.பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து இறக்கவும்.

மோரு கூட்டன்

இதில் பெரும்பாலும் வெள்ளை பூசணிக்காய் சேர்த்து தான் செய்வாங்க.அதற்கு பதில் சேனைக்கிழங்கு அல்லது வாழைக்காய் சேர்க்கலாம்.

தே.பொருட்கள்

வாழைக்காய் - 1 சிறியது.
தயிர் - 1/2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க
தேங்கய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் -1
காய்ந்த மிளகாய் - 1
சீரகம் -1/2 டீஸ்பூன்
மிளகு -10

தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு மைய அரைக்கவும்.அதனுடன் தயிர் + 1/2 கப் நீர்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

*வாழைக்காய்  பெரிய அளவில் வட்டமாக வெட்டி கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*பாத்திரத்தில் தயிர் கலவையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறுதீயில் கிளறி விடவும்.

*சிறுதீயில் வைத்து கிளறினால் தயிர் பிரியாது.

*5 நிமிடம் கழித்து வேகவைத்த வாழைக்காயை சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாலித்து சேர்க்கவும்.

பி.கு

*புளி இஞ்சியில் மைலி சொன்ன மாதிரி வெந்தயத்தூள் பதிலாக உளுத்தமாவு 1 டீஸ்பூன் சேர்த்து செய்தேன்.



அனைவருக்கும் ஒணம் நல்வாழ்த்துக்கள் !!
Monday, 1 September 2014 | By: Menaga Sathia

ஐயங்கார் புளியோதரை / IYENGAR PULIYODARAI | LUNCH BOX RECIPES

 முகநூலில் திரு.ரத்னவேல் ஐயா அவர்கள் அவருடைய பக்கத்தில் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தார்.அதனை பார்த்து உடனே செய்தது.அப்படியே பெருமாள் கோவில் பிரசாதம் சாப்பிட்டது போல் இருந்தது.நன்றி ஐயா!!

புளியோதரைக்கு புளிக்காய்ச்சலை முதல்நாள் இரவே செய்துவைக்கவேண்டும்.மறுநாள் காலையில் பாத்திரத்தை திறக்கும் போது கெம்மென்று வாசனை வந்தால் புளிக்காய்ச்சல் சரியாக செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஒரிஜினல் ரெசிபியில் முந்திரி சேர்க்க  சொல்லியிருந்தாங்க,நான் அதற்கு பதில் வேர்க்கடலை சேர்த்து செய்தேன்.மேலும் இதில் காரத்திற்கு மிளகினை ப்ரெஷ்ஷாக பொடித்து நல்லெண்ணெயில் குழைத்து சாதத்தில் கலக்கவேண்டும்.

இப்போழுது செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 3 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சாதத்தில் கலக்க
பொடித்த மிளகு - 2 டேபிள்ஸ்பூன்

புளிகாய்ச்சல் செய்ய

கெட்டியான புளிகரைசல் - 1 கப்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
வேர்க்கடலை - 1 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு+வெந்தயம்+சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
 *பின் வேர்க்கடலை+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
 *கெடியான புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
 *பச்சை வாசனை அடங்கி குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
 *மறுநாள் காலையில் சாதத்தை வடித்து ஆறவைத்து நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

*சிறிது புளிகாய்ச்சலை சேர்க்கவும்.
 *பொடித்த மிளகினை சிறிது எண்ணெயில் கலந்து சேர்க்கவும்.நான் அப்படியே மிளகினை சேர்த்து விட்டேன்.
 *அனைத்தையும் ஒன்றாக நன்கு கிளறவும்.
*சுவையான புளிகாய்ச்சல் ரெடி!!
Wednesday, 27 August 2014 | By: Menaga Sathia

கொழுக்கட்டை மாவு பிள்ளையார் / HOMEMADE KOZHUKATTAI FLOUR GANESH | VINAYAGAR CHATHURTHI RECIPES

 அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு ரெடியாகிட்டு இருப்பீங்க நினைக்கிறேன்.ஊரில் அம்மா களிமண் பிள்ளையார் வாங்கி ,அபிஷேகம் செய்து மதியம் சாம்பார்,வறுவல்,வடை, பாயாசம்,கொழுக்கட்டை,சுண்டல்  என படையல் செய்வாங்க..

மாலையில் ஏதாவது நைவேத்தியம் செய்வாங்க.இதே பிள்ளையாரை நீரில் கரைக்கும் வரை இருவேளையும் நைவேத்தியம் செய்து படைப்பாங்க.

இங்க நான் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அம்மா செய்வது போல் செய்வேன்,போன வருடம் சித்ராவின் ப்ளாகில் இந்த கொழுக்கட்டை மாவு பிள்ளையார் பார்த்து செய்தேன்.

