Thursday, 1 April 2010 | By: Menaga Sathia

பச்சை சுண்டைக்காய் சூப்

சுண்டைக்காய் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள்,அழியும்.குடற்புண்களை ஆற்றும்.இந்த சூப் கொஞ்சம் கூட கசப்பே இருக்காது.
 
தே.பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய் - 1 கப்
பாசிபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
குரூட்டன்ஸ் - அலங்காரத்துக்கு
 
செய்முறை :

*சுண்டைக்காயை சிறிது பட்டரில் லேசாக வதக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+உப்பு+மீதமுள்ள பட்டர்+பாசிபருப்பு+2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

*ஆறியதும் அரைத்து மிளகுத்தூள்+குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.

*குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்...

Wednesday, 31 March 2010 | By: Menaga Sathia

சோயா மஞ்சூரியன்/ Soya Manchurian

தே.பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 30
மைதா மாவு - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
புட் கலர் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.

*அதனுடன் உப்பு+மைதா மாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+புட் கலர்+மிளகாய்த்தூள் அனைத்தும் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் சேர்த்து வதக்கி பொரித்த சோயா உருண்டைகள்+சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
Tuesday, 30 March 2010 | By: Menaga Sathia

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ

தே.பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழம் - 8
பால் - 1/2 கப்
வெனிலா (அ) ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்

செய்முறை:

*ஸ்ட்ராபெர்ரியை பாலுடன் முதலில் ப்ளெண்டரில் அடிக்கவும்.

*பின் தயிர்+ஐஸ்க்ரீம் சேர்த்து அடித்து பருகவும்.

பி.கு:
மேலும் இனிப்பு விரும்புபவர்கள் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

Monday, 29 March 2010 | By: Menaga Sathia

பூசணிக்காய் சூப்

தே.பொருட்கள்:
மஞ்சள் பூசணிக்காய் துண்டுகள் - 1 கப்
அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 2
அரிந்த தக்காளி - 1
பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் துண்டுகள் -1/4 கப்
காய் வேகவைத்த நீர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*பூசணி+வெங்காயம்+பூண்டு+தக்காளி+காய் வேக வைத்த நீர்+1 கப் நீர்+உப்பு+சிறிது பட்டர் சேர்த்து நன்கு வேக வைத்து அரைக்கவும்.

*மீதமுள்ள பட்டரில் ப்ரெட் துண்டுகளை பொரிக்கவும்.

*அரைத்த கலவையில் மிளகுத்தூள் சேர்த்து ப்ரெட் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
Sunday, 28 March 2010 | By: Menaga Sathia

வாத்துகறி குழம்பு


வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது.அதனை தோலுடன் தான் சமைக்கனும்.அப்போதான் நல்லாயிருக்கும்.சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும்.
 
தே.பொருட்கள்:

வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
 
செய்முறை :

*வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

*புளிகரைசலில் கறி+உரித்த முழுப்பூண்டுபற்கள் + மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைத்து,அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.

*வடகம்+தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகுத்தூள் என் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இந்த குழும்பு புளிப்பாக இருந்தால் தான் நன்றாகயிருக்கும்.அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.
Saturday, 27 March 2010 | By: Menaga Sathia

இது அவார்டு வாரம்


நிதுபாலா அவர்கள் எனக்கு நிறைய விருதினை கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு என் நன்றி!!


This award comes with a set of rules:
a) I must brag about it.
b) I have to display the badge on my blog and link to the one who tagged me to prove that I didn't tag myself (how pathetic that would be!)
c) Pass the award to other fellow bloggers by visiting their site.

இந்த விருதினை தேனம்மை லக்‌ஷ்மணன்,கீதா ஆச்சல்,ப்ரியா,பவித்ரா,சித்ரா,மாதேவி,அனு,தெய்வசுகந்தி,பவித்ரா (பெங்களூரு),வானதி,மகி,பத்மா,ஷாமா நாகராஜன் இவர்களுக்கு கொடுக்கிறேன்...
Friday, 26 March 2010 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சிப்ஸ்(அவன் செய்முறை)/ Eggplant (Brinjal) Chips

தே.பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
அரிசிமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*கத்திரிக்காயை வட்டமாக நறுக்கி மேற்கூறிய பொருளில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்து,அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி கத்திரிக்காய் வைத்து ஆயில் ஸ்ப்ரே செய்யவும்.

*அவனில் 10 நிமிடம் வைத்து மறுபுறம் திருப்பி ஆயில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*சுவையான சிப்ஸ் தயார்!!
01 09 10