Monday, 31 August 2009 | By: Menaga Sathia

சோயா பொடிமாஸ்

தே.பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 25
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணேய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை :

*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் என்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை வதக்கவும்.

*பின் சோயா+கேரட் துறுவலை சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.

பி.கு:

இந்த பொடிமாஸ் சத்து நிறைந்தது.டயட்டில் இல்லாதவர்கள் தேங்காய்த்துறுவலையும் சேர்க்கலாம்.
Friday, 28 August 2009 | By: Menaga Sathia

மேலும் 3 விருதுகள்!!



திருமதி.கீதா ஆச்சல் எனக்கு மேலும் 3 விருது குடுத்து சந்தோஷப்படுத்தியிருக்காங்க.அவங்களுக்கு என் நன்றி!!நன்றி!!

இவ்விருதினை ஹர்ஷினி அம்மா,பாயிஷாகாதர் மற்றும் ப்ளாக் நண்பர்களுக்கு வழங்குகின்றேன்.

முட்டை வெஜ் பாஸ்தா

தே.பொருட்கள்:

பாஸ்தா - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 3
கேரட் - 1 சிறியது
உருளைக்கிழங்கு - 1 சிறியது
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளி இவைகளை பொடியாக கட் செய்யவும்.

*கேரட்+உருளையை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு சிறிது உப்பு+எண்ணெய் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

*வெந்ததும் வடிகட்டி குளிர்ந்தநீரில் அலசி வைக்கவும்.

*கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம்+தக்காளியை நன்கு மசிக்க வதக்கி காய்கள் அனைத்தையும் போட்டு குறைந்த தீயில் தண்ணீர் விடமால் வதக்கவும்.

*காய்கள் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து லேசா வதக்கவியபின் பாஸ்தாவை போட்டு கிளறவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.

*பின் முட்டையை ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.

*இப்போழுது சுவையான பாஸ்தா ரெடி.
Thursday, 27 August 2009 | By: Menaga Sathia

வாழைக்காய் வடை

தே.பொருட்கள்:

வாழைக்காய் -1 பெரியது
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லித்தழை - சிறிது
கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
அரிசிமவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:

*வாழைக்காயை தோலோடு கொதிக்கும் நீரில் வேகவைக்கவும்.

*வெந்ததும் தோலை நீக்கிவிட்டு மசிக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக அரிந்து வாழைக்காயோடு சேர்த்து மாவு வகைகளை உப்பு+சோம்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.

*பிசைந்த மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

பி.கு:

இந்த வடை ரொம்ப ஸாப்டாக இருக்கும்.அதுவும் மிளகாய் சாஸோடு சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

இந்த அளவில் 8 வடைகள் வந்தது.
Wednesday, 26 August 2009 | By: Menaga Sathia

TAG

Priya Raj has Tagged me for this wonderful questions.Thank u Priyaraj!!

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag

The Tag:

1. A – Available/Single? No

2. B – Best friend? My mother&Sister

3. C – Cake or Pie? Cake

4. D – Drink of choice? Grapes&oranges juices

5. E – Essential item you use every day? computer&books

6. F – Favorite color? Black& sky blue

7. G – Gummy Bears Or Worms? Gummy Worms

8. H – Hometown? Pondicherry

9. I – Indulgence? blogging&playing with my daughter

10. J – January or February? January

11. K – Kids & their names? One girl - Shivani

12. L – Life is incomplete without? my parents&aim

13. M – Marriage date? 20th Jan 2006

14. N – Number of siblings?3 Brothers& 1 Sister

15. O – Oranges or Apples? Oranges

16. P – Phobias/Fears?Dogs

17. Q – Quote for today? Always be happy

18. R – Reason to smile? My daughter & Tamil films jokes

19. S – Season? Spring&Summer

20. T – Tag 4 People? Kurai ondrum illai, Mrs.Faizakader ,sarusriraj,piriyamudan vasanth

21. U – Unknown fact about me? Unknown

22. V – Vegetable you don't like? I love all veggies

23. W – Worst habit? I believe others easily, so sensitive.

24. X – X-rays you've had? No

25. Y – Your favorite food?sambhar rice&pickle

26. Z – Zodiac sign?Capricorn

சௌசௌத் தோல் துவையல்

நாம் சாதரணமாக சௌசௌ (பெங்களூர் கத்திரிக்காய்) தோலை தூக்கிப் போடுவோம்,அப்படி செய்யாமல் துவையல் செய்து சாப்பிட்டால் நன்றாகயிருக்கும்.

தே.பொருட்கள்:

சௌசௌத் தோல் - ஒரு காயின் தோல்பகுதி மட்டும்.
உளுத்தம்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
வடகம் -1 டேபிள்ஸ்பூன்
புளி - 1 கொட்டைப்பாக்குளவு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு வருத்துக்கொள்ளவும்.

*சிறிது எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.

*மீதிருக்கும் எண்ணெயில் சௌசௌத் தோல்+தேங்காய்த்துருவல்+கறிவேப்பில்லை+காய்ந்த மிளகாயை வதக்கவும்.

*ஆறியதும் அனைத்தையும் உப்பு+புளி சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக நீர் சேர்த்து மைய கெட்டியாக அரைக்கவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து நன்கு வதக்கி ஆறவைத்து பயன்படுத்தவும்.
Tuesday, 25 August 2009 | By: Menaga Sathia

ரவை புட்டு

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
ஏலக்காய் -2
உப்பு - 1சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை :

*ரவையை சிறிது நெய்விட்டு பிசிறி கடாயில் வறுக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*உப்பு கரைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறி ஆவியில் வேகவிடவும்.

*வெந்ததும் நெய் தொட்டு கையால் கட்டியில்லாமல் உதிர்த்து ஏலக்காய்ப்பொடி+சர்க்கரை+தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பி.கு:

இந்த புட்டு செய்வது மிகவும் எளிது.விருப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.
01 09 10