ஏதோ ஒரளவிற்கு ஒழுங்காக வந்தது.இப்போ எப்படி செய்வதுன்னு  பார்க்கலாம்

தே.பொருட்கள்

அரிசி மாவு - 1/2 கப்
நீர் - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது

செய்முறை

*கொதிநீரில் உப்பு+எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

 *நீர் கொதித்ததும் மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியால் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
 *ஒரு பெரிய அளவில் மாவை எடுத்து படத்தில் உள்ளவாரு உருளை வடிவில் நீளமாக உருட்டவும்.
 *பின் 2 பக்கமும்  மெலிதாக அழுத்தினால் காது போல வரும்.
 *காது வைத்த பின் முக உருவம் கிடைக்கும் அப்படியே நீளமாக அழுத்தி வலது அல்லது இடது பக்கமாக வளைத்தால் தும்பிக்கை ரெடி.
 *சிறிய அளவில் மாவு எடுத்து காலாக செய்து அழுத்தி ஒட்டவும்.
 *பின் கை செய்து நன்கு அழுத்தவும்.
 *மிளகினை எடுத்து கண்களாக பயன்படுத்தவும்.
*இப்போ பிள்ளையார் ரெடி.விருப்பம் போல அலங்காரம் செய்ய வேண்டியதுதான்.

*மீதி இருக்கும் மாவில் அம்மிணி கொழுக்கட்டை அல்லது பால் கொழுக்கட்டை செய்யலாம்.

பி.கு

*நான் பயன்படுத்தியிருப்பது சிவப்பரிசி மாவு.

*இந்த பிள்ளையாரை படைக்கும் சிறிது நேரத்திற்கு முன் தயார் செய்யவும்.

*4 - 5 மணிநேரம் தான் பிள்ளையார் உருவம் சரியாக இருக்கும்,மாவு காய தொடங்கியபின் கை,கால் பகுதி உதிர ஆரம்பிக்கும்.
Monday, 25 August 2014 | By: Menaga Sathia

அப்பம் / SWEET APPAM | VINAYAGAR CHATHURTHI RECIPES

அப்பத்திற்க்கு மாவினை கரைத்ததும் ஊற்றக்கூடாது.மாலையில் சுடுவதாக இருந்தால் காலையிலேயே மாவினை கரைத்து வைத்து மாலையில் ஊற்றவேண்டும்.

காலையில் ஊற்றுவதாக இருந்தால் முதல்நாள் இரவே மாவினை கரைத்து வைக்கவும்.இப்படி செய்வது அப்பம் மிக மிருதுவாக இருக்கும்.

தே.பொருட்கள்
கோதுமை மாவு -1/2 கப்
மைதா மாவு - 1/4 கப்+1/8 கப்
வெல்லம் -1/2 கப்
கனிந்த வாழைப்பழம் -1
பேக்கிங் சோடா+உப்பு  - தலா 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
நெய் - சுடுவதற்கு

செய்முறை

*வெல்லத்தில் முழ்குமளவு நீர்விட்டு கரைத்து வடிகட்டவும்.

* பாத்திரத்தில் வெல்லம்+நெய் தவிர அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
 *வெல்லநீரை சேர்க்கவும்.பின் தேவைக்கு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
 *மாலையில் மாவு லேசாக பொங்கி இருக்கும்.
 *குழிபனியார கல்லில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
 *கரண்டியால் மாவினை எடுத்து ஊற்றவும்.
 *5 நிமிடம் கழித்து மறுபக்கம் திருப்பி நெய் ஊற்றி வேகவைக்கவும்.
*2 பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
Thursday, 21 August 2014 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் கேசர் பேடா / MICROWAVE KESAR PEDA WITH INSTANT KHOYA | MICROWAVE RECIPES


print this page PRINT IT

தயாரிக்கும் நேரம் : 7 நிமிடங்கள்

தே.பொருட்கள்

இன்ஸ்டன்ட் கோவா - 1/2  கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
வெதுவெதுப்பான பால் - 2 டீஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
பிஸ்தா துண்டுகள் - அலங்கரிக்க

செய்முறை

* பால் பவுடரில் இங்கு கொடுக்கபட்டுள்ள செய்முறையில் மைக்ரோவேவில் கோவா தயாரித்துக் கொள்ளவும்.

*பாலில் குங்குமப்பூவை கரைக்கவும்.

 *குங்குமப்பூ பாலை கோவாவில் கலந்து மேலும் 1 நிமிடம் ஹையில் மைக்ரோவேவில் வைக்கவும்.
 *இப்போழுது கோவா டிரையாக இருக்கும்.இதனை ஆறவிடவும்.
 *ஆறியதும் பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறவும்.
 *கையில் நெய் தடவி சிறு உருண்டையாக உருட்டி சிறிது பிஸ்தா துண்டுகளை நடுவில் வைத்து அழுத்தவும்.
பி.கு

*கோவா சூடாக இருக்கும் போது சர்க்கரை சேர்க்ககூடாது.

