தே.பொருட்கள்:துவரம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புளி - 1கோலிகுண்டளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 15
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:*பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து,அதனுடன் வெந்தயம்+மஞ்சள்தூள்+பூண்டு+தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.புளியை 1/4 கப் அளவில் கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசல்+உப்பு+வெந்த பருப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.









