Monday 27 September 2010 | By: Menaga Sathia

அருநெல்லிக்காய் சாதம்

தே.பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் ‍‍‍‍-1 கப்
சின்ன வெங்காயம் -10
அருநெல்லிக்காய்- 4
வேர்க்கடலை-1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
கறிவேப்பிலை -சிறிது
கடலைப்பருப்பு -1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*வெங்காயத்தை நறுக்கவும்.நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேர்க்கடலையை வறுக்கவும்.
*பின் வெங்காயம்+துருவிய நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*நெல்லிக்காய் நன்கு வெந்த பின்(நீர் ஊற்றக்கூடாது,நெல்லிக்காய் விடும் நீரிலயே வேகும்)ஆறவைத்து உப்பு+சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்.

பி.கு:
இந்த சாதம் எலுமிச்சை சாதம் போல் இருக்கும்.

30 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

super recipee akkaa

Priya Suresh said...

Nellikaai sadham paathathume pasikuthu, intha sadham saapitu romba naal achu, yenga ammava nabagam padutha vachitinga Menaga, avangaloda special rice ithu..

துளசி கோபால் said...

படத்துலே முழு நெல்லிக்காய் இருக்கு!!!!

அரை முழுசாயிருச்சா:-)))))

Krishnaveni said...

my fav rice, super delicious and yummy

எல் கே said...

சத்தான சமையல்

தெய்வசுகந்தி said...

நல்ல ரெசிபி மேனகா!

Asiya Omar said...

நெல்லிக்காய் சாதம் அருமை.பெரிய நெல்லிக்காய் தானே இது?

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு. இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கனும்.

ஸாதிகா said...

மேனகா.,ஸ்ஸ்ஸ்..ஸ்ப்பா...எதனையும் விட்டு வைக்கமாட்டீரகள் போல் இருக்கு!அருநெல்லிக்காயில் சாதம்..பேஷ்..பேஷ்

Jaleela Kamal said...

நெல்லிக்காய் சாதம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு இருக்கு

சசிகுமார் said...

அக்கா சத்தான சமையலை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல

நட்புடன் ஜமால் said...

அரு நெல்லி என்பது அறை நெல்லி என்று சொல்லுவோமே அதுவா!!!

தயிர் சாதம் லுக்கு இருக்கு

Chef.Palani Murugan, said...

ஆரோக்கியமான உணவு.

துளசி கோபால் said...

ஜமால்,

நெல்லியைக் கையில் பிடிக்க முடிஞ்சா 'அறை' விடுங்க:-)))))

'பரிவை' சே.குமார் said...

super recipee akkaa.

Unknown said...

ஆரோக்கியமான சாதமாக இருக்கே

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

துளசி,ஏங்க அறை விடணும்..அது அரு நெல்லிக்காய்தான்..அதாவது ருசியில் அருமையான நெல்லிக்காய்...

துளசி கோபால் said...

அறிவன்,

நம்ம ஜமால்தான் அறைன்னுட்டார்:-)

Menaga Sathia said...

நன்றி புதிய மனிதா!!

நன்றி ப்ரியா!!உங்க அம்மாவை ஞாபகபடுத்திட்டேனா,அப்புறமென்ன உடனே செய்து அசத்துங்க..

//அரை முழுசாயிருச்சா:-)))))// துளசிக்கா புரியலையே..

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ஆசியாக்கா!! ஆமாம் அது பெரிய நெல்லிக்காய்தான் அக்கா..

நன்றி புவனேஸ்வரி!! செய்து பாருங்கள்...

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சசி!!

நன்றி சகோ!!//அரு நெல்லி என்பது அறை நெல்லி என்று சொல்லுவோமே அதுவா!!!// அறை நெல்லிக்காய் என்று சொல்லுவாங்களான்னு தெரியாது..ஆனா நாங்க இதை பெரிய நெல்லிகாய் அல்லது அருநெல்லிக்காய்ன்னு சொல்லுவோம் சகோ..

Menaga Sathia said...

நன்றி செஃப்!!

துளசிக்கா ஏதோ ஜமால் அண்ணா கைதவறி டைப் செய்துட்டுருப்பார்..

நன்றி சகோ!!

நன்றி சிநேகிதி!!

Menaga Sathia said...

தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி அறிவன்!!நான்கூட நாம தான் தப்பா பெயரை எழுதிட்டோம்னு நினைச்சுட்டேன்..

துளசி கோபால் said...

அச்சச்சோ.......... பெரிய நெல்லிக்காயையா அருநெல்லிக்காய்ன்னு சொல்வீங்க!!!!

நாங்க அருநெல்லிக்காய்ன்னு சொல்றது வேற வகைப்பா. சின்னதா இருக்கும். அதுக்கு பூசணிக்காயிலே இருப்பதுபோல் ரிட்ஜஸ் இருக்கும்.

Shanthi Krishnakumar said...

Nandraaga ulladhu. Healthy too

Suni said...

Nice dish. Good for health

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

vanathy said...

very nice recipe.

Menaga Sathia said...

ஓ,துளசிக்கா நீங்கள் சொல்வது சின்ன நெல்லிகாய் என்று நினைக்கிறேன்..அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

நன்றி சாந்தி!!

நன்றி சுனிதா!!

நன்றி வானதி!!

துளசி கோபால் said...

ஆமாம்ப்பா. அந்த சின்ன நெல்லிக்காயைத்தான் அருநெல்லிக்காய்ன்னு சொல்வோம்.

பெயர் குழப்பத்தால் எத்தனை பின்னூட்ஸ் பாருங்க:-))))

Menaga Sathia said...

ஓஹோ ஆமாம் துளசிக்கா பெயர் குழப்பதால் பாருங்க..ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் போல...

01 09 10