*இதையே அடுப்பில் வைத்து செய்வதாக இருந்தால் கோவாவை கைவிடாமல் கிளறி செய்யவும்.
Tuesday, 19 August 2014 | By: Menaga Sathia

வேகன் கோதுமை ப்ரெட் / No Knead Light Wheat Bread | Vegan No Knead Wheat Bread | Bread Recipes

  ப்ரியாவிடம்பேசியபோது  பேக்கிங் பற்றிய டிப்ஸ்களை சொன்னபோது அதன்படி இந்த ப்ரெட் செய்ததில் நன்றாக வந்தது.நன்றி ப்ரியா !!

பொதுவாக ஈஸ்ட் சேர்த்து செய்யும் குறிப்பில் மாவினை வெப்பமான இடத்தில் வைத்து 2 - 3 முறை அதற்கு ப்ரூப் கொடுக்கவேண்டும்.எவ்வளவுக்கு அதிகமாக ஈஸ்ட்டிற்கு ப்ரூப் கொடுக்கிறமோ அவ்வளவுக்கு ப்ரெட் நன்றாக சாப்ட்டாக இருக்கும்.

இன்ஸ்டன் ஈஸ்டாக இருந்தால் மாவில் அப்படியே சேர்த்து பிசையலாம்.ஆக்டிவ் ஈஸ்ட்டாக இருந்தால் வெதுப்பான நீரில் அதாவது நம் கைவிரல் பொறுக்கும் சூட்டில் நீர் இருக்கவேண்டும்.அதனுடன் எப்போழுதும் சர்க்கரை சேர்த்தால் தான் ஈஸ்ட் பொங்கி வரும்.

ஆனால் இந்த ப்ரெட்டில் அப்படி 2 -3 முரை ப்ரூப் செய்யத் தேவையில்லை.முதல்நாள் இரவே மாவினை தயாரித்து வெப்பமான இடத்தில் வைத்து மறுநாள் பேக் செய்யலாம்.

Recipe Source : Priyas Versatile Recipes

தே.பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
ப்ரெட் மாவு - 1 கப்
ஆக்டிவ் டிரை ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் ( I used Grapeseed Oil )

செய்முறை

* 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் + சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.

*பாத்திரத்தில் 2 வகை மாவுகள்+உப்பு+ஈஸ்ட் கலவை சேர்க்கவும்.தேவைக்கு நீர் சேர்த்து மாவினை தளர்த்தியாக பிசையவும்.

*கையில் என்ணெய் தடவி மாவின் மேல் தடவி க்ளியர் கவரால் மூடி வெப்பமான இடத்தில்  இரவு முழுவதும் வைக்கவும்.

 *மறுநாள் மாவு கலவை நன்கு பொங்கி இருக்கும்.
 *பொங்கிய மாவை நன்றாக பிசையவும்.

*ப்ரெட் பானில் எண்ணெய் / வெண்ணெய் தடவி வைக்கவும்.

*மாவினை இருமடிப்பாக மடித்து ப்ரெட் பானில் வைத்து அதன் மேல் எண்ணெய் தடவி கத்தியால் 3 கோடுகள் கீறவும்.

* அதனை மறுபடியும் க்ளியர் ராப் கவரில் மூடி 1 மணிநேரம் வெப்பமான இடத்தில் மாவு பொங்கும் வரை வைக்கவும்.
 *அவனை 180°C 15 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்,பின் ப்ரெட் பானை அவனில் வைத்து 50-55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
 *மேல் பாகம் வெந்து ப்ரவுன் கலரில் வந்தால் அலுமினியம் பாயில் கொண்டு மூடி பேக் செய்யவும்.
பி.கு

*இதில் மல்டிக்ரெயின் ஆட்டா உபயோகித்துள்ளேன். இதனை வெறும் கோதுமை மாவு அல்லது ப்ரெட் மாவு மட்டும் சேர்த்து செய்யலாம்.


Friday, 15 August 2014 | By: Menaga Sathia

பால்கோவா /Palkova | Thirattu Paal | Gokulastami Recipes


தே.பொருட்கள்

பால் -2 லிட்டர்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை- 3 டேபிள்ஸ்பூன்
நெய் -1 டீஸ்பூன்

செய்முறை

* பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
*சிறுதீயில் பால் தீய்ந்துவிடாமல் கரண்டியால் கிளறி விடவும்.
*பால் பாதி பாகம் வற்றி வரும் தயிர் சேர்க்கவும்.

*தயிர் சேர்த்ததும் பால் பனீர் மாதிரி திரிந்து இருக்கும்.

*அத்தண்ணியை மேலோடு எடுத்துவிடவும்,இல்லையெனில் தண்ணீர் வற்றும் வரை  கிளறவும்.


*அடிப்பிடிக்காமல் இருக்க நெய் சேர்த்து கிளறவும்.
*பின் சர்க்கரை சேர்த்து கரையும் வரை வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
*ஆறியதும் நன்கு உதிர்ந்து பொலபொலவெண இருக்கும்.

பி.கு

*இதில் தயிர் சேர்ப்பதற்கு பதில் சிறிதளவு படிகாரம்( Alum) பொடித்து சேர்க்கலாம்.

*பால்  வற்றி வரும் போது குறைந்ததீயில் செய்யவும்.
01 09